மேலும் அறிய

மாணவர்களுக்கு ஏஐ கட்டாயம்! 3ஆம் வகுப்பு முதல் தொழில்நுட்ப புரட்சி- அரசின் அதிரடி திட்டம்!

2026- 27ஆம் கல்வியாண்டு முதல், 3ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவின் எதிர்கால இளம் தலைமுறையை தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்திற்கு தயார்படுத்தும் வகையில், மத்தியக் கல்வி அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, 2026- 27ஆம் கல்வியாண்டு முதல், 3ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சிபிஎஸ்இ பள்ளி கல்விச் செயலாளர் சஞ்சய் குமார் இதற்கான நெறிமுறைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசும்போது, "நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான ஆசிரியர்களை அணுகி, அவர்களுக்கு AI தொடர்பான கல்வி கற்பிப்பதற்கான பயிற்சியை அளிப்பது சவாலான ஒன்றுதான். எனினும் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த தொழில்நுட்பத்துடன் சரியாக இணைந்து செயல்பட நாம் விரைவாக செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

ஆரம்பகட்ட திட்டங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி

ஆசிரியர்கள் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி பாடம் நடத்த, ஒரு முன்னோடித் திட்டம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்திற்காக கற்பவர்களையும் கல்வியாளர்களையும் தயார்படுத்துவதே இதன் நோக்கம்.

தற்போது, 18,000 சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் AI ஒரு திறன் பாடமாக கற்பிக்கப்படுகிறது. 15 மணிநேர மாட்யூலாக ஏஐ கற்பிக்கப்படுகிறது. அதேபோல, 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏஐ ஒரு விருப்பப் பாடமாக உள்ளது.

அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை

2019ஆம் ஆண்டு முதல், இன்டெல், ஐபிஎம் மற்றும் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) ஆகியவற்றின் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஏஐ பயிற்சி பெற்றுள்ளனர். AI தொடர்பான பாடங்களில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு 9- 10 ஆம் வகுப்புகளில் 7.9 லட்சம் மாணவர்களும், 11- 12 ஆம் வகுப்புகளில் 50,000 க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஏஐ படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது முறையே சுமார் 15,000 மற்றும் 2,000 மாணவர்கள் மட்டுமே ஆர்வத்துடன் சேர்ந்தனர்.

கல்வி நிறுவனங்கள் தொழில்நுட்பம் சார்ந்த கற்றலை அதிக அளவில் ஏற்றுக்கொள்வதால், ஏஐ தற்போது அடிப்படை எழுத்தறிவு என்ற நிலைக்கு மாறி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அடிப்படை எழுத்தறிவு

சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஏஐ ஒரு சிறப்புப் படிப்பாக இருக்காமல், ஓர் அடிப்படைத் திறனாக மாற வேண்டும். இன்றைய மூன்றாம் வகுப்பு மாணவர் 2035-ல் பள்ளிப் படிப்பை முடிக்கும்போது, ஏஐ கூடுதல் திறமையாக இருக்காது. அது ஓர் அத்தியாவசியத் தேவையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உங்க வீட்டு பிள்ளைகளிடம் கலைத்திறமை இருக்கா? - இதோ ஒரு சூப்பர் வாய்ப்பு!
உங்க வீட்டு பிள்ளைகளிடம் கலைத்திறமை இருக்கா? - இதோ ஒரு சூப்பர் வாய்ப்பு!
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
காரைக்கால் சனிப்பெயர்ச்சி: விடுமுறை அறிவிப்பு! தேர்வுகள் இருக்குமா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! - முழு விபரம்
காரைக்கால் சனிப்பெயர்ச்சி: விடுமுறை அறிவிப்பு! தேர்வுகள் இருக்குமா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! - முழு விபரம்
கணிதம் இனி கரும்பாக இனிக்கும்; ஏஐ மூலம் ஈஸியாக தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எப்படி?
கணிதம் இனி கரும்பாக இனிக்கும்; ஏஐ மூலம் ஈஸியாக தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எப்படி?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
Skoda Discount: இந்தா புடி..! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி - கைலாக் தொடங்கி கோடியாக் வரை - எந்த காருக்கு எவ்வளவு?
Skoda Discount: இந்தா புடி..! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி - கைலாக் தொடங்கி கோடியாக் வரை - எந்த காருக்கு எவ்வளவு?
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
Embed widget