மேலும் அறிய

425 காலிப் பணியிடங்களை நிரப்பாமல் அண்ணா பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது? உயர் நீதிமன்றம்

அண்ணா பல்கலைக் கழகத்தில் 425 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 425 இடங்களை நிரப்பாமல் எப்படி செயல்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பலகலைக்கழக தரப்பில், “பணி இடங்களை நிரப்புவது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நிரபப்படாமல் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 2010 – 2011 ஆம் ஆண்டுகளில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில்  ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இவர்கள் தரப்பில், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல் புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்காக  வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்றும்,  காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர் சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன ? 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல்? தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய தயங்குவது ஏன் ?  உள்ளிட்ட  பல கேள்விகளை எழுப்பினர். 

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  பதில் மனுவில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுச்வான AICTE இன் விதிமுறையின் படி உதவி பேராசிரியர்கள்,  இணை பேராசிரியர்,  பேராசிரியர் என 1745 பேர் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும்,  ஆனால் 981 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என குறிபிடப்பட்டிருந்தது. 

காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும் இவ்வளவு காலி பணியிடங்களை வைத்துக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது ? என புரியவில்லை எனவும் நீதிபதிகள் மிகவும் வருத்ததுடன் கேள்வி எழுப்பினர். 

425 காலி இடங்களை வைத்துக் கொண்டு எப்படி பல்கலைக்கழகம்  செயல்படுகிறது ? இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் ? என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். வழக்கின் அடுத்தகட்ட  விசாரணை வரும்  5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் அதற்குள் பதில் அளிக்கத் தவறினால் பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget