மேலும் அறிய

Lok Sabha Elections 2024: நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பாஜகவினர் புகார் மனு

திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து ஒவ்வொரு வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்து வருகிறார்கள் - பாஜக புகார்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்  நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனையொட்டி  பரப்புரை செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் இறுதி கட்ட பரப்புரையில்  அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்ந்த உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர்ச்சியாக பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளராக போட்டியிடும் ராபர்ட் ப்ரூஸ்க்கு ஆதரவாக உள்ளவர்கள் வீடுகளுக்கும் மேலும் திமுகவினர் வீடுகளுக்கும் பறக்கும் படையினர் எந்தவித சோதனை மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் பணப்பட்டு வாடா செய்து வருவது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவருமான  கார்த்திகேயன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கார்த்திகேயன் தேர்தல் சம்பந்தமாக ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான கார்த்திகேயனை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனு கொடுத்தனர். அதில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகும். காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.  மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் கள் புகார் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணமூர்த்திகூறும் போது, "தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்ந்தவர்களை மட்டுமே பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீது தொடர்ந்து பண பட்டுவாடா செய்வது தொடர்பாக புகார் கொடுத்தும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறார். மேலும் மானூர் ஒன்றிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதனை திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து ஒவ்வொரு வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்து வருகிறார்கள். பாலஸ்தினபுரம் அருகில் வாக்காளருக்கு பணப்பட்டுவடா செய்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு நபர்களை பறக்கும் படையினர் பிடித்துள்ளனர். இதுபோல தொடர்ந்து திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குள் பண பட்டுவாடா செய்வதை தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் மற்றும் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget