மேலும் அறிய

4.5 ஆண்டுகளாக மவுனவிரதம்; தமிழைப் பயிற்றுமொழியாக அறிவிக்க மாட்டீர்களா?- ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக 4.5 ஆண்டுகளாக மவுனவிரதம் இருக்கும் தமிழறிஞர் முத்துச்சாமி பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

’’இந்திய நாட்டில் ஒரு பல்கலைக்கழகம், பள்ளிகளில் அன்னைத் தமிழுக்கு அங்கீகாரம் வேண்டி 1626-ஆவது நாளாக வாய்ப்பூட்டு  தவத்தை மேற்கொண்டிருக்கிறது. அப்பல்கலைக்கழகத்தின் நாவிற்குள் சிறைபட்டு கிடக்கும் அன்னைத் தமிழுக்கு விடுதலை அளிப்பதற்கான வரத்தை தமிழக அரசு இன்னும் தாமதப்படுத்துவது வருத்தமளிக்கிறது.

திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையத்தில் நான்கரை ஆண்டுகளாகப் பேசா நோன்பு மேற்கொண்டிருக்கும் அந்த பல்கலைக்கழகத்தின் பெயர் தமிழறிஞர் டிட்டோனி க.இரா.முத்துச்சாமி. தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அவர் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

தமிழறிஞர் டிட்டோனி க.இரா.முத்துச்சாமிக்கு தமிழறிஞர்கள் வட்டாரத்தில் அறிமுகம் தேவையில்லை. தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி 25.04.1999-இல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்ட 102 தமிழறிஞர்களில் முதன்மை இடம் பிடித்தவர்களில் இவரும் ஒருவர்; அதற்காக மொழிப்போர் மறவர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவர். தமிழை செம்மொழியாக அறிவிக்க வலியுறுத்தி 18.03.2003-ஆம் நாள் டெல்லி நாடாளுமன்றம் முன் நடத்தப்பட்ட பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் முதன்மையானவர் முத்துச்சாமி. அதற்காக ‘செம்மொழிப் போராளி’ விருது பெற்றவர்.

அன்னை தமிழ் அவரது வாயிலிருந்து மீண்டும் ஒலிக்காதா?

தமிழ்ச் செம்மொழி கனவு நனவாகி விட்ட நிலையில், சாகும்வரை உண்ணாநிலை நடத்தி 20-ஆவது ஆண்டு தொடங்கியும் அந்த கனவு நனவாக வேதனையில்தான், தமிழகத்தின் கல்வி நிலையங்களில் தமிழ் பயிற்றுமொழியாக அறிவிக்கப்படும் வரை நான், ‘பேசா நோன்பு’ போராட்டத்தை மேற்கொள்வேன் என்று அவர் அறிவித்தார். அதன்படியே தமது எண்பதாம் ஆண்டு முத்துவிழா பிறந்தநாளான 24.3.2018-ஆம் நாள் முதல் இன்று வரை 1626 நாட்களாக ஒருவருடனும், ஒரு சொல் கூட பேசவில்லை. முத்துசாமி அவர்களின் இந்த போராட்டம் குறித்து அறிந்த நாள் முதல், 80 ஆண்டுகளாக அவரது நாவில் நர்த்தனம் ஆடிய அன்னை தமிழ், அவரது வாயிலிருந்து மீண்டும் ஒலிக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

தமிழறிஞர் முத்துச்சாமியின் கோரிக்கை அவரது நலனுக்காக கோரிக்கையுமல்ல, அவரது கோரிக்கையுமல்ல். ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் நலனுக்கான கோரிக்கை; ஒட்டுமொத்த சமூகத்தின் கோரிக்கை. ஆனால், அந்தக் கோரிக்கையை ஆய்வு செய்வதற்குக் கூட கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு முன்வரவில்லை; இந்தக் கோரிக்கை  தொடர்பாக அரசின் சார்பில் எவரும் அவரை சந்திக்கக்கூடச் செல்லவில்லை என்பதுதான் வேதனை. அன்னை தமிழுக்கு அரசு அளிக்கும் மரியாதை இவ்வளவுதான்.

 

தமிழக அரசுக்கு மனம் வரவில்லை

தமிழ் பயிற்றுமொழியாக இருந்தால்தான் மாணவர்களின் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்; அப்போதுதான் அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் முழுமையாக கற்று, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு  புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். அதற்காகத்தான் அனைத்துவித கல்வி நிறுவனங்களிலும் தமிழைப் பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழறிஞர்களும், தமிழார்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்; ஏராளமான முறை பாட்டாளி சொந்தங்களுடன் சிறைகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனாலும், தமிழை பயிற்றுமொழியாக அறிவிக்க தமிழக அரசுக்கு மனம் வரவில்லை.

தமிழை பயிற்றுமொழியாக அறிவிப்பதில் எந்தவிதமான சட்ட சிக்கலும் இல்லை. மத்திய அரசு சட்டமான கல்வி பெறும் உரிமை சட்டத்தின் 29 (எஃப்) பிரிவில், “நடைமுறைக்குச் சாத்தியமான வரையில் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வாசகத்தில் ‘‘நடைமுறைக்குச் சாத்தியமாகும் வகையில்’’ என்பதை மட்டும் நீக்கி கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்து, அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ் பயிற்றுமொழி சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவது சாத்தியமே.

தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஆட்சியாளர்கள், தங்களின் அதிகார வரம்புக்குட்பட்ட தமிழ் பயிற்றுமொழி சட்டத்தை இயற்றத் தயங்குவது முரணாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் செழிக்க வேண்டுமானால் தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். இதை உணர்ந்து தமிழ் பயிற்று மொழி சட்டத்தை அடுத்த பேரவைக் கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் தமிழறிஞர் முத்துச்சாமியின் பேசா நோன்பை முடிவுக்கு கொண்டு வந்து, அவரது நாவிற்குள் அடைபட்டுக் கிடக்கும் அன்னை தமிழுக்கு விடுதலை அளிக்க வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மனப்பாடத்துக்கு நோ, தேர்வில் மாற்றம்: சிபிஎஸ்இ புதிய பாடத்திட்டம் அமல்- என்னென்ன மாற்றங்கள்?
மனப்பாடத்துக்கு நோ, தேர்வில் மாற்றம்: சிபிஎஸ்இ புதிய பாடத்திட்டம் அமல்- என்னென்ன மாற்றங்கள்?
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8-ல் வெளியாகும்! திக் திக் மனநிலையில் மாணவர்கள்: தாமதமாகுமா 10ம் வகுப்பு ரிசல்ட்?
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8-ல் வெளியாகும்! திக் திக் மனநிலையில் மாணவர்கள்: தாமதமாகுமா 10ம் வகுப்பு ரிசல்ட்?
Free AI Courses: ஹார்வர்டு வழங்கும் AI & கோடிங் இலவசப் படிப்புகள்! பொன்னான வாய்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Free AI Courses: ஹார்வர்டு வழங்கும் AI & கோடிங் இலவசப் படிப்புகள்! பொன்னான வாய்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
அறிவியல் படிக்கணுமா? ஐசர்களில் சேர ஒரு பொன்னான வாய்ப்பு! IAT-க்கான கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
அறிவியல் படிக்கணுமா? ஐசர்களில் சேர ஒரு பொன்னான வாய்ப்பு! IAT-க்கான கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
TN Election 2026: தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
TVK Aadhav Arjuna: முடிவுக்கு வந்த பிரச்னை.. ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு.. தொண்டர்கள் ஹேப்பி!
TVK Aadhav Arjuna: முடிவுக்கு வந்த பிரச்னை.. ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு.. தொண்டர்கள் ஹேப்பி!
ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? வெறும் பி.டி.ஆர் தான் – சுந்தர் சி சவால் !
ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? வெறும் பி.டி.ஆர் தான் – சுந்தர் சி சவால் !
TN Richest Candidates: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் யார்? அதிமுக, திமுக, தவெக எல்லாத்துலயுமா?
TN Richest Candidates: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் யார்? அதிமுக, திமுக, தவெக எல்லாத்துலயுமா?
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
TN RAIN ALERT: மீண்டும் மழையா.? தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
மீண்டும் மழையா.? தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
Trump Vs Iran: தலைக்கு தில்ல பாத்தியா.! ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல் 10 நிபந்தனைகள் விதித்த ஈரான்; அது என்ன.?
தலைக்கு தில்ல பாத்தியா.! ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல் 10 நிபந்தனைகள் விதித்த ஈரான்; அது என்ன.?
Embed widget