மேலும் அறிய

JEE 2025 NTA: மாணவர்கள் ஷாக்..! ஜே.இ.இ., தேர்வில் “இனி அந்த ஆப்ஷன் கிடையாது” - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

JEE Main 2025 NTA: ஜே.இ.இ., தேர்வு முறையில் வழங்கப்பட்டு வந்த தளர்வுகளை தேசிய தேர்வு முகமை திரும்பப் பெற்றுள்ளது.

JEE Main 2025 NTA: ஜே.இ.இ., தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படுவதாக, தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.இ.இ., தேர்வு முறையில் மாற்றம்:

JEE எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள முதன்மை தேர்வில்,  பிரிவு B-யில் கேள்விகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. முந்தைய ஆண்டுகளில், தேர்வர்கள் பிரிவு B-ல் கேட்கப்படும் பத்தில் ஏதேனும் ஐந்து கேள்விகளை தேர்வு செய்து பதிலளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2025 முதல், அந்த வாய்ப்பு இனி கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் JEE முதன்மை தாள் 1 (BE/BTech), தாள் 2A (BArch) மற்றும் தாள் 2B (BPlanning) ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.

தளர்வுகளை திரும்பப் பெற்ற தேசிய தேர்வு முகமை:

கொரோனா தொற்று நோய் பரவிய காலகட்டத்தில், ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கான தற்காலிக தீர்வாகவே பத்தில் 5 கேள்விகளை தேர்வு செய்து பதிலளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நடைமுறை 2020 முதல் 2024 வரை நடைமுறையில் இருந்தது. மே 2023 இல் உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா இனி உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக இருக்காது என்று அறிவித்ததைத் தொடர்ந்து, தளர்வுகளை நிறுத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. அதன்படி, தேர்வு அதன் முந்தைய முறைக்கே திரும்பும், அங்கு பிரிவு B ஒவ்வொரு பாடத்திற்கும் ஐந்து கட்டாயக் கேள்விகளைக் கொண்டிருக்கும். அதில் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல்  அனைத்து கேள்விகளுக்கும் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும்.

விரைவில் ஆன்லைன் பதிவு:

JEE Main 2025க்கான ஆன்லைன் பதிவு செயல்முறை விரைவில் தொடங்கும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.inஐ, சமீபத்திய தகவல்களுக்கும், பதிவு மற்றும் தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான ஆதாரங்களை அணுகவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜே.இ.இ., தேர்வு

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி ஆகியவற்றில் இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கை, தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஜே.இ.இ. தேர்வானது, முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இந்த நிலையில் தான், ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் வழங்கப்பட்டு வந்த தளர்வுகளை திரும்பப் பெறுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

உயர்கல்வி கனவை நனவாக்க ரூ.2 லட்சம்: தமிழக BC, MBC மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை!
உயர்கல்வி கனவை நனவாக்க ரூ.2 லட்சம்: தமிழக BC, MBC மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை!
14,829 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா ஆபத்து: மூடுவிழாவைத் தடுக்க உட்கட்டமைப்பை மேம்படுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
14,829 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா ஆபத்து: மூடுவிழாவைத் தடுக்க உட்கட்டமைப்பை மேம்படுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
மாதந்தோறும் உதவித்தொகை; : தமிழ் வழியில் ஆன்லைன் அறிவியல் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?
மாதந்தோறும் உதவித்தொகை; : தமிழ் வழியில் ஆன்லைன் அறிவியல் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Enquiry: 246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
Morning Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Trump Vs Iran: ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
TVS Orbiter on EMI: குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
Maruti Dzire CNG AMT: இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
Karuppu Muruganandam : ’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
Embed widget