மேலும் அறிய

அனைவருக்கும் சான்றிதழ்; பள்ளி மாணவர்களுக்கு நடன, இசை, ஓவிய போட்டிகள்- பங்கேற்பது எப்படி?

போட்டிகளில்‌ கலந்து கொள்ளும்‌ மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும்‌, மாவட்ட போட்டியில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்‌ வழங்கப்படும்‌.

கலை பண்பாட்டுத் துறையின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ செயல்படும்‌, தமிழ்நாடு ஐவகர்‌ சிறுவர்‌ மன்றம் 5 முதல்‌ 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு, கலைப்‌ பயிற்சிகள்‌ அளித்து வருகிறது. சிறார்களிடையே மறைந்து கிடக்கும்‌ கலைத் திறன்களை வெளிக்கொணரும்‌ வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ குரலிசை, பரதநாட்டியம்‌, ஓவியம்‌ மற்றும்‌ கிராமிய நடனம்‌, ஆகிய நான்கு கலைப்‌ பிரிவுகளிலும்‌, 5-8, 9-12, 13-16 வயதுப்‌ பிரிவுகளிலும்‌ போட்டிகள்‌ நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்‌, சான்றிதழ்களும்‌ வழங்கி ஊக்குவித்து வருகிறது.

 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில்‌ மாவட்ட அளவில்‌ முதல்‌ பரிசு பெற்ற சிறார்களுக்கு மாநில அளவிலான கலைப்‌ போட்டிகள்‌ நடத்தி, பரிசுத்‌ தொகையும்‌, பாராட்டு சான்றிதழ்களும்‌ வழங்கப்படவுள்ளது.

ஆக.24 அன்று போட்டிகள்

அவ்வகையில்‌, முதற்கட்டமாக 5-8, 59-12, 13-16 என்ற மூன்று வயது வகைப்‌ பிரிவில்‌ சென்னை மாவட்ட அளவிலான கலைப்‌ போட்டிகள்‌ 24.08.2024 அன்று குரலிசை, பரதநாட்டியம்‌, ஓவியம்‌ மற்றும்‌ கிராமிய நடனம்‌ ஆகிய கலைப்‌ போட்டிகள்‌ நடைபெறவுள்ளது. கலைப்‌ போட்டிகள்‌ அனைத்தும்‌ சென்னை- 28, இராஜா அண்ணாமலைபுரம்‌ டாக்டர்‌ டி.ஜி.எஸ்‌.தினகரன்‌ சாலையிலுள்ள, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில்‌ காலை 9.00 மணி முதல்‌ நடைபெற உள்ளது.

போட்டிகளில்‌ கலந்து கொள்ளும்‌, மாணவ, மாணவிகளின்‌ பெயர்‌, வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின்‌ பெயர்‌ ஆகிய விவரங்களுடன்‌ வயது சான்றிதழ்‌ கொண்டு வரவேண்டும்‌. பரதநாட்டியம்‌, கிராமிய நடனம்‌, குரலிசை ஆகிய கலை போட்டிகளின்‌ 5-8, 9-12 வயது பிரிவு மாணவ, மாணவியருக்கு காலை 9.30 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணி வரையிலும்‌, 13-16 வயது வகை மாணவ, மாணவியருக்கு பிற்பகல்‌ 2.00 மணி முதல்‌ 4.30 மணி வரையிலும்‌, ஓவியப்‌ போட்டிகள்‌ காலை 10.00 மணி முதல்‌ 1.00 மணி வரையிலும்‌ நடைபெறும்‌.

போட்டிகளில்‌ கலந்து கொள்ளும்‌ மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும்‌, மாவட்ட போட்டியில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்‌ வழங்கப்படும்‌.

 இப்போட்டிக்கான விதிமுறைகள்‌

1. பரதநாட்டியம்‌ (செவ்வியல்‌)

பாத நாட்டியம்‌, குச்சிப்புடி, மோகினி ஆட்டம்‌ போன்ற நடனங்கள்‌ ஆடலாம்‌.

முழு ஒப்பனை மற்றும்‌ உரிய உடைகளுடன்‌ நடனம்‌ இருத்தல்‌ வேண்டும்‌, திரைப்படப்‌ பாடல்களுக்கான நடனங்கள்‌ (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள்‌ தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள்‌ மற்றும்‌ குழு நடனங்களுக்கு அனுமதியில்லை.

குறுந்தகடுகள்‌ / பென்‌ டிரைவ்‌ ஆகியவற்றினை பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌.

இவற்றை போட்டியில்‌ பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்‌.

சூறைந்த பட்சம்‌ 3 நிமிடங்கள்‌, அதிக பட்சம்‌ 5 நிமிடங்கள்‌ வரை நடனமாட அனுமதிக்கப்படும்‌.

2. கிராமிய நடனம்‌ (நாட்டுப்புறக்‌ கலை)

தமிழகத்தின்‌ மாண்பினை வெளிப்படுத்தும்‌ கிராமிய நடனங்கள்‌ ஆடலாம்‌.

முழு ஒப்பனை மற்றம்‌ உரிய உடைகளுடன்‌ நடனம்‌ இருத்தல்‌ வேண்டும்.‌ திரைப்படப்‌ பாடல்களுக்கான நடனங்கள்‌ (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள்‌ தவிர்த்து) மற்றும்‌ குழு நடனங்கள்‌ அனுமதியில்லை. குறுந்தகடுகள்‌ / பென்‌ டிரைவ்‌

பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌. இவற்றை போட்டியில்‌ பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்‌. குறைந்த பட்சம்‌ 3 நிமிடங்கள்‌, அதிக பட்சம்‌ 5 நிமிடங்கள்‌ வரை நடனமாட அணுமதிக்கப்படும்‌.

3. குரலிசை

கர்நாடக இசை பாடல்கள்‌, தேசியப்‌ பாடல்கள்‌, சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள்‌, நாட்டுப்புறப்‌ பாடல்கள்‌ மட்டுமே பாட வேண்டும்‌. மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள்‌, பிற மொழி பாடல்கள்‌, குழுப்பாடல்களுக்கு அனுமதியில்லை.

குறைந்த பட்சம்‌ 3 நிமிடங்கள்‌, அதிக பட்சம்‌ 5 நிமிடங்கள்‌ வரை பாட அனுமதிக்கப்படும்‌.

4. ஓவியம்‌

40x 30 செ.மீ அளவுள்ள ஓவியத்‌ தாள்களையே பயன்படுத்த வேண்டும்‌.

பென்சில்‌, கிரையான்‌, வண்ணங்கள்‌, போஸ்டர்‌ கலர்‌, வாட்டர்‌ கலர்‌ , ஆயில்‌ கலர்‌, பெயிண்டிங்‌ என எவ்வகையிலும்‌ ஓவியங்கள்‌ அமையலாம்‌. ஓவியத்தாள்‌, வண்ணங்கள்‌ தூரிகைகள்‌ உட்பட தங்களுக்குத்‌ தேவையானவற்றைப்‌ போட்டியாளர்களே கொண்டு வருதல்‌ வேண்டும்‌. குழுவாக ஒவியங்கள்‌ வரைய அனுமதியில்லை. ஒவ்வாரு வயது வகைக்கும்‌ தனித்‌ தனியாக தலைப்புகள்‌ போட்டி தொடங்கும்‌போது அறிவிக்கப்படும்‌

5. வயது விவரம்‌ (1 . 6 . 2024 அன்று உள்ளபடி 16 வயது)

அ. 5 முதல்‌ 8 வயது பிரிவு - 01.06.2016 முதல்‌ 31.05.2019 வரை

ஆ. 9 முதல்‌ 12 வயது பிரிவு - 01.06.2012 முதல்‌ 30.05.2015 வரை

ஒ. 13 முதல்‌ 16 வயது பிரிவு - 01.06.2008 முதல்‌ 30.05.2011 வரை

மேலும்‌, விவரங்களுக்கு 044-28192152 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Embed widget