மேலும் அறிய

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு முன்னால் ஒரே பொதுத் தேர்வா? தமிழக ஆசிரியர்‌ கூட்டணி கேள்வி

ஒரே நாடு ஒரே தேர்தல்‌- நாடாளுமன்றத்தில்‌ தீர்மானம்‌ நிறைவேற்றப்படுவதற்கு முன்னர்‌, அனைத்து பள்ளிகளுக்கும்‌ ஒரே பொதுத்‌ தேர்வு - பொது வினாத்தாட்களா என்று கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ எவ்வித தயக்கமும்‌ இன்றி தேசியக்‌ கல்விக்‌ கொள்கையினை எஸ்சிஇஆர்டி‌ வழியாக அமல்படுத்திவிட்டார்கள்‌ என்று தமிழக ஆசிரியர்‌ கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்‌- நாடாளுமன்றத்தில்‌ தீர்மானம்‌ நிறைவேற்றப்படுவதற்கு முன்னர்‌, அனைத்து பள்ளிகளுக்கும்‌ ஒரே பொதுத்‌ தேர்வு - பொது வினாத்தாட்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. 

இதுகுறித்து ஐபெட்டோ (AIFETO - ALL INDIAFEDERATION OF ELEMENTARY TEACHERS’ ORGANISATIONS) அகில இந்தியச்‌ செயலாளர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’காலாண்டுத்‌ தேர்வே பொதுத்‌ தேர்வு என்று தேசியக்‌ கல்விக்‌ கொள்கையில்‌ கூட இடம்‌ பெறவில்லையே!

4,5 ஆம்‌ வகுப்பு வினாத்தாட்களை எமிஸ்‌ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்‌ செய்துவிட்டார்களா? சுகப்பிரசவமா? சிசேரியனா!

1,2,3 வினாத்தாட்களை பதிவிறக்கம்‌ செய்வதில்‌ சர்வர்‌ கோளாறு உள்ளதாம்‌. சர்வர்‌ கிடைக்கும்‌ பகுதியினரைப்‌ பொறுத்து ஓபன்‌ ஆகவில்லை. வினாத்தாட்கள்‌ எடுக்கப்பட்டுள்ளது. வினாத்தாட்களை வெளியில்‌ எடுத்தவர்கள், ஈன்ற பொழுதின்‌ பெரிதுவக்கும்‌ தாயினைவிட வெற்றிக்‌ குறிப்பில்‌ பதிவிட்டு மகிழ்வினை பகிர்ந்து கொள்வதையும்‌ காணமுடிகிறது.

என்னதான்‌ நுண்ணறிவுடன்‌ நிபுணர்களைக்‌ கொண்டு வினாத்தாட்களை இணையதளத்தில்‌ அனுப்பி வைத்தாலும்‌ அந்தப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்‌தான்‌ வெளியில்‌ எடுத்து தருகிறார்‌. பாடம்‌ நடத்திய வகுப்பாசிரியர்தான்‌ தேர்வு வைக்கிறார்‌. அவர்‌ வகுப்பு மாணவர்கள்‌தான்‌ தேர்வினை எழுதுகிறார்கள்‌. செல்லுக்குள்‌ மதிப்பீடு செய்தாலும்‌ விடைத்தாளினை திருத்தி மதிப்பீடு செய்வது வகுப்பாசிரியர்கள்‌ தலைமை ஆசிரியர்கள்‌தான்‌ என்பதை உணர மறுப்பதேன்‌?

ஆசிரியர்களை ஏன்‌ சித்திரவதை அன்றாடம்‌ செய்ய வேண்டும்‌? காலாண்டுத்‌ தேர்வினை பழைய நடைமுறைப்படி பள்ளிச்‌ சூழ்நிலைக்கு ஏற்ப வினாத்தாட்களைப்‌ பெற்று தேர்வு நடத்தத்தான்‌ செய்தார்கள்‌ என்பதை உணர மறுப்பதேன்‌? பாடம்‌ நடத்த பள்ளியில்‌ போதிய ஆசிரியர்கள்‌ இல்லை என்பதை உணர மறுப்பதேன்‌?

கற்பித்தல்‌ அல்லாத பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆசிரியர்களை மாணவர்‌களுக்கு பாடம்‌ நடத்துவதற்கு வழிவிடுங்கள்‌! தொடர்ந்து அடுக்கடுக்காக அனுப்பப்பட்டு வரும்‌ வாட்ஸப் பதிவுகளால்‌ நடந்தது என்ன? என்று கேட்பவர்களும்‌ இருக்கத்தான்‌ செய்கிறார்கள்‌. பதிவுகள்‌ ஆசிரியர்‌ சங்கங்களின்‌ மத்தியில்‌ உணர்வலைகளை எழுப்பாமல்‌ இல்லை.

முதலமைச்சா்‌ அனுவலகம், பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அனுவலகம்‌, முதலமைச்சரின்‌ நுண்ணறிவுப்‌ பிரிவு, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்‌ செயலாளா்‌ உட்பட இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள்‌, அனைத்து இயக்குநர்கள்‌, அனைத்து இணை இயக்குநர்களுக்கும்‌ அன்றாடம்‌ அனுப்பப்பட்டு வருவதை பார்த்து வருகிறார்கள்‌ என்பதை காண முடிகிறது.

சிஆர்சி கூட்டம்‌ இரண்டு சனிக்கிழமைகளில்‌ நடைபெற்று வந்தது. 1 முதல்‌ 5 வகுப்புகளுக்கு ஒரே சனிக்கிழமையில்‌ நடத்துவதாக மாற்றம்‌ செய்துள்ளார்கள்‌. புத்தகத்தையும்‌ வைத்து பாடம்‌ நடத்த அனுமதித்துள்ளார்கள்‌. விடுமுறை காலங்களில்‌ பயிற்சி வகுப்பு நடத்தி வந்த பிடிவாதம்‌ தவிர்க்கப்பட்டு வருகிறது.

1- 3 பதிப்பிட்டுத்‌ தேர்வு, 4-5 வகுப்பு திறனறித்‌ தேர்வு- 15 நாட்களுக்கு ஒருநாள் நடத்துவதற்கான திட்டம்‌, கேள்விகளின்‌ எண்ணிக்கை குறைப்பு, எல்லாவற்றிக்கும்‌ மேலாக எதைச்‌ செய்ய திட்டமிடுகிறபோதும்‌ நமது எதிர்ப்பு வரும்‌.

ஆசிரியர்களை பாதுகாப்பதில்‌ நாம்‌ பிடிவாத உணர்வுடன்‌ கொள்கை வழிப்‌ பயணத்தை தொய்வில்லாமல்‌ தொடர்வோம்‌’’.

இவ்வாறு தமிழக ஆசிரியர்‌ கூட்டணி தெரிவித்துள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி
ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி
Puducherry University : புதுச்சேரி பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் இரட்டைச் சாதனை!
Puducherry University : புதுச்சேரி பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் இரட்டைச் சாதனை!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
Embed widget