மேலும் அறிய

NTA on NEET Result: நீட் தேர்வு மதிப்பெண்களில் முறைகேடுகளா? என்.டி.ஏ. பரபரப்பு விளக்கம்

தேர்வர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, அதிக மதிப்பெண்கள் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று தேசியத் தேர்வுகள் முகமை நீண்ட விளக்கம் அளித்துள்ளது.

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியது, அடுத்தடுத்த வரிசை எண்களைக் கொண்ட தேர்வர்கள் முதலிடம் பெற்றது, தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்றே நீட் தேர்வு முடிவுகள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள்  நீட் தேர்வு முடிவுகளில் எழுந்து வருகின்றன.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் நீட் குளறுபடி குறித்துக் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து தேர்வை நடத்திய தேசியத் தேர்வுகள் முகமை நீண்ட விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை கூறி உள்ளதாவது:

''நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் இந்த முறை 323.55 ஆக உள்ளது. இது 2023-ல் 279 ஆகவும், 2022-ல் 259 ஆகவும் 2021-ல் 286 ஆகவும் 2020-ல் 297 ஆகவும் இருந்தது. பொதுப்பிரிவினர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறக் குறைந்தபட்ச மதிப்பெண் 164 ஆக இம்முறை உள்ளது. இது, 2022-ல் 117 ஆக இருந்தது.  

கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிப்பு

ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில், நீட் கட் - ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரித்திருப்பது, தேர்வு முறையின் கடினத் தன்மையையும் தேர்வர்களின் உயர் செயல்திறனையும் காட்டுகிறது.

நேர இழப்புக்குக் கருணை மதிப்பெண்கள் (Compensatory marks for loss of time)

2024ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலைத் தேர்வை எழுதிய மாணவர்கள் சிலரின் மனுக்கள், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன. சில தேர்வு மையங்களில் தேர்வின்போது நேர இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதை ஈடுகட்டும் விதமாக, சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

1,563 மாணவர்களுக்கு இவ்வாறு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்ணானது - 20ல் இருந்து 720 வரையானதாக இருந்தது. அதேபோல 2 தேர்வர்களுக்கு மட்டும்  718 மற்றும் 719 மதிப்பெண்கள் கிடைத்தன.  

நீட் தேர்வு டாப்பர்கள் (Toppers in NEET (UG) 2024)

2023ஆம் ஆண்டு நீட் தேர்வை எழுதியவர்கள் எண்ணிக்கை 20,38,596 ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு 23,33,297 ஆக உயர்ந்துள்ளது. தேர்வர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, அதிக மதிப்பெண்கள் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

முழு மதிப்பெண்கள் பெற்ற 67 தேர்வர்களில், 44 பேர், இயற்பியல் ஆன்சர் கீயில் திருத்தம் பெற்றவர்கள். 6 பேர் கருணை மதிப்பெண்களைப் பெற்றவர்கள். இதனால் அதிக அளவிலான மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 

மோசடி செய்தவர்களின் வழக்குகள் (Regarding Unfair Means cases)

ஏற்கனவே இருக்கும் என்டிஏ விதிமுறைகளின்படி, தேர்வர்கள் மோசடி, முறைகேட்டில் ஈடுபட்டால் தேர்வரின் விண்ணப்பம் ரத்து செய்யப்படும், வருங்கால என்டிஏ தேர்வுகளை அவரால் எழுத முடியாது. ஏற்கனவே முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது சில வழக்குகள், மாநிலக் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வினாத்தாள் கசிவு தொடர்பான செய்திஅக்ளை நாங்கள் மறுக்கிறோம்.

தேர்வு முடிவுகள் வெளியான தேதி

ஏற்கனவே தேர்வு நடந்து, ஆன்சர் கீ வெளியாகி உரிய செயல்முறைகளுக்குப் பிறகே தேர்வு முடிவுகள் ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டன. நீட் தேர்வு நடத்தப்பட்டு 30 நாட்களுக்கு உள்ளாக, 23 லட்சம் பேரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வெளிப்படையான முறையில் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன''.

இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை விளக்கம் அளித்துள்ளது.

இதை வாசிக்கத் தவறாதீர்கள்: NEET UG Result 2024: நீட் தேர்வு முடிவில் குளறுபடி? வெளிச்சத்துக்கு வரும் முறைகேடுகள்? விளக்கம் அளிக்குமா என்டிஏ? 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மீண்டும் 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; எங்கே? ஏன்? மாணவர்கள் வேதனை!
மீண்டும் 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; எங்கே? ஏன்? மாணவர்கள் வேதனை!
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவிப்பு! தவறினால் என்ன நடக்கும்?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவிப்பு! தவறினால் என்ன நடக்கும்?
 ICAI சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: தீக்‌ஷா முதலிடம்- எவ்வளவு மதிப்பெண்கள்? மற்றவர்கள் எப்படி?
 ICAI சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: தீக்‌ஷா முதலிடம்- எவ்வளவு மதிப்பெண்கள்? மற்றவர்கள் எப்படி?
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Surprise Gift: மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வங்கி கணக்கில் ரூ.8,000 டெபாசிட்.! மீனவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
வங்கி கணக்கில் ரூ.8,000 டெபாசிட்.! மீனவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
Trump Arab Countries Iran: “மெயின் அடியே இனிமே தான் இருக்கு“; ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங்; தாக்குதலில் இணையும் அரபு நாடுகள்.?
“மெயின் அடியே இனிமே தான் இருக்கு“; ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங்; தாக்குதலில் இணையும் அரபு நாடுகள்.?
Top 10 News Headlines: மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
China Backs Iran: “ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?
“ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Embed widget