மேலும் அறிய

NCERT: இனி 9 முதல் 11ஆம் வகுப்பு வரையான மதிப்பெண்களும் முக்கியம்; பிளஸ் 2 மதிப்பெண் பற்றி என்சிஇஆர்டி புது பரிந்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் மாணவர்களின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான செயல்பாடுகள் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மதிப்பெண்களைக் கொண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பீடுகள் இருக்க வேண்டும் என்று என்சிஇஆர்டியின் பாரக் மையம் பரிந்துரை செய்துள்ளது.

பாரக் (செயல்திறன் மதிப்பீடு, மதிப்பாய்வு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அறிவின் பகுப்பாய்வு- PARAKH) என்பது என்சிஇஆர்டியால் (தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) அமைக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறை மையமாகும். இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி வாரியங்களிலும் தரமான மதிப்பீட்டு அணுகுமுறை குறித்து முன்னதாக வலியுறுத்தி இருந்தது.

அதேபோல பாடத் திட்டத்தில் தரவு மேலாண்மை, குறியீட்டு முறை, பயன்பாட்டு மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, இசை, கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் போன்ற தொழில்சார் மற்றும் திறன் சார்ந்த பாடங்களை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது.

கல்வி வாரியங்கள் முழுவதும் சமத்துவத்தை ஏற்படுத்துதல்

இந்த நிலையில் பாரக், ’கல்வி வாரியங்கள் முழுவதும் சமத்துவத்தை ஏற்படுத்துதல்’ (Establishing Equivalence across Education Boards) என்ற பெயரில் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் மாணவர்களின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான செயல்பாடுகள் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 9ஆம் வகுப்பில் இருந்து 15 சதவீத மதிப்பெண்கள், 10ஆம் வகுப்பில் இருந்து 20 சதவீத மதிப்பெண்கள், 11ஆம் வகுப்பில் இருந்து 25 சதவீத மதிப்பெண்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீத மதிப்பெண்கள் 12ஆம் வகுப்பில் இருந்து மதிப்பீடு செய்யப்பட உள்ளன.

மதிப்பீடுகள் எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும்?

அதேபோல 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளின் மதிப்பீடுகளும் எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, 9ஆம் வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்கள், formative assessment மூலமாகவும் 30 சதவீத மதிப்பெண்கள், summative assessment மூலமாகவும் அளிக்கப்பட வேண்டும். அதேபோல, 10ஆம் வகுப்பில் இரு வகையான மதிப்பீடுகளும் தலா 50 சதவீத மதிப்பெண்களாகப் பிரித்துக்கொள்ளப்பட வேண்டும்.

தொடர்ந்து 11ஆம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள், formative assessment மூலமாகவும் 60 சதவீத மதிப்பெண்கள், summative assessment மூலமாகவும் அளிக்கப்பட வேண்டும். 12ஆம் வகுப்பில் 30 சதவீத மதிப்பெண்கள் formative assessment மூலமாகவும் 70 சதவீத மதிப்பெண்கள், summative assessment மூலமாகவும் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மதிப்பீடுகள் அனைத்தும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று பாரக் தெரிவித்துள்ளது. 

கட்டமைப்பு வசதிகள்

அதேபோல ஆசிரியர்களின் செயல்திறன், பள்ளியின் கட்டமைப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு வசதிகள், வளங்கள் நிறைந்த நூலகங்கள் ஆகியவற்றின் தேவையையும் பாரக் முன் வைத்துள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
Trump Vs Tiruppur: அய்யய்யோ.! இடியை இறக்கிய ட்ரம்ப் - முடங்கப் போகும் திருப்பூர் - அப்போ தொழிலாளர்களோட கதி.?
அய்யய்யோ.! இடியை இறக்கிய ட்ரம்ப் - முடங்கப் போகும் திருப்பூர் - அப்போ தொழிலாளர்களோட கதி.?
Mahindra Thar: ஒரிஜினல் மான்ஸ்டர் வரார்.. ஆஃப் ரோட் கிங்கின் புதிய அவதாரம், தார் லாஞ்ச் எப்போது தெரியுமா?
Mahindra Thar: ஒரிஜினல் மான்ஸ்டர் வரார்.. ஆஃப் ரோட் கிங்கின் புதிய அவதாரம், தார் லாஞ்ச் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
State Education Policy: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்புவரை ஆல்பாஸ்- மாணவர்களுக்கு காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள்!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
TVK Vijay: நான்தான் முதலமைச்சர்.. அடம்பிடிக்கும் விஜய்.. அதிமுக கூட்டணிக்கு நோ சொன்ன தளபதி!
Trump Vs Tiruppur: அய்யய்யோ.! இடியை இறக்கிய ட்ரம்ப் - முடங்கப் போகும் திருப்பூர் - அப்போ தொழிலாளர்களோட கதி.?
அய்யய்யோ.! இடியை இறக்கிய ட்ரம்ப் - முடங்கப் போகும் திருப்பூர் - அப்போ தொழிலாளர்களோட கதி.?
Mahindra Thar: ஒரிஜினல் மான்ஸ்டர் வரார்.. ஆஃப் ரோட் கிங்கின் புதிய அவதாரம், தார் லாஞ்ச் எப்போது தெரியுமா?
Mahindra Thar: ஒரிஜினல் மான்ஸ்டர் வரார்.. ஆஃப் ரோட் கிங்கின் புதிய அவதாரம், தார் லாஞ்ச் எப்போது தெரியுமா?
Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
Vice President Election: பிரதமர் மோடி கையில் அதிகாரம் - புதிய குடியரசு துணை தலைவர் யார்? டாப் 4ல் இரண்டு ஆளுநர்கள்
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
தெருவிளக்கில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்... திருவண்ணாமலை கிராமத்திற்கு வெளிச்சம் தருமா தமிழக அரசு?
Top 10 News Headlines: மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
மாநில கல்விக் கொள்கை வெளியீடு, தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget