மேலும் அறிய

Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?

Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ஆந்திர சட்டமன்ற தேர்தல்:

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதிகளும், ஆந்திராவைச் சேர்ந்த 25 மக்களவை தொகுதிகளும் அடங்கும். அதோடு, ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இன்று ஆந்திர சட்டசபைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, ஜுன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. 

ஜெகன் Vs சந்திரபாபு நாயுடு:

தற்போதய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பாஜக மற்றும் பவன் கல்யான் தலைமையிலான ஜனசேனா ஆகிய கட்சிகளும் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.  2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு,  ஆந்திரப் பிரதேசம் பெரும்பாலும் மாநிலக் கட்சிகளான தெலுங்கு தேசம் (டிடிபி) மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இடையேயான போர்க்களமாகவே மாறியுள்ளது.

அங்கு கோலோச்சி வந்த காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய முதலமைச்சரான கெஜன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா தலைமையில் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால், முந்தைய தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

பாஜக தடம் பதிக்குமா?

பாஜகவை பொறுத்தமட்டில் அக்கட்சிக்கு, ஆந்திராவில் வலுவான கட்டமைப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட அக்கட்சி வெறும் ஒரு சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளில் அந்த கட்சி மாநிலத்தில் ஆற்றிய களப்பணி மற்றும் சந்திரபாபு நாயுடு உடனான கூட்டணியின் மூலம், இந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என கருதப்படுகிறது. அதோடு, சட்டமன்ற மற்றும் மக்களவைக்கும் சில உறுப்பினர்களை பெறும் என கட்சி மேலிடம் வலுவாக நம்புகிறது.

தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்னைகள்:

வேலைவாய்ப்பின்மை மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்தும் இல்லாதது, போன்ற பிரச்னைகளை முக்கியப்புள்ளிகளாக கொண்டு சந்திரபாபு நாயுடு கூட்டணி ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், பெண்கள், SC/ST சமூகங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் மூலம், வாக்குகளை கவர்ந்து ஆட்சியை தக்க வைக்க ஜெகன் மோகன் திட்டமிட்டுள்ளார்.

மாநில தேர்தல் வரலாறு:

2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தெலுங்கு தேசம்- பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. அதன்படி, சட்டமன்றத்த்ல் இந்த கூட்டணி 106 இடங்களையும், மக்களவை தொகுதிகளில் 17 இடங்களையும் கைப்பற்றின. தொடர்ந்து 2019ம் ஆண்டு தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது.  மக்களவை தேர்தலில் 50 சதவிகித வாக்குகளுடன் 22 இடங்களை வென்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget