மேலும் அறிய

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் வித்யாரம்பம் நிகழ்வு - குழந்தைகள் அச்சரம் எழுதி கல்வியை தொடங்கி வழிபாடு

வித்யாரம்பம் நிகழ்வில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அரிச்சுவடி ஆரம்பம் என்ற கல்வியை தொடங்கிவைத்து வழிபட்டனர்.

விஜயதசமியை முன்னிட்டு மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மைதருவார் திருக்கோவிலில் வித்யாரம்பம் நிகழ்வு - ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து அச்சரம் எழுதி கல்வியை தொடங்கி வழிபாடு.
 
வித்யாரம்பம் நிகழ்வு
 
வித்யாரம்பம் பாரம்பரியமாக விஜயதசமி நாளில் கேரளம், தமிழ்நாடு, கடலோர கர்நாடகம் போன்ற பகுதிகளில் கொண்டாடப்படும் ஒரு சடங்கு. கல்வியை குழந்தைகள் முறையாக கற்க வேண்டும் என்று இந்த நாளில் இந்ந நிகழ்ச்சி நடப்பது வழக்கம். குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புற கலை போன்றவை கற்பிப்பது இந்த நாளில் துவங்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு எழுத்துக்களை கற்பிக்கும் முக்கியமான விழாவை உள்ளடக்கியது.
 
 
 
“அ” என்ற எழுத்தை எழுத செய்வது

தமிழ்நாட்டில் இதை முதல் எழுத்து என்றும் அழைக்கின்றனர். அதாவது குழந்தைகளுக்கு நெல்லில், அரிசியில், தானியத்தில் “அ” என்ற எழுத்தை எழுத செய்வது. ஒடிசாவில் இது காதி சுவான் என்று அழைக்கப்படுகிறது. அங்கு குறிப்பாக விநாயக சதுர்த்தி மற்றும் வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. வித்யாரம்பம் விழாவில் குழந்தைகள் அறிவு உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் என்பது நம்பிக்கை. அடிப்படையில் குழந்தைகளுக்கான சடங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கல்விச்சடங்கு குழந்தைகளை பாடத்திட்டத்தின் எழுத்துக்களில் முறையாக அறிமுகப்படுத்துகிறது. வித்யாரம்பம் விழா 2-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது.


இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் வித்யாரம்பம் நிகழ்வு -  குழந்தைகள் அச்சரம் எழுதி கல்வியை தொடங்கி வழிபாடு

இம்மையிலும் நன்மை தருவர் திருக்கோவிலில் வித்யாரம்பம்
 
இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்துவது தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்வானது மதுரையிலுள்ள பிரசித்தபெற்ற இம்மையிலும் நன்மை தருவர் திருக்கோவிலில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் மதுரை மாநகரில் உள்ள அண்ணாநகர், கே.கே.நகர், தெற்குவாசல், டி.வி.எஸ்.,நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கோவிலுக்கு வருகை தந்து அங்கு நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்வில் கலந்துகொண்டனர். ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி தேவியை வணங்கி மரியாதை செய்யும் வகையில் வழிபாடு நடத்தினர். தொடர்ச்சியாக ஓம் என்ற பக்தி முழக்கத்தோடு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி தங்களின் கல்வியை தொடங்கிவைத்தனர். பின்னர் குழந்தைகளின் கையை பிடித்துஞ பரப்பி வைத்திருக்கும் பச்சரிசியில் குழந்தைகள் தமிழெழுத்தை ஆரம்பிக்கும்போது '' என்று எழுதினா். இதேபோன்று பல்வேறு தாய்மொழிகளை கொண்டவர்களும் அவர்களது தாய் மொழிகளில் அ எழுதி தொடங்கினர்.

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் வித்யாரம்பம் நிகழ்வு -  குழந்தைகள் அச்சரம் எழுதி கல்வியை தொடங்கி வழிபாடு
 
அரிச்சுவடி ஆரம்பம்
 
தொடர்ந்து தங்களது குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்கவும், வாழ்க்கை மேம்படவும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட ஏராளமான குழந்தைகள் உற்சாகமுடன் தங்களது கல்வியை தொடங்குவதை புன்னகையுடன் தொடங்கினர். இதனை தொடர்ந்து குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த பாடல்கள், பாடங்களை தங்களது பெற்றோர்களிடம் எடுத்து கூறினர். வித்யாரம்பம் முடித்த பின்னர் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து வருகை தந்த பக்தர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் பிரசாதமும் வழங்கப்பட்டது. இதுபோன்று மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்வில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அரிச்சுவடி ஆரம்பம் என்ற கல்வியை தொடங்கிவைத்து வழிபட்டனர்.
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.