மேலும் அறிய

வினாத்தாள் மொழி மாறி வந்த விவகாரம்: மீண்டும் நுழைவுத் தேர்வு தேதியை மாற்றி அறிவித்த தேசிய தேர்வு முகமை

சுதந்திர தினம் விநாயகர் சதூர்த்தி போன்ற விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருவதால் இந்த நுழைவுத் தேர்வை தள்ளி வைத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஆகஸ்ட் நான்காம் தேதி  மத்திய பல்கலைக்கழகங்களில்  மாணவர்கள் சேர்வதற்கான இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு நாடு முழுவதும் 259 நகரங்களில் 489 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வு திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் கோவில்வெண்ணி அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்றது. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் கடந்த ஆகஸ்ட் 4 ல் 657 மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 403 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு 13 மொழிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதன்முறையாக தமிழ் மொழியும் இடம் பெற்று இருந்தது.  இந்த நிலையில் தமிழ் மொழியில் வினாத்தாளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வினாத்தாள் மாறி வந்தது. மேலும் சர்வர் பிரச்சினை காரணமாக ஹோம் சயின்ஸ் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு வினாத்தாள் பதிவிறக்கம் ஆகவில்லை. இதனால் அன்று மதியம் 3 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு நிறைவடைய வேண்டிய தேர்வு மாலை 5:30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. 


வினாத்தாள் மொழி மாறி வந்த விவகாரம்: மீண்டும் நுழைவுத் தேர்வு தேதியை மாற்றி அறிவித்த தேசிய தேர்வு முகமை

இதில் சர்வர் பிரச்சினை காரணமாக அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நுழைவுத் தேர்வு என்பது ரத்து செய்யப்பட்டது. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் வேறு மொழியில் மாறி வந்த மாணவர்கள் மற்றும் சர்வர் பிரச்சனை காரணமாக வினாத்தாள் பதிவிறக்கம் ஆகாத மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் காரணமாக வினாத்தாள் வேற்று மொழியில் மாறி வந்த மாணவர்கள் மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் ஆகாத மாணவர்கள் மற்றும் தேர்வு ரத்து செய்யப்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 12 முதல் 14 வரை மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.  இந்த நிலையில் மொழி மாறி வினாத்தாள் வந்த விவகாரம் மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் ஆகாத மாணவ, மாணவிகள் மற்றும் சர்வர் பிரச்சனை காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட இடங்களில் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவ மாணவிகளுக்கான மறு நுழைவுத் தேர்வை தற்போது தள்ளிவைத்து வரும் ஆகஸ்ட் 24 முதல் 28 வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


வினாத்தாள் மொழி மாறி வந்த விவகாரம்: மீண்டும் நுழைவுத் தேர்வு தேதியை மாற்றி அறிவித்த தேசிய தேர்வு முகமை

சுதந்திர தினம், விநாயகர் சதூர்த்தி போன்ற விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருவதால் இந்த நுழைவுத் தேர்வை தள்ளி வைத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.  மேலும் இந்த மறு நுழைவு தேர்வுக்கான நுழைவுச்சீட்டை மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் இணைய பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த நேரங்களில் தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி கொள்வது கடினமாக இருக்கும் என்று மாணவர்கள் வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் இந்த நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Embed widget