மேலும் அறிய

CBSE: சரிந்த தேர்ச்சி விகிதம்; 12ஆம் வகுப்பு முடிவுகளில் சர்ச்சை- விளக்கம் அளித்த சிபிஎஸ்இ!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மதிப்பெண்கள் சரமாரியாகக் குறைக்கப்பட்டதாக சர்ச்சை;  டிஜிட்டல் திருத்தும் முறைக்கு சிபிஎஸ்இ விளக்கம்- மே 19 முதல் மறுமதிப்பீடு!

சமீபத்தில் வெளியான 2026-ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன.

நடந்தது என்ன?

பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாணவர்களும், பெற்றோர்களும் சமூக வலைத்தளங்களில் புகார் எழுப்பினர்.

குறிப்பாக, ஜேஇஇ போன்ற கடினமான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கூட, சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் தோல்வியடைந்தது பலத்த சந்தேகங்களை கிளப்பியது. இது குறித்து தேசிய அளவில் கல்வியாளர்களும் தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்திருந்தனர்.

இந்தப் புகார்களுக்கு பதிலளிக்கும் விதமாக சிபிஎஸ்இ நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளது. அதில், விடைத்தாள்களைத் திருத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையே மிகச் சரியானது என சிபிஎஸ்இ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நவீன முறையின் மூலம், விடைத்தாள்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும், எவ்விதப் பாரபட்சமின்றியும் திருத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் மனிதத் தவறுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டு, ஒவ்வொரு மாணவரின் விடைக்கும் படிநிலை அடிப்படையில் (Step-wise marks) முறையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


CBSE: சரிந்த தேர்ச்சி விகிதம்; 12ஆம் வகுப்பு முடிவுகளில் சர்ச்சை- விளக்கம் அளித்த சிபிஎஸ்இ!

குறைந்த தேர்ச்சி விகிதம்

இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 85.2 சதவீதமாகச் சரிந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் இதுவாகும். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளில் தனித்தனியாக குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற முடியும் என்ற விதியையும் வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், மதிப்பெண்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டுப் பணிகள் வரும் மே 19-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. குறைவான மதிப்பெண்கள் வந்துள்ளதாகக் கருதும் மாணவர்கள், முதலில் தங்கள் திருத்தப்பட்ட விடைத்தாள் நகலை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த நகலைச் சரிபார்த்த பின், குறிப்பிட்ட வினாக்களுக்கு மட்டும் மறுமதிப்பீடு செய்யக் கோரி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண்கள் திருத்தி வழங்கப்படும்

கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிய கட்டணத்தைச் செலுத்தி மாணவர்கள் இந்த நடைமுறையை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மறுமதிப்பீட்டின் போது ஏதேனும் பிழைகள் கண்டறியப்பட்டால், உடனடியாக அதற்கான தீர்வு காணப்பட்டு மதிப்பெண்கள் திருத்தி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கட்டண விவரங்கள் மற்றும் விரிவான கால அட்டவணை விரைவில் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
"தொட்டுப் பார்க்க முடியாது.. நான் ரவுடிக்கு ரவுடி.." முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைப் பேச்சு
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Embed widget