மேலும் அறிய

TNPSC Group 4: இன்றே கடைசி: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்!- எப்படி?

TNPSC Group 4 Exam Application Correction: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கான 6,244 காலி இடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான, விண்ணப்பங்களை சரிபார்க்க இன்றே (மார்ச் 6) கடைசி ஆகும். 

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கான  6,244 காலி இடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு பிப்ரவரி 28ஆம் தேதி கடைசித் தேதியாக இருந்த நிலையில், விண்ணப்பங்களை சரிபார்க்க இன்றே (மார்ச் 6) கடைசி ஆகும். 

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான இடங்களும் இதிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. அதிக பணியிடங்கள், ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம். 

தொடர் தாமதத்துக்குப் பிறகு தேர்வு முடிவுகள்

இதற்கிடையே 2022ஆம் ஆண்டு பல்வேறு கட்ட தாமதங்களுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்று, தேர்வு முடிவுகள் வெளியாகின.

ஜூன் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு 

தொடர்ந்து கடந்த மாதம் 2023ஆம் ஆண்டுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

வயது வரம்பு

குரூப் 4 தேர்வுக்கு 18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு 21 முதல் 32 வயதுடையவர்கள் விண்ணப்பித்தனர். அதேபோல சமூகப் பிரிவுக்கு ஏற்ப தளர்வுகள் வழங்கப்பட்டன. 

கல்வித் தகுதி 

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர்

இன்றே கடைசி

தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பித்தனர். விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி, 04.03.2024 நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கியது. சரிபார்க்க, இன்று (மார்ச் 6) இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

* தேர்வர்கள் tnpscexams.in என்ற TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை க்ளிக் செய்து, ஒரு முறை பதிவு உள்நுழைவு விவரங்களை பதிவிட்டு உள்ளே சென்று விண்ணப்பித்தனர். முதல் முறையாக விண்ணப்பித்தவர்கள், அதற்கு ஏற்றவாறு முன்பதிவு செய்தபிறகே விண்ணப்பிக்க முடிந்தது.

தேர்வர்கள் https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்தும் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், விண்ணப்பங்களை சரிபார்க்க இன்றே கடைசி ஆகும். தேர்வர்கள் இரவு 11.59 மணி வரை, ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார் -  வழக்குப்பதிவு செய்த சேலம் சைபர் கிரைம்
சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார் - வழக்குப்பதிவு செய்த சேலம் சைபர் கிரைம்
NEET: எதுவானாலும் தயங்காமல் கேள்; முதலமைச்சர் அளித்த உறுதி - பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கையின் விருப்பம்!
NEET: எதுவானாலும் தயங்காமல் கேள்; முதலமைச்சர் அளித்த உறுதி - பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கையின் விருப்பம்!
மக்களிடம் எதையும் எதிர்பார்த்து வரவில்லை... மக்களின் அன்பு மட்டுமே போதுமானது - ராகவா லாரன்ஸ்
மக்களிடம் எதையும் எதிர்பார்த்து வரவில்லை... மக்களின் அன்பு மட்டுமே போதுமானது - ராகவா லாரன்ஸ்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Modi casts vote | ஓட்டு போட்ட கையோடு குழந்தையுடன் விளையாடிய மோடிSavukku Shankar Arrest | ”சவுக்கு உயிருக்கு ஆபத்து சிறையில் இப்படி நடக்குது” வழக்கறிஞர் பரபர பேட்டிKS Alagiri | காங்., ஜெயக்குமார் மரணம்KPK Jayakumar Death | காங். ஜெயக்குமார் மர்ம மரணம்வெளியான அதிர்ச்சி வீடியோ! திடீர் திருப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார் -  வழக்குப்பதிவு செய்த சேலம் சைபர் கிரைம்
சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார் - வழக்குப்பதிவு செய்த சேலம் சைபர் கிரைம்
NEET: எதுவானாலும் தயங்காமல் கேள்; முதலமைச்சர் அளித்த உறுதி - பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கையின் விருப்பம்!
NEET: எதுவானாலும் தயங்காமல் கேள்; முதலமைச்சர் அளித்த உறுதி - பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கையின் விருப்பம்!
மக்களிடம் எதையும் எதிர்பார்த்து வரவில்லை... மக்களின் அன்பு மட்டுமே போதுமானது - ராகவா லாரன்ஸ்
மக்களிடம் எதையும் எதிர்பார்த்து வரவில்லை... மக்களின் அன்பு மட்டுமே போதுமானது - ராகவா லாரன்ஸ்
kodaikanal: கொடைக்கானல் போறீங்களா..? - கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க..!
கொடைக்கானல் போறீங்களா..? - கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க..!
Fact Check: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தரிசித்தது போலி ராமர் சிலையையா? - அயோத்தியில் நடந்தது என்ன?
Fact Check: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தரிசித்தது போலி ராமர் சிலையையா? - அயோத்தியில் நடந்தது என்ன?
TN 12th Result 2024: தெருவிளக்கில்தான் படிப்பு; ஆனாலும் பிளஸ் 2-வில் சாதனை: உயர் கல்விக்காக ஏங்கும் ஏழை மாணவி !
TN 12th Result 2024: தெருவிளக்கில்தான் படிப்பு; ஆனாலும் பிளஸ் 2-வில் சாதனை: உயர் கல்விக்காக ஏங்கும் ஏழை மாணவி !
PM Modi: வாக்கிங், ஆட்டோகிராஃப், ஃபோட்டோகிராஃப் மத்தியில் வந்த காவலர்! பார்வையால் மிரட்டி மோடி செய்த சம்பவங்கள்
PM Modi: வாக்கிங், ஆட்டோகிராஃப், ஃபோட்டோகிராஃப் மத்தியில் வந்த காவலர்! பார்வையால் மிரட்டி மோடி செய்த சம்பவங்கள்
Embed widget