மேலும் அறிய

குரூப் 4 தேர்வு தொடர்பாக கரூரில் ஆலோசனைக் கூட்டம் - என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும்?

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IVஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்  நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல்  தலைமையில் நடைபெற்றது.

 


குரூப் 4 தேர்வு தொடர்பாக கரூரில் ஆலோசனைக் கூட்டம் - என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும்?

 

 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்ததாவது: கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி - IV) எதிர்வரும் 09.06.2024 அன்று முற்பகல் மட்டும் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திலிருந்து வரப்பெறும் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் கரூர் மாவட்டத்தில் மாவட்ட கருவூலம் , அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் சார்நிலை கருவூலங்களில் வைக்கப்படவுள்ளது. மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலக பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், உரிய நேரத்தில் நடமாடும் குழுக்களுக்கு மேற்கண்ட தேர்வுப் பொருட்களை வழங்கவும், தேர்வு நடைபெறும் நாளன்று தேவையான பணியாளர்களுடன் தயாராக இருக்கவும் வேண்டும். பாதுகாப்பிற்காக தலா ஒரு தீயணைப்பு வண்டி மற்றும் மூன்று தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர்களை நியமனம் செய்திடவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 


குரூப் 4 தேர்வு தொடர்பாக கரூரில் ஆலோசனைக் கூட்டம் - என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும்?

 

தேர்வு நடைபெறும் நாளில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கிடுமாறும், தேர்வு நடைபெறும் நாளில் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்திற்கு சென்று சேர ஏதுவாக சிறப்புப் பேருந்து வசதிகளை எற்படுத்திடவும், சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், வெளிச்சம் மற்றும் மின்வசதி மற்றும் போதிய காற்றோட்ட வசதி போன்ற அனைத்து வசதிகளும் அனைத்து தேர்வு மையங்களில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தேர்வு நடத்த ஏதுவாக தேர்வு மையங்களுக்கு 99 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வாணையத்தில் இருந்து வரப்பெறும் வினா விடைத்தாள்கள் போதுமானதாக உள்ளதா என்பதனை சம்பந்தப்பட்ட முதன்மை கண்காணிப்பாளர்கள் சரிபார்த்துக் கொள்ளவும், அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறும் அறைகளுக்கு ஆசிரியர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்க வேண்டும். தேர்வு அறைகளில் ஒரு அறைக்கு 20 தேர்வர்கள் மட்டும் அமருமாறு நாற்காலிகள் அமைத்திடவும், தேர்வுக்கூடங்களுக்குள் எவ்விதமான மின்னணு கருவிகளும் கொண்டு வராமல் இருப்பதை உறுதி செய்திடவும், தேர்வு எழுதிட உதவி தேவைப்படக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய ஏற்பாடு செய்திடவும், மேற்கண்ட தேர்வர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கூடுதலாக 20 நிமிடங்கள் ஒதுக்கிடவும் முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிவு எண் மேசையின் மீது போடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திடவும் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 


குரூப் 4 தேர்வு தொடர்பாக கரூரில் ஆலோசனைக் கூட்டம் - என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும்?

 

தேர்வர்களின் வருகைப்பதிவு விவரத்தினை கைப்பேசி செயலி வாயிலாக காலை 10.30 மணிக்குள் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்திட வேண்டும். தேர்வு முடிந்த பின்னர் தேர்வு மையங்களில் இருந்து வரப்பெறும் விடைத்தாள்கள் மற்றும் பயன்படுத்தப்படாத வினாத்தாள்களை கருவூலங்களில் ஒப்படைக்கும் பணியினை உடன் இருந்து கண்காணித்திடவும், அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்ணைந்து பணியாற்றி சுமூகமான முறையில் தேர்வு நடைபெறுவதை உறுதி செய்திடவும் அனைத்து வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கரூர் மாவட்ட கருவூலம், அரவக்குறிச்சி / குளித்தலை/ கிருஷ்ணராயபுரம் / கடவூர் சார்நிலை கருவூலங்களில் வைக்கப்படும் வினாத்தாள்கள், விடைத்தாள்கள் மற்றும் இதர தேர்வு பொருட்களின் பாதுகாப்பு பணிக்காக 5 ஆயுதம் ஏந்திய காவலர்களையும், வினாத்தாள்கள், விடைத்தாள் மற்றும் இதர தேர்வு பொருட்களை சார்நிலை கருவூலங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லும் நடமாடும் குழுக்களின் (Mobile Unit) பாதுகாப்பு பணிக்காக 25 ஆயுதம் ஏந்திய காவலர்களையும், தேர்வு நடைபெறும் நாளில் தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிக்காக 99 ஆயுதம் ஏந்திய காவலர்களையும், நியமனம் செய்யப்பட உள்ளார் என மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி  உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget