மேலும் அறிய

Madras University: போராட்டத்தில் பேராசிரியர்கள்; கைகொடுக்கும் மாணவர்கள்! முடங்கிய சென்னை பல்கலை.

சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தங்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தங்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தமானது சென்னைப் பல்கலைக்கழகம் (University of Madras). இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான இது 1851-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. 

இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. தணிக்கைத் துறை தடை காரணமாக தமிழக அரசு வழங்கும் நிதி படிப்படியாகக் குறைக்கப்பட்டது. பல்வேறுகட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி முடக்கியது.

ஊதியம், ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கக் கூடத் தடுமாறும் நிலை உருவாகியது. பல்கலைக்கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை செலுத்தினால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க தயாராக இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. எனினும் பிரச்சினை இதுவரை தீர்ந்தபாடில்லை.


நிதி நெருக்கடி, நிர்வாக மோசடி: தத்தளிக்கும் பல்கலைக்கழகங்கள், தவிக்கும் ஆசிரியர்கள்- விடிவு எப்போது?

உயர் மட்டக் குழு அமைப்பு

இதையடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், நிதி நெருக்கடியை சீர்செய்யும் வகையில், 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. தமிழக அரசு இந்தக் குழுவை உருவாக்கி, அரசாணையை வெளியிட்டது.

அரசாணையில், கணக்குத் தணிக்கைகளின்போது, பல்கலைக்கழகத்தின் பதிவாளர், உயர் மட்டக் குழுவின் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொண்ட வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் குழு கூடி, விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டளது.

பேராசிரியர்கள் போராட்டம்

மார்ச் மாதமும் இன்று பிறந்துவிட்டநிலையில், 3 மாத சம்பளம் இன்னும் கைக்கு வரவில்லை என்று கூறி பேராசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திலேயே ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வேலையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களும் உடன் இணைந்து போராட்டத்தில் பங்குபெற்றுள்ளனர். இதனால் பல்கலைக்கழகப் பணிகள் முடங்கி உள்ளன.

அரசு தலையிட்டு இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Quarterly Exam Holiday : மாணவர்களே ரெடியா? காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்
மாணவர்களே ரெடியா? காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர்.! 45 லட்சம் முறைகேடு.? TVK அரசு மீது புகார்- அறப்போர் பரபரப்பு ஆதாரம்
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர்.! 45 லட்சம் முறைகேடு.? TVK அரசு மீது புகார்- அறப்போர் பரபரப்பு ஆதாரம்
DMK Master Plan : ‘உருவாகும் 3வது அணி’ கரப்பான் பூச்சி கட்சித் தலைவரை சந்தித்த கனிமொழி?
‘உருவாகும் 3வது அணி’ கரப்பான் பூச்சி கட்சித் தலைவரை சந்தித்த கனிமொழி?
MK Stalin: ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
Karthigai Deepam: தோத்துட்டேனு ஒத்துக்கிட்ட சுப்புலட்சுமி.. துப்பாக்கியால் சுடப்பட்ட ரேவதி! கார்த்திகை தீபத்தில் அடுத்து என்ன?
Karthigai Deepam: தோத்துட்டேனு ஒத்துக்கிட்ட சுப்புலட்சுமி.. துப்பாக்கியால் சுடப்பட்ட ரேவதி! கார்த்திகை தீபத்தில் அடுத்து என்ன?
Health Tips: காய்ச்சலுக்கு பிறகு நெஞ்சு வலியா?பலவீனமா அல்லது நிமோனியாவின் அறிகுறியா? விவரம் இதோ
காய்ச்சலுக்கு பிறகு நெஞ்சு வலியா?பலவீனமா அல்லது நிமோனியாவின் அறிகுறியா? விவரம் இதோ
Tata EVs: பட்ஜெட் தொடங்கி ப்ரீமியம் வரை..! டாடாவின் 4 புதிய மின்சார கார்கள் - ரேஞ்ச், விலை, லாஞ்ச் - முழு விவரம்
பட்ஜெட் தொடங்கி ப்ரீமியம் வரை..! டாடாவின் 4 புதிய மின்சார கார்கள் - ரேஞ்ச், விலை, லாஞ்ச் - முழு விவரம்
Kolathur MLA V S Babu Health : 7-வது நாளாக தொடரும் சிகிச்சை… கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி? மருத்துவமனை அறிக்கை
7-வது நாளாக தொடரும் சிகிச்சை… கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி? மருத்துவமனை அறிக்கை
Embed widget