மேலும் அறிய

Sankarankovil:15 ஆண்டுகளுக்கு பின் அதிமுகவிடமிருந்து சங்கரன்கோவில் நகராட்சியை கைப்பற்றியது திமுக

திமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் வெற்றி பெற்றார். இதனால் அதிமுக வசமிருந்த சங்கரன்கோவில் நகராட்சி 15 ஆண்டுகள் பின் குலுக்கல் முறையில் திமுக வசமானது.

தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் மாநகராட்சி மேயர், நகர் மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வந்தது. நடந்து முடிந்த நகர்மன்ற உறுப்பினர் தேர்தலில் சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் அதிமுக 12, திமுக 9, மதிமுக 2, காங்கிரஸ் 1, எஸ்டிபிஐ 1, சுயேட்சை 5 என்ற நிலையில் வெற்றி பெற்றிருந்தனர். அதிமுக தனித்து போட்டியிட்டு 12 வார்டுகளையும், திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 12 வார்டுகளையும் கைப்பற்றியிருந்தது. மீதமுள்ள சுயேட்சை வேட்பாளர்களே வெற்றியை நிர்ணயிக்கும் இடத்தில் இருந்தனர்.


Sankarankovil:15 ஆண்டுகளுக்கு பின் அதிமுகவிடமிருந்து சங்கரன்கோவில் நகராட்சியை கைப்பற்றியது திமுக

இதற்கிடையில் 5 சுயேட்சை வேட்பாளர்களும் திமுக மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், நகர்மன்ற தலைவர் வேட்பாளராக திமுக சார்பில் 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரியும், அதிமுக சார்பில் 4வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் முத்து லட்சுமியும் போட்டியிட்டனர். இதையெடுத்து,  திடீர் திருப்பமாக இருவரும் 15/15  என்ற சமமான வாக்குகளைப் பெற்றனர். இதனால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு  நடத்தப்பட்டது. குலுக்கலில் திமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் வெற்றி பெற்றார். இதனால் அதிமுக வசமிருந்த சங்கரன்கோவில் நகராட்சி 15 ஆண்டுகள் பின் குலுக்கல் முறையில் திமுக வசமானது.

இதே போன்று 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவின் கோட்டையாக இருந்த சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியும், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வசமானது குறிப்பிடதக்கது. சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி வெற்றி பெற்றதால் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா திமுக தொண்டர்களுடன் நேரில் சந்தித்து  அவருக்கு வாழ்த்துக்களைக் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget