மேலும் அறிய

TNPSC New Update : தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

தேர்வர்கள் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போதே, உரிய சான்றிதழ்கள் அனைத்தையும் பிடிஎஃப் வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தேர்வர்கள் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போதே, உரிய சான்றிதழ்கள் அனைத்தையும் பிடிஎஃப் வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. எழுத்துத்‌ தேர்விற்குப்‌ பின்னர்‌
சான்றிதழ்‌ பதிவேற்றம்‌ செய்வது தொடர்பாக தனியாக எந்த அறிவிப்பும்‌ தேர்வாணையத்தால்‌ அனுப்பப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு முடிவுகளைத்‌ துரிதப்படுத்தும்பொருட்டு, தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ குரூப் 1, 2 மற்றும் ‌4 பணிகளில்‌ அடங்கிய பதவிகள்‌ நீங்கலாக மற்றைய அனைத்து நேரடி நியமனங்களுக்கான பதவிகளுக்கும்‌ இணைய வழியில்‌ விண்ணப்பம்‌ செய்வதில்‌ புதிய நடைமுறை தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ செயல்படுத்தப்பட உள்ளது. 

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி. உமா மகேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விண்ணப்பதாரர்கள்‌ இணைய வழியில்‌ விண்ணப்பம்‌ சமர்ப்பிக்கும்பொழுதே, அவர்களால்‌ இணையவழி விண்ணப்பத்தில்‌ அளிக்கப்பட்டுள்ள தகவல்கள்‌ / உரிமை கோரல்களுக்குஆதாரமான அனைத்துத்‌ தேவையான சான்றிதழ்களையும்‌ இணைய வழிவிண்ணப்பத்துடன்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.

விண்ணப்பதாரர்‌ இணைய வழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும்பொழுதே, அனைத்து ஆதார சான்றிதழ்களையும்‌ ஆவணங்களையும்‌ PDF வடிவத்தில்‌ அதாவது (ஒன்று அல்லது பல பக்கங்கள்‌ கொண்ட) 200 KBக்கு மிகாமல்‌ உள்ள ஒரு பிடிஎஃப் ஆவணமாக ஒவ்வொரு உரிமை கோரலுக்கும்‌ ஆதாரமாகக்‌ கட்டாயம்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.

பதிவேற்றம்‌ செய்யப்படவேண்டிய ஆவணங்கள்‌/ சான்றிதழ்கள்‌ குறித்த தகவல்கள்‌ நோடி நியமனங்களுக்காக தேர்வாணையத்தால்‌ வெளியிடப்படும்‌ அறிவிக்கைகளில்‌ காணப்‌ பெறலாம்‌.

விண்ணப்பதாரர்‌ இசேவை மையங்கள்‌ உள்ளிட்ட அனைத்து வழிகளிலும்‌ சான்றிதழ்களைப்‌ பதிவேற்றம்‌ செய்ய வழிவகை செய்யப்பட்‌ டுள்ளது.

Also Read | Group 4 Exam Date: ஜுலை 24-ஆம் தேதி குரூப்-4 தேர்வு.. எப்படி விண்ணப்பிக்கவேண்டும்? என்ன மாற்றங்கள்?

விண்ணப்பதாரர்‌ தேவையான சான்றிதழ்களை / ஆவணங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்து விண்ணப்பம்‌ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்‌. எனவே இனி வருங்காலங்களில்‌ இதேர்வாணையத்தின்‌ அறிவிக்கைகளின்‌ அடிப்படையில்‌ விண்ணப்பிக்க விரும்பும்‌ அனைத்துத்‌ தேர்வர்களும்‌ தங்களது சான்றிதழ்கள்‌ அனைத்தையும்‌ மேற்குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம்‌ செய்ய ஏதுவாக, முன்னரே ஸ்கேன் செய்து வைத்துக்‌ கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.


TNPSC New Update : தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்களை விண்ணப்பதாரர்‌ தங்களது ஒருமுறைப்‌ பதிவின்‌ மூலம்‌ சரிபார்த்துக்‌கொள்ளவும்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏதேனும்‌ சான்றிதழ்கள்‌ தவறாகப்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டிருந்தாலோ அல்லது பதிவேற்றம்‌ செய்யப்படாமல்‌ இருந்தாலோ விண்ணப்பதாரர்‌ விண்ணப்பித்திருந்த பதவிக்கான தேர்வு அனுமதிச்‌ சீட்டினை தேர்வாணைய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்படும்‌ நாளுக்கு இரண்டு நாள்கள்‌ முன்னர்‌ வரை (அதாவது தேர்வு நடைபெற உள்ள தேதிக்கு 12 நாள்கள்‌ முன்னர்‌ வரை) சான்றிதழ்களைப்‌ பதிவேற்றம்‌ செய்ய / மறு பதிவேற்றம்‌ செய்ய அனுமதிக்கப்படுவர்‌.

Also Read | Group 4 Exam Pattern: 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள்; குறைந்தபட்சம் 90 மார்க்- குரூப் 4 தேர்வு முறை எப்படி?

ஆவணங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட நாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ, தேவையான ஆதார ஆவணங்களைப்‌ (சரியாகவும்‌ , தெளிவாகவும்‌ , படிக்கக்கூடியதாகவும்‌) பதிவேற்றம்‌ செய்யாத விண்ணப்பதாரரின்‌ இணையவழி விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படும்‌.

எழுத்துத்‌ தேர்விற்குப்‌ பின்னர்‌ மேற்கொள்ளப்படும்‌ சான்றிதழ் ‌சரிபார்ப்புப்‌ பணியானது முற்றிலும்‌ விண்ணப்பதாரரால்‌ இணையவழியில்‌ விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌ / ஆவணங்களின்‌ அடிப்படையிலேயே அமையும்‌. எழுத்துத்‌ தேர்விற்குப்‌ பின்னர்‌
சான்றிதழ்‌ பதிவேற்றம்‌ செய்வது தொடர்பாக தனியாக எந்த அறிவிப்பும்‌ தேர்வாணையத்தால்‌ அனுப்பப்படமாட்டாது. எனவே, விண்ணப்பதாரர்கள்‌ சான்றிதழ்கள்‌, ஆவணங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்வதில்‌ அதிக அக்கறையுடனும்‌ எச்சரிக்கையுடனும்‌ இருக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

மேலும்‌, இது தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல்‌ விளக்கம்‌ தேவைப்படின்‌,  helpdesk@tnpscexams.in / grievance.tnpsc@tn.gov.in என்ற தேர்வாணையத்தின்‌ மின்னஞ்சல்‌ முகவரிக்கு அல்லது தேர்வாணையத்தின்‌ 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு (Toll free Number) அனைத்து வேலை நாட்களிலும்‌ காலை 10 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Neet Exam 2026: என்று தணியும் இந்த அச்சம்? நீட் பயத்தால் 4 நாட்களில் 4 மாணவர்கள் தற்கொலை!
Neet Exam 2026: என்று தணியும் இந்த அச்சம்? நீட் பயத்தால் 4 நாட்களில் 4 மாணவர்கள் தற்கொலை!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
Embed widget