மேலும் அறிய

உயர்கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஐந்தாண்டுகளில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 18.2% ஆக அதிகரித்திருப்பதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் உயர்கல்வியில் சேரும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை 18.2% ஆக அதிகரித்துள்ளதாக  2019 2020ம் ஆண்டுக்கான அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் (AISHE) அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. அதன்படி, கடந்த வியாழக்கிழமையன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், 2019 20ம் ஆண்டுக்கான அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் உயர்கல்வியில் சேரும் மாணாக்கரின் எண்ணிக்கை 11.4% ஆக அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக பெண் பிள்ளைகள் உயர்கல்வியில் சேரும் விகிதம் 18.2% ஆக அதிகரித்துள்ளது. 


உயர்கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
இதற்கு பிரதமர் மோடி தொடர்ச்சியாக பெண் கல்வி, மகளிர் மேம்பாட்டில் செலுத்தும் கவனமே காரணம். மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் பட்டியிலன மாணாக்கர் உயர்கல்வியில் சேர்வதும் அதிகரித்துள்ளது எனக் கூறினார். உயர்கல்வித் துறை செயலர் அமித் காரே கூறும்போது, (AISHE) அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையின் பத்தாவது அறிக்கை இது. தொடர்ச்சியாக மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதன் எண்ணிக்கை அதிகரிப்பதும், கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பெண் பிள்ளைகள் உயர்கல்வியில் இணையும் விகிதம் அதிகரிப்பதும் தேசத்துக்கு பெருமை தரும் விஷயம். தேசிய கல்விக் கொள்கை 2020ன் இலக்கான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், கல்வித் தரத்தை உயர்த்துதல், சமவாய்ப்புகளை வழங்குதல் என்ற இலக்கை அடைய இந்தப் போக்கு மிகவும் முக்கியமானது என்றார்.


உயர்கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழகம் இரண்டாவது இடம்:
அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையின்படி நாட்டிலேயே அதிகளவில் உயர்கல்வியில் மாணவர்கள் இணையும் மாநிலமாக சண்டிகர் உள்ளது. அங்கு ஒட்டுமொத்த பதிவு 52.% ஆக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வியில் இணைவோரின் ஒட்டுமொத்த விகிதாச்சாரம் 514% ஆக உள்ளது. அதேபோல், தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 51.0 சதவீதமாக இருக்கின்றது. நாட்டிலேயே சிக்கிம் மாநிலத்தில்தான் உயர்கல்வியில் சேரும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கிறது. அங்கு சராசரியாக 67.6% பெண்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர். அடுத்தபடியாக சண்டிகரில் 65.6% உயர்கல்வியில் சேர்கின்றனர். கேரளாவில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 44.7% ஆக இருக்கிறது.
இதுவே, அண்டை மாநிலமான கேரளாவில் 38.8% ஆகவும், கர்நாடகாவில் 32.0 சதவீதமாகவும், ஆந்திராவில் 35.2 சதவீதமாகவும் இருக்கிறது. இருப்பதிலேயே டாமன் டயு யூனியன் பிரதேசத்தில் தான் இந்த விகிதாச்சாரம் 6.1% என்றளவில் மிகமிகக் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பெண்கள் உயர்கல்வி பெறுவது வீட்டுக்கும், நாட்டுக்கும் பயனளிக்கும் என ஆன்றோர் பலர் கூறியுள்ளனர் அந்த கனவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெண் கல்வி உரிமை எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு அவர்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான், இந்த விகிதமானது இன்னும் அதிகரிக்கும். ஊரக பகுதிகளில் இருந்து இன்னும் நிறைய பெண்கள் உயர்கல்வியை நாடி வருவர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி- எழும் கேள்விகள்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி- எழும் கேள்விகள்
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Maruti Ciaz: பட்ஜெட் விலையில் கார் வாங்கனுமா? Maruti Ciaz விலை, மைலேஜ் எப்படி?
Maruti Ciaz: பட்ஜெட் விலையில் கார் வாங்கனுமா? Maruti Ciaz விலை, மைலேஜ் எப்படி?
Embed widget