மேலும் அறிய

சூப்பர் சம்பளத்தில் LIC-இல் 218 பணியிடங்கள்; ஆன்லைன் தேர்விற்கான தேதி அறிவிப்பு!

கடந்த ஏப்ரல் 4, 2020 அன்று ஆன்லைனில் எழுத்துத்தேர்வு நடத்தி, தகுதியுள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எனப்படும் எல்ஐசியில் உதவிப்பொறியாளர்கள் மற்றும் உதவி நிர்வாக அதிகாரிப் பணியிடங்களை நிரப்புவதற்கானத்  தேர்வு ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய மக்கள்  காப்பீடு செய்யவேண்டும் என்று நினைத்தாலே முதலில் அவர்களின் நினைவுக்கு வருவது எல்ஐசி மட்டும் தான். அந்தளவிற்கு மக்களின் நம்பிக்கையினை பல ஆண்டுகளாக பெற்றுள்ளது. மத்திய அரசின் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணிபுரிந்துவரும் நிலையில், உதவிப்பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக அதிகாரி என 218 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. உதவிப்பொறியாளர் (AE) பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிஇ, பி.டெக் அல்லது பி.ஆர்க், எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும் எனவும், உதவி நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை மற்றும் பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணியிடங்களுக்கு மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ள  நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

சூப்பர் சம்பளத்தில் LIC-இல் 218 பணியிடங்கள்; ஆன்லைன் தேர்விற்கான தேதி அறிவிப்பு!

மேலும் கடந்த ஏப்ரல் 4, 2020 அன்று ஆன்லைனில் எழுத்துத்தேர்வு நடத்தித் தகுதியுள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட தேதியில் தேர்வு நடைபெறவில்லை. இந்நிலையில் தான் மீண்டும் உதவிப்பொறியாளர் (Assistant Engineer) மற்றும் உதவி நிர்வாக அதிகாரிக்களுக்கான ( Assistant administrative officer) ஆன்லைன் தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 28, 2021 அன்று நடைபெறும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் மேலும் புதுப்பிப்புகளுக்கு  எல்ஐசியில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான - licindia.in என்பதில் தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. எனவே இந்நேரத்தில் எப்படி தேர்வு நடைபெறும் என இங்கு நாம் தெரிந்துகொள்வோம்.

எல்ஐசியில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு நடைபெறும் முறை:

எல்ஐசியில் உதவிப்பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக அதிகாரியாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் முதன்மைத்தேர்வு மற்றும் பிரதானத்தேர்வு ( preliminary and main exam) நடைபெறும். முதலில்,முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்தத் தேர்விற்கு தகுதியாவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைத்தேர்வில் 100 கேள்விகள் multiple-choice questions ஆக கேட்கப்பட்டிருக்கும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இதில் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே  அடுத்ததாக பிரதானத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

சூப்பர் சம்பளத்தில் LIC-இல் 218 பணியிடங்கள்; ஆன்லைன் தேர்விற்கான தேதி அறிவிப்பு!

பிரதானத் தேர்வின் வடிவம் ( Main exam format)

முதன்மை தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களுக்கு பிரதான தேர்வு நடைபெறும். MCQs and descriptive type ல் கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இதற்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.  முதன்மை மற்றும் பிரதானத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அடுத்தப்படியாக நேர்காணல், ஆவண சரிப்பார்ப்பு மற்றும் மருத்துவத்தேர்வு நடைபெறும். இதில் அனைத்தும் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே எல்ஐசியில் உதவிப்பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக அதிகாரியாக பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.57 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்:ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
Embed widget