மேலும் அறிய

முயற்சி வேர் போல் ஆழமாக இருந்தால் வெற்றி நிச்சயம் - பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் அறிவுறுத்தல்

தரைக்கு வெளியே இருக்கும் மரம் மட்டுமே வெளியில் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதனுடைய வேர் ஆழமாக பதிந்திருப்பது வெளியில் தெரியாது.

தஞ்சாவூர்: தரைக்கு வெளியே இருக்கும் மரம் மட்டுமே வெளியில் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதனுடைய வேர் ஆழமாக பதிந்திருப்பது வெளியில் தெரியாது. உங்களுடைய முயற்சி மரத்தின் வேர் போல் ஆழமாய் இருந்தால்தான் உங்களால் வெற்றி பெற முடியும் என்று கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் அறிவுரை வழங்கினார்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு  கல்லூரியில் 63வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரோஸி தலைமை வகித்தார். இதில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  திருவள்ளுவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

வேர் வெளியில் தெரிவதில்லை

பின்பு தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் பேசியதாவது:  முறையான கல்வி மூலம் பட்டங்களை பெற்றுள்ள மாணவர்களே உங்களுடைய எதிர்காலத்தை திட்டமிடுங்கள். தரைக்கு வெளியே இருக்கும் மரம் மட்டுமே வெளியில் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதனுடைய வேர் ஆழமாக பதிந்திருப்பது வெளியில் தெரியாது. உங்களுடைய முயற்சி மரத்தின் வேர் போல் ஆழமாய் இருந்தால்தான் உங்களால் வெற்றி பெற முடியும். மனிதன் இயற்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். 


முயற்சி வேர் போல் ஆழமாக இருந்தால் வெற்றி நிச்சயம் - பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் அறிவுறுத்தல்

ஏற்ற இறக்கங்களை பற்றி கவலை வேண்டாம்

நதி பிரம்மாண்டமாய் பிறப்பது இல்லை, அதேபோல் மனிதர்கள் யாரும் ஞானியாய் பிறப்பதில்லை. நதி பிறக்கும் இடத்தில் ஒரு சிறு ஓடையை போல் தான் பிறக்கும், ஆனால் நதியானது செல்ல செல்ல  நீர் பெருக்கெடுத்து ஓடும். நதியானது மேலிருந்து கீழே இறங்கும், பள்ளம் மேடு என்று எதையும் பார்க்காமல் எல்லா இடங்களையும் கடந்து செல்லும். வயல்வெளிகளை வளம் செய்யும் அதேபோல் நாமும் ஏற்ற இறக்கங்களை பற்றி கவலை கொள்ளாமல் மானுட சமூகத்திற்கு நாம் வளம் சேர்க்க வேண்டும். நதியானது தான் மட்டும் வாழாது பிறருக்கும் உதவுகிறது. அதைப்போல நாமும் மற்றவர்களுக்கு உதவும் வகையில் வாழ வேண்டும்.

மலையே தடுத்தாலும் நதி நிற்காது

சுயநலமாக இருப்பது ஓர் சாபக்கேடு பிறருக்கு உதவினால் உங்களுக்கு கட்டாயம் வெற்றி கிடைக்கும். மலையே தடுத்தாலும் நதியானது தயங்கி நிற்பது இல்லை. அதைத் தாண்டி முன்னேறி செல்லும். நதியானது பின்னோக்கி செல்லாது. எப்பொழுதும் முன்னோக்கியே செல்லும். அதைப்போலவே மனிதனும் முன்னோக்கியே செல்ல வேண்டும். எல்லா நதிகளுக்கும் ஓர் எல்லை உண்டு. நதியானது கடலில் சங்கமிப்பதனால் அந்த நதி இல்லாமல் போய்விடாது. தன்னுடைய அடையாளம் தெரியாமல் போவதற்காக நதியானது கலங்குவது இல்லை. துன்பப்படாமல் மனிதன் இறந்து போக வேண்டும் என்று புத்தர் கூறினார்.

ஒரு நொடிதான் மனிதனுடைய ஆயுள் என்று. எனவே இப்பொழுது இருப்பது தான் நம்மளுடைய ஆயுள். இந்த ஆயுளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பட்டங்களை பெற்றுள்ள மாணவர்கள் இந்த உலகத்திற்கு திசை காட்டுகின்றவர்களாக மாற வேண்டும். போட்டி தேர்வுகள், மேற்படிப்புகள், ஆராய்ச்சித் துறைகளில் தங்களை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்காக வளமான உலகம் காத்து நிற்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget