மேலும் அறிய

Smartphone Ban: பள்ளிகளில் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு உலகளாவிய தடை: யுனெஸ்கோ அதிரடி

பள்ளிகளில் ஸ்மார்ட் போன்களுக்கு உலகளாவிய அளவில் தடை விதிக்க வேண்டும் என்று உலக நாடுகளிடம் யுனெஸ்கோ வலியுறுத்தி உள்ளது.

பள்ளிகளில் ஸ்மார்ட் போன்களுக்கு உலகளாவிய அளவில் தடை விதிக்க வேண்டும் என்று உலக நாடுகளிடம் யுனெஸ்கோ வலியுறுத்தி உள்ளது.

அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு, யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கை (Global Education Monitoring Report 2023) வெளியிடப்பட்டது.

குறிப்பாக ‘Technology in Education: A Tool on Whose Terms’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், பள்ளிகளில் ஸ்மார்ட் போன்களுக்கு உலகளாவிய அளவில் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

’’தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி, கற்றலை மேம்படுத்தவில்லை. மாறாக மாணவர்களின் நல் வாழ்வை மோசமாக்குகிறது. மொபைல் சாதனங்கள் மாணவர்களை திசை திருப்புகின்றன; 14 நாடுகளில் கற்றலில் மோசமான அனுபவத்தை உருவாக்குகின்றன. எனினும் 4 நாடுகளுக்கு ஒரு நாட்டுக்கும் குறைவாகவே பள்ளிகளில் ஸ்மார்ட் போன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.  


Smartphone Ban: பள்ளிகளில் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு உலகளாவிய தடை: யுனெஸ்கோ அதிரடி 

 

மாணவர்கள் குறிப்பாக 2 முதல்17 வயது உடைய நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், "அதிக நேரம் திரையிலேயே செலவிடுவது (higher screen time) அவர்களின் நல்வாழ்வைக் குறைக்கிறது. குறைவான ஆர்வம், சுய கட்டுப்பாட்டை உண்டாக்குகிறது. நிலையில்லாத உணர்ச்சிகளை உருவாக்குகிறது. அதிக கவலையையும் மனச்சோர்வையும் ஏற்படுத்துகிறது" என்று கண்டறியப்பட்டது. 

கற்றல் திறனை மேம்படுத்தும்

பள்ளிகளில் மொபைல் போன்கள் தடை செய்யப்படுவது பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்தும். குறிப்பாக குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம், ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மனிதர்கள் மீது ஆளுமை செலுத்தக்கூடாது. இதில் மானுடர்களை மையப்படுத்திய பார்வை வேண்டும். 

 

கல்வி நிறுவனங்களில் தகவல் கசியும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 16 சதவீத நாடுகள் மட்டுமே வகுப்பறையில், தகவல் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. ஏராளமான தகவல்கள் முறையான வழிமுறைகள் இல்லாமல் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். இதனால் மாணவர்களின் தகவல்கள் கல்வி தவிர்த்த பிற காரணங்களுக்காகவும், பொழுதுபோக்கு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவை உரிமை மீறலாகும். இது சரிசெய்யப்பட வேண்டும். 

கற்றலைக் கைவிட்ட 50 கோடி பேர்

ஆன்லைன் கற்றலால் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததுதான். கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில், ஆன்லைன் மட்டுமே கொண்ட கற்பித்தல் முறையால், சுமார் 50 கோடி மாணவர்கள் உலகளாவிய அளவில் கற்றலைக் கைவிட்டனர். 

இந்த நிலையில் உலக நாட்கள், தொழில்நுட்பத்தைக் கல்வியில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தாங்களாகவே விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அந்தக் கற்றல், மனிதர்களுக்குப் பதில் கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்களை முதன்மைப்படுத்திய கற்றலாக இருக்க வேண்டும்.  

இவ்வாறு யுனெஸ்கோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே! நடப்புத் தேர்விலேயே 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்குத் தேர்வர்கள் கண்ணீர் கோரிக்கை!
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே! நடப்புத் தேர்விலேயே 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்குத் தேர்வர்கள் கண்ணீர் கோரிக்கை!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
New Renault Kwid: ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ-க்கு கிளம்பிய பீதி; CNG ஆப்ஷனுடன் மாஸ் காட்டும் ரெனால்ட் க்விட்; செம போட்டி.!
ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ-க்கு கிளம்பிய பீதி; CNG ஆப்ஷனுடன் மாஸ் காட்டும் ரெனால்ட் க்விட்; செம போட்டி.!
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
Embed widget