மேலும் அறிய

Ramadoss: 7 ஆண்டாகியும் பணி நிரந்தரம் இல்லை: அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு அநீதியா? - ராமதாஸ்

7 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு அளிக்காமல் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் போக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

7 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு அளிக்காமல் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் போக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 7 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த 1,000-க்கும் கூடுதலான உதவி பேராசிரியர்களுக்கு, ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய பணி நிலைப்பு ஆணை, இன்று வரை வழங்கப்படவில்லை. கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் அலட்சியத்தால் உதவி பேராசிரியர்களுக்கு  ஊதியம் மற்றும் பணி நிலை உயர்வு மறுக்கப்பட்டு வருவது நியாயப்படுத்த முடியாத அநீதி ஆகும்.

தமிழக அரசுக்கு சொந்தமான கலை மற்றும் கல்லூரிகளுக்கு 1093 உதவி பேராசிரியர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். உதவி பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து ஓராண்டு தகுதி காண் பருவமாக (Probation Period)கருதப்படும். இந்தக் காலத்தில் அவர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த கால நடத்தைகள், பணித்திறமை ஆகியவை ஆய்வு செய்யப்படும்.

ஓராண்டு தகுதிகாண் பருவம் முடிவடைந்தவுடன், அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்த நடைமுறைப்படி 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மொத்தம் 7 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் கூட, 1093 ஆசிரியர்களுக்கும் பணிநிலைப்பு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

பணி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்குமா?

கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படாதது அத்துடன் முடிந்து விடும் பிரச்சினை இல்லை. பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படாததால், அதனடிப்படையில் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த உரிமையும் இன்று வரை வழங்கப்படவில்லை. வழக்கமான தகுதிகளுடன்  உதவிப் பேராசிரியராகப் பணியில் சேருபவர்களுக்கு ஐந்தாவது ஆண்டில் முதலாவது பணிநிலை மற்றும் ரூ.1000 தர ஊதிய உயர்வு வழங்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் இரண்டாவது பணி நிலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வும், அடுத்த 3 ஆண்டுகளில், அதாவது 13-ஆவது ஆண்டில் இணைப் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால், இன்னும் பணி நிலைப்பு  சான்றிதழே வழங்கப்படாததால் இரு ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்க வேண்டிய பணிநிலை உயர்வு மற்றும் தர ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டாவது பணிநிலை உயர்வு மற்றும் தர ஊதிய உயர்வு கிடைக்குமா? என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

கல்லூரிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும் குளறுபடிகள்தான் அனைத்து தாமதத்திற்கும், அநீதிக்கும் காரணம் ஆகும். பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் தங்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்து விட்டனர். ஆனால், பணியில்  சேர்ந்த பிறகு உயிரிழந்த உதவி பேராசிரியர்கள், நியமிக்கப்பட்ட பிறகும் பணியில் சேராத உதவி பேராசிரியர்கள் ஆகியோரைப் பற்றிய விவரங்களையும் கல்லூரிகளிடமிருந்து இயக்குனர் அலுவலகம் கோருகிறது. இல்லாத உதவி பேராசிரியர்களின் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் எவ்வாறு வழங்க முடியும்?


Ramadoss: 7 ஆண்டாகியும் பணி நிரந்தரம் இல்லை: அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு அநீதியா? - ராமதாஸ்

குழப்பங்களுக்கு என்ன காரணம்?

அதுமட்டுமின்றி, 2015-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர்கள் எவ்வளவு பேர்? பணியில் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர்? இப்போது பணியில் இல்லாதவர்கள் எவ்வளவு பேர்? என்பது குறித்த விவரங்கள் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இல்லை. இதுதான் குழப்பங்களுக்கு காரணம் ஆகும். கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் நினைத்தால், அனைத்து அரசு கல்லூரிகளில் இருந்தும் விவரங்களைப் பெற்று தணிக்கை செய்து இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். ஆனால், கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் இன்று வரை அதை செய்யவில்லை. இயக்குனர் அலுவலகத்தின் தவறுக்கு, உதவிப் பேராசிரியர்கள் ஏன் பணிநிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் இழக்க வேண்டும்?

2015-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பலர் கடந்த சில ஆண்டுகளில் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால், அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு உடனடியாக தீர்வு காணப்படவில்லை என்றால், அடுத்த சில ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய இரண்டாவது பணி நிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் இழக்க வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.

நிர்வாகத்தின் தரப்பில் நடந்த தவறுக்காக உதவி பேராசிரியர்கள் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது. எனவே, 2015-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அனைத்து உதவி பேராசிரியர்களுக்கும் உடனடியாக பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அதனடிப்படையில், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிநிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் உரிய காலத்திலிருந்து கணக்கிட்டு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Car Maintenance Tips: நீங்க போற வழியில கார் திடீர்னு நின்னுடுச்சா.? ஸ்டார்ட் ஆகலையா.? பதறாம இதெல்லாம் செஞ்சு பாருங்க
நீங்க போற வழியில கார் திடீர்னு நின்னுடுச்சா.? ஸ்டார்ட் ஆகலையா.? பதறாம இதெல்லாம் செஞ்சு பாருங்க
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
Embed widget