மேலும் அறிய

JEE Main 2024: ஜேஇஇ மெயின் தேர்வு இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்; எப்படி விண்ணப்பிக்கலாம்?

ஜேஇஇ முதன்மைத் தேர்வு இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வர்கள் மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வர்கள் மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.

ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேரலாம். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றோர், புகழ்பெற்ற ஐஐடி கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். ஆண்டுதோறும் இந்தத் தேர்வு 2 முறை நடத்தப்படும் நிலையில், 2ஆம் அமர்வுக்கான நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. 

மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

ஜேஇஇ முதன்மைத் தேர்வு இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வர்கள் மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தையும் அன்று இரவு 11.50 மணிக்குள் செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

ஏற்கெனவே ஜேஇஇ முதன்மைத் தேர்வு முதலாம் அமர்வுக்கு விண்ணப்பித்து, விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்திய தேர்வர்கள் பழைய விண்ணப்ப எண்ணையும் கடவுச் சொல்லையும் உள்ளிட்டு, உள்ளே செல்லலாம்.

தேர்வுத் தாள், தேர்வு மொழி, மாநில குறியீட்டு எண், தேர்வு மையங்கள், கல்வித் தகுதி விவரங்கள் ஆகிய தகவல்களைப் பதிவிட வேண்டும். மறக்காமல், தேர்வுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.  

ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள், புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். ஒரு தேர்வர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பல முறைகள் விண்ணப்பித்தால், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

* அதில் JEE Main 2024 registration என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். 

* அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு, லாகின் செய்யவும். 

* அதில் விண்ணப்பப் பதிவை மேற்கொண்டு, தேவையான ஆவணங்களை உள்ளிட்டு பதிவேற்றம் செய்யவும். 

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

  • புகைப்படம் மற்றும் கையெழுத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பி
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த இணைய பேங்க்கிங் வசதி
  • 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவர்கள், அனுமதிச் சீட்டு நகலைக் காண்பிக்கலாம்)
  • சாதிச் சான்றிதழ்

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

ஆண்கள் பிரிவில் ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு- இந்திய மையங்களில் எழுத – ரூ. 1000, இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு – ரூ. 5000

பெண்கள் பிரிவில் ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு- இந்திய மையங்களில் எழுத – ரூ. 800, இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு – ரூ. 4000

எஸ்சி, எஸ்டி, மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய பிரிவினருக்கு- இந்திய மையங்களில் எழுத – ரூ. 500, இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு – ரூ. 2500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.ac.in/images/public-notice-for-jee-main-session-2.pdf

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
Uttarakhand Accident:  ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
Uttarakhand Accident:  ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக யுவ புரஸ்கார் விருது..  தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமனுக்கு அறிவிப்பு!
”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக யுவ புரஸ்கார் விருது.. தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமனுக்கு அறிவிப்பு!
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட்  தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட் தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
T20 World Cup 2024: சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!
சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Embed widget