மேலும் அறிய

Nalam Nadi App: பள்ளி மாணவர்களுக்கு நலம் நாடி என்ற புதிய செயலி தொடக்கம்; ஏன், எதற்கு?

Nalam Nadi App: யாரையும் விட்டுவிடாமல் ஒருங்கிணைந்த கல்வியை அளிக்கும் வகையில் செயலி உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் நலம் நாடி என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் புதிய செயலி வெளியிடப்பட்டது. சிறப்புத் திறன் கொண்ட மாணவர்களுக்காக 'நலம் நாடி' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளமும் தொடங்கி வைக்கப்பட்டது. அதேபோல அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை இனி நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பல்வேறு நிகழ்வுகளை தொடங்கி வைத்த பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒருங்கிணைந்த கல்வி

பள்ளிகள் மாணவர்களின் மனம் மற்றும் உடல் நலனைக் கருத்தில்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் கொடுத்து, செயல்பட்டு வருகிறோம். அவர்களுக்கும் கல்வி அறிவை வழங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யாரையும் விட்டுவிடாமல் ஒருங்கிணைந்த கல்வியை அளிக்கும் வகையில் செயலி உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் நலம் நாடி என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் ஸ்பெஷல் எஜுகேட்டர்ஸ் எனப்படும் சிறப்பு கல்வியாளர்களும் செயலி உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.  இத்தகைய குழந்தைகளிடத்தில் 21 வகையான குறைபாடுகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், யாருக்கு என்ன குறைபாடு உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற வகையில் கற்பித்தல் நிகழ்த்தப்படும்.

நேரடி பணப் பரிமாற்றம்

’’கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை இனி நேரடியாக அவர்களது வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும். இதற்கு முன்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை மாநில அளவிலிருந்து மாவட்டங்களுக்கும் பிறகு அங்கிருந்து வட்டார அளவிலும் அனுப்பப்பட்டு அதன் பிறகு ஒவ்வொரு பள்ளிகளுக்காக அனுப்பப்பட்டு பிரித்துக் கொடுக்கப்பட்டு வந்தது.

இதனால் நீண்ட கால தாமதம் ஏற்பட்டு மாணவர்களுக்கு உரிய நேரத்தில் ஊக்கத்தொகை கிடைக்காத சூழ்நிலை நிலவி வந்தது. அதனைத் தவிர்க்கும் பொருட்டு,  இனி நேரடியாக மாணவருடைய வங்கி கணக்கிலேயே உதவித்தொகை செலுத்தப்படும்.

எதற்காக?

வழக்கமாக கல்வி முறைகளுக்குள் கொண்டு வருவதற்காக, 10 முதல் 14 வயதுடைய மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.200 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகை 2, 3 படிநிலைகளைக் கடந்துதான் மாணவர்களுக்குக் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது நேரடியாக எந்த கால தாமதமும் இல்லாமல் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளது.

இணையவழி குறைதீர் புலம்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் வட்டார, மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாகவே கோரிக்கைகள் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் கோரிக்கை எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியாமல் இருந்தது. எனினும் தற்போது அரசுப் பள்ளிகளைப் போலவே, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள், நிர்வாகம் சார்ந்த கோரிக்கைகளை எளிய முறையில் தீர்த்து வைக்க, இணையவழி குறைதீர் புலம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கும் முன்னதாக, மாநிலத்தின் தேர்வு தேதிகளுக்கு ஏற்றவாறு அறிவிப்பது வழக்கம். மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவ்வாறு செய்யப்படும். அந்த வகையில், பொதுத் தேர்வு தேதிகளைத் தவிர்த்து தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு தேதிகளை அறிவிக்கும் என்று நம்புகிறேன்’’.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pawan Kalyan's Politics: இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pawan Kalyan's Politics: இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
MS Dhoni:  நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
MS Dhoni: நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Embed widget