மேலும் அறிய

சிக்கலில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: ஆசிரியர் பயற்சி நிறுவனங்கள் மூடல்!

இரண்டாண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில்  தேர்ச்சி பெறும் மாணவர்கள் 1முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தகுதியைப் பெறுவர். 

கடந்த 2018 கல்வியாண்டு முதல் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வெறும் 2% சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு 600க்கு மேற்பட்ட தொடக்க கல்வி பட்டயப் படிப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால், 2018ல், தேர்வு முறையில் கொண்டு வரப்பட்ட சில மாற்றங்களின் காரணமாகவும், தொடக்க கல்வி பட்டயப் படிப்பு முடித்தாலும் பணி கிடைக்காத காரணித்தினாலும் தற்போது 100க்கும் குறைவான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மட்டுமே  செயல்பட்டு வருகின்றன.   

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்கு சேர்க்கை பெற விரும்புவோர் மேல்நிலைத் தேர்வில் ( Higher Secondary ) தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும் . மேலும் , பொதுப் பிரிவினர் ( OC ) குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் ( 600 / 1200-300 / 600 ) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / ஆதி திராவிடர் / ஆதி திராவிடர் அருந்ததியர் / பழங்குடியினர் ( BC / BCM / MBC / SC / SCA / ST ) பிரிவினர் குறைந்தபட்சம் 45 விழுக்காடு ( 540 / 1200-270 / 600 ) மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்   

இரண்டாண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில்  தேர்ச்சி பெறும் மாணவர்கள் 1முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தகுதியைப் பெறுவர். 

கல்வித்துறை வட்டாராங்கள் இது குறித்து கூறுகையில், " ஒரு காலத்தில் கிராமப்புற மாணவர்களின் கனவு உலகமாக ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக  தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு  மதிப்பெண் அடிப்படையில் எந்த பணியும் நிரப்பப்படவில்லை. இதனால், இந்த படிப்புக்கான தேவையே குறைந்து வருகிறது.  மேலும், 2018ல் இருந்து பட்டயப் படிப்புத் தேர்வு மதிப்பீடு முறையில் கொண்டுவரப்பட்ட சில மாற்றங்கள் மாணவர்களின் தேர்வு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ளது. 2018ல் இருந்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இருந்து 2% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.   

கொரோனா பெருந்தொற்று நோய்த் தாக்குதல், அதன் தொடர்ச்சியான முடக்கநிலை அமல் காரணமாக, கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டன. டிஜிட்டல் இடைவெளி அதிகரிப்பதால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் உள்ள மாணவர்ககள் அதிகம் பாதிப்படைந்தனர்" என்று தெரிவித்தனர். 

முன்னதாக, வெளியிடப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில், ஆசிரியர்கள் , வலுவான , வெளிப்படையான நடைமுறைகளின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (NCERT),  மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (SCERT)  ஆகிய அமைப்புகள்எல்லா பிராந்தியங்கள் மற்றும் மட்டத்திலுமான ஆசிரியர்கள் மற்றும் நிபுண அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறைத் தரம் (National Professional Standards for Teachers (NPST)) என்ற ஒரு பொதுவான அமைப்பு உருவாக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவுடன் ஆலோசித்து புதிய மற்றும் விரிவான தேசிய ஆசிரியர் கல்வித் திட்டக் கட்டமைப்பு, 2021 (National Curriculum Framework for Teacher Education, NCFTE 2021), தேசிய கல்வி மற்றும் பயிற்சிக் குழுவால் வடிவமைக்கப்படும். 2030-க்குள் கற்பித்தலுக்கான குறைந்தபட்ச பட்டத் தகுதி நான்கு வருட பி எட் பட்டமாக இருக்கும். தரம் குறைந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.   

இதற்கிடையே, 2020- 21 கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் , ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் , அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம்  28ம் தேதி வரை வரவேற்கப்பட்டன. 

உதவி பெறும் மற்றும் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை விவரம் : நிதி உதவி / சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அந்தந்த நிறுவனங்களின் இணையதள முகவரியில் Online வாயிலாக தனித்தனியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது . நிதி உதவி/சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் இணையதள முகவரி www.tnscert.org -ல் வெளியிடப்பட்டது.      

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget