மேலும் அறிய

சர்வதேச கடிதம் எழுதும் போட்டி; பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - ரூ.50 ஆயிரம் பரிசு, சான்றிதழ்

கடிதம் 800 வாா்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் கடிதம் எழுதலாம்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டிக்கு 9 முதல் 15 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான Universal Postal Union (UPU)  என்ற பெயரில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. 

இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் ( Superintendent of Post Offices ) கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி உள்ளதாவது:

150 வருட பழமையான உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் (UPU), உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு 8 தலைமுறைகளுக்கும் மேலாக சேவையாற்றி வருகிறது. அப்போதில் இருந்து உலகம் மாறிக் கொண்டே வருகிறது. இந்த சூழலில், எதிர்கால சந்ததியினருக்கு அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நம்பும் உலகத்தைப் பற்றி ஒரு கடிதம் எழுத வேண்டும்.

எந்த மொழியில் எழுதலாம்?

இதற்காக சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி அஞ்சல் துறை சார்பில் நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டியில் 9 வயது முதல் 15 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். கடிதம் 800 வாா்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் கடிதம் எழுதலாம்.

இந்தப் போட்டியில் தொலைத்தொடர்பு வட்ட அளவில் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 25 ஆயிரம், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

ரூ. 50 ஆயிரம் பரிசு

அதேபோல தேசிய அளவிலான போட்டியில் முதல் இடம் பிடிப்பவருக்கு ரூ. 50 ஆயிரம், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு ரூ. 25 ஆயிரம், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு ரூ. 10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.

தேசிய அளவில் சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, எழுதியவர்கள் சர்வதேசப் போட்டிக்கு அனுப்பப்படுவர். இந்தக் கடித போட்டி பள்ளி அளவில் ஜனவரி 31ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும். அதில் தேர்வு செய்யப்பட்ட கடிதங்களை விண்ணப்பத்துடன், எழுதிய மாணவரின் புகைப்படம், பிறந்த தேதி அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது பள்ளியில் வழங்கிய பிறந்த தேதிக்கான சான்று ஆகியவற்றுடன் அஞ்சல் கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு 638 001 என்ற முகவரிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

போட்டி நடைபெறும் இடம், தேதி ஆகியவை அஞ்சல் துறையின் சாா்பில் பிறகு அறிவிக்கப்படும். கடிதப் போட்டிக்கான தலைப்பு மற்றும் பிற விவரங்களை https://www.indiapost.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம். அல்லது ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என ஈரோடு அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

தொலைபேசி எண்: 0424-2258066

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
Embed widget