மேலும் அறிய

''தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; விரைவில் மாநில கல்விக்கொள்கை'' - அமைச்சர் பொன்முடி சொன்ன தகவல்

தேசியக் கல்விக் கொள்கைக்கு எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என்ற கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கைக்கு எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என்ற கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். விரைவில் மாநில கல்விக்கொள்கை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நுண்ணுயிரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்  அமைச்சர் பொன்முடி பேசும்போது கூறியதாவது:

’’எந்த துறை மாணவர்களாக இருந்தாலும் Inter Disciplinary படிப்புகள் முக்கியம். ஒரு காலத்தில் சமையல் கட்டில் மட்டுமே பெண்கள் இருந்தனர். அந்த நிலையை மாற்றி துறைத் தலைவராகவும் கல்லூரி முதல்வராகவும்  பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாகவும் பெண்கள் உயர்ந்திருக்கின்றனர்.

அந்தக் காலத்தில் எத்தனை பேர் படித்தனர்? அதில் எந்த சாதியினர் அதிகமாக படித்தனர்? வேலை வாய்ப்புகள் எந்தப் பிரிவினருக்கு அதிகமாக கிடைத்தது? பெண்களுக்கு அதில் இருந்த பிரதிநிதித்துவம் ஆகிய அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


'தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; விரைவில் மாநில கல்விக்கொள்கை'' - அமைச்சர் பொன்முடி சொன்ன தகவல்

பெண்கள் படிக்க வேண்டும், கல்லூரிக்குச் சென்று உயர் கல்வி பெற்று அரசுப் பதவிகளில் அமர வேண்டும். தொழில் முனைவோர்களாகவும் மாற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் 'நான் முதல்வன்' திட்டம். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு எனப் பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப, நடைமுறைக்கு ஏற்ற வகையில் காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கக் குழு அமைக்கப்பட்டு, புதிய பாடத்திட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விரைவில் முதுகலை மாணவர் சேர்க்கை தொடங்கும். இதற்கான அறிவிப்பு  ஓரிரு நாட்களில் வெளியாகும்.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்!

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. மத்தியக் கல்வி அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமான எதிர்ப்பை தமிழ்நாடு முதல்வரே பதிவு செய்துள்ளார். எதற்காக எதிர்க்கிறோம் என்ற காரணங்களையும் அதில் சொல்லி இருக்கிறோம். சுபாஸ் சர்க்கார் கல்வித்துறை இணை அமைச்சர் என்பதால், அவருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் மாநில கல்விக்கொள்கையை உருவாக்கி வருகிறோம். அவை விரைவில் வெளியாகி உள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும். 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதே போதுமானது. 

3-வது மொழி எதற்கு?

தாய்மொழி தமிழும், சர்வதேச மொழி ஆங்கிலமும் இருக்கும் போது 3-வது மொழி எதற்கு? 3-வது மொழி கற்க வேண்டுமானால் கற்றுக்கொள்ளலாம். ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான் அமலில் இருக்கும்’’. 

இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: Puthumai Penn scheme: மாதாமாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம்: எதற்கு, யாருக்கு, ஏன்? - ஓர் அலசல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு
இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Embed widget