மேலும் அறிய

CBSE Question Paper Leak: ‛சிபிஎஸ்இ தேர்வில் முறைகேடு: தேர்வுகளை ரத்து செய்யுங்கள்’ -சிபிஎஸ்இ அமைப்புக்கு 8 பக்க புகார் கடிதம்!

சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் சில சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியிடப்பட்டதாகவும் தேர்வில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுவதாகவும் குற்றச்சாட்டு புகார் எழுந்துள்ளது. 

சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நான்கு பதில்களில் ஒரு விடையை தேர்ந்தெடுக்கும் முறையிலான தேர்வு டிசம்பர் மாதத்திலும் விரிவான விடையளிக்கும் தேர்வு மார்ச் மாதத்திலும் நடைபெறும் என்ற வகையில் புதிய தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அந்த வகையில் தற்போது முதல் கட்ட தேர்வு நடைபெற்றது. இதில் பல சிபிஎஸ்இ பள்ளிகளில்  10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியிடப்பட்டதாகவும் தேர்வில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுவதாகவும் குற்றச்சாட்டு புகார் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக சிபிஎஸ்இ மேலாண் கூட்டமைப்பினர் சிபிஎஸ்இ அமைப்புக்கு 8 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், “தேர்வு தொடங்கும் முன்பே சில சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர்கள் கேள்வித்தாள்களையும் விடைகளையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விடை தெரியாத கேள்விகளுக்கு ‘c' என்ற தேர்வை குறிப்பிட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அவ்வாறு ‘c' என குறிப்பிட்டுள்ள கேள்விக்கான சரியான பதிலை  ‘a, b, d’ என ஆசிரியர்களே மாற்றியமைக்கின்றனர்.  

முதல் கட்ட தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் இரண்டாம் கட்டத் தேர்வில் மதிப்பிடப்படும் என்பதால் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. பள்ளியை சேராத ஒரே ஒரு நபர் மட்டுமே கண்காணிப்பாளராக நியமிக்கப்படுகின்றனர். அதனால்தான் இதுபோன்று எளிமையாக குளறுபடி நடைபெறுகிறது. இதனால் பல சிபிஎஸ்இ பள்ளிகளில் சுமார் 20 மாணவர்கள் முழு மதிப்பெண்களை பெறுகின்றனர். இதனால் அந்த பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியும் காட்டப்படுகிறது. எனவே அண்மையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்ற தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறு நடந்தால் மைய கண்காணிப்பாளர், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதுகுறித்து  சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்களுக்கு, சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கையில், பொதுத்தேர்வு நியாயமாக நடத்தப்பட வேண்டும். தேர்வில்ஏதேனும் விதிமுறை மீறல்கள்கண்டறியப்பட்டால் மைய கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

83 Movie Review: கோப்பையை வென்ற கபில், மனதை வென்றாரா? சுடச்சுட ‛83’ ரிவியூ!

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

ஏழை குழந்தைகளை ராஜாக்களாக்கிய முன்னாள் மாணவி; உதவி செய்வதிலும் இப்படியொரு மாண்பா? - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி
ஏழை குழந்தைகளை ராஜாக்களாக்கிய முன்னாள் மாணவி; உதவி செய்வதிலும் இப்படியொரு மாண்பா? - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி
விழுப்புரம் நீட் தேர்வர்கள் கவனத்திற்கு.. தேர்வு மையங்கள் மற்றும் பெற்றோர் வாகன நிறுத்தங்கள் முழு விவரம் உள்ளே!
விழுப்புரம் நீட் தேர்வர்கள் கவனத்திற்கு.. தேர்வு மையங்கள் மற்றும் பெற்றோர் வாகன நிறுத்தங்கள் முழு விவரம் உள்ளே!
NEET/JEE புத்தகங்கள்..மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம்... அரசு விடுதிகளில் சேர அரிய வாய்ப்பு!
NEET/JEE புத்தகங்கள்..மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம்... அரசு விடுதிகளில் சேர அரிய வாய்ப்பு!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget