மேலும் அறிய

TNPSC Group 4 Exam: கணிதம் கஷ்டமா? எந்தப் பகுதி எளிது? கட்-ஆஃப்... குரூப் 4 தேர்வு பற்றி தேர்வர்கள் கருத்து என்ன?

தமிழைப் பொறுத்தவரையில் அனைத்துக் கேள்விகளும் எளிதாக இருந்தன. பொது அறிவுப் பகுதி சுமாராக இருந்தது.

7,382 அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 21.8 லட்சம் மாணவர்கள் எழுதிய குரூப் 4 தேர்வில் கேள்விகள் எப்படிக் கேட்கப்பட்டிருந்தன என்பது பற்றித் தேர்வை எழுதியவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்று முடிந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்படவுள்ளது என்று கடந்த மார்ச் 29ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டன. மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.5 லட்சத்தைக் கடந்தது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர்.

இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் இன்று நடைபெற்றது. சென்னையில் மட்டும் 503 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இம்மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 534 பறக்கும் படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன.

இத்தேர்வுக்குச் செல்வதற்காக சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாக போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. அதன்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அறிவுறுத்தல்படி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்று சிறப்புப் பேருந்துகள் இயங்கின.

இந்த நிலையில், குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது என்று தேர்வை எழுதியவர்கள் சிலரிடம் கேட்டோம். 

சந்தியா, குரூப் 4 தேர்வை எழுதியவர்

தமிழைப் பொறுத்தவரையில் அனைத்துக் கேள்விகளும் எளிதாக இருந்தன. பொது அறிவுப் பகுதி சுமாராக இருந்தது. கணிதத்துக்குத்தான் நேரம் அதிகம் தேவைப்பட்டது. கணிதக் கேள்விகள் ஸ்டெப்ஸ் நிறைய போட்டு, விடையைக் கண்டுபிடிக்கும் வகையில் இருந்தன. குறிப்பாகக் கணக்குகள் யோசித்து யோசித்துப் போட வேண்டி இருந்ததால் அதிக நேரம் தேவைப்பட்டது. 

அறிவியலில் இருந்து 8 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. வரலாறு, அரசியலமைப்பு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கேட்கப்பட்டன. சற்றே ட்விஸ்ட் செய்யப்பட்டு, கேள்விகள் அமைக்கப்பட்டு இருந்தன. 

பெரும்பாலான கேள்விகள் (சுமார் 98 கேள்விகள்) 10ஆம் வகுப்பு வரையிலான பாடப் பகுதியில் இருந்துதான் கேட்கப்பட்டன. 10ஆம் வகுப்புத் தாண்டிய பாடத்திட்டத்தில் இருந்து ஓரிரு கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. 

ஸ்ரீலிபிரியா

தேர்வு எளிதான முறையில்தான் கேட்கப்பட்டிருந்தது. பணியில் இருந்துகொண்டே தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தேன். படிக்கக் கூடுதல் நேரம் கிடைக்காததால், அப்படியே வந்து எழுதினேன். எனக்கே தேர்வு எளிதாக இருந்த நிலையில், முறையாகப் படித்தவர்கள் நிச்சயம் தேர்ச்சி பெற வாய்ப்பு உண்டு. கணிதக் கேள்விகள் நிறைய நேரம் எடுத்துத் தீர்க்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தன.  


TNPSC Group 4 Exam: கணிதம் கஷ்டமா? எந்தப் பகுதி எளிது? கட்-ஆஃப்... குரூப் 4 தேர்வு பற்றி தேர்வர்கள் கருத்து என்ன?

பரத்

தமிழ், கணிதம் இரண்டும் எளிதாக இருந்தது. கணக்குப் பாடத்தில் 2, 3 கேள்விகள் மட்டும் கடினமாக இருந்தன. பெரும்பாலும் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. வரலாறு, பொது அறிவுப் பகுதி ஆகியவற்றில் இருந்து எப்போதும்போல் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் கேள்விகளே வந்தன. 

குரூப் 2 தேர்வைப் போல, நடப்பு நிகழ்வுகள் இந்த முறை அதிகம் கேட்கப்படவில்லை. நடப்பு நிகழ்வுகள் குறைவாகத்தான் கேட்கப்பட்டிருந்தன. 

TNPSC Group 4 Exam: கணிதம் கஷ்டமா? எந்தப் பகுதி எளிது? கட்-ஆஃப்... குரூப் 4 தேர்வு பற்றி தேர்வர்கள் கருத்து என்ன?

சஹானா

பொதுத் தமிழ் எளிதாக இருந்தது. புத்தகத்தில் இருந்து முழுமையாகக் கேட்காமல், தமிழ் தெரிந்த எல்லோருமே நல்ல மதிப்பெண்களைப் பெறும் வகையில் பொதுவான வகையில் கேள்விகள் இருந்தன. பெரும்பாலும் பழைய புத்தகத்தில் (2014 பாடப்புத்தகம்) இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 

TNPSC Group 4 Exam: கணிதம் கஷ்டமா? எந்தப் பகுதி எளிது? கட்-ஆஃப்... குரூப் 4 தேர்வு பற்றி தேர்வர்கள் கருத்து என்ன?

அறிவியல், அரசியலமைப்புப் பாடப்பகுதிகளும் எளிமையாகவே இருந்தன. மிகவும் டெக்னிக்கலாக, சிக்கலாக கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. பெரும்பாலான கேள்விகள் எளிமையாக இருந்ததால், கட்- ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கும். இந்த முறை 170 முதல் 180 வரையில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
நட்பில் அடிப்படையில் தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம், அரசியல் நோக்கத்தில் அல்ல - செல்லூர் ராஜூ பேட்டி !
நட்பில் அடிப்படையில் தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம், அரசியல் நோக்கத்தில் அல்ல - செல்லூர் ராஜூ பேட்டி !
Embed widget