![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
College Admission: கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்படுவதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
![College Admission: கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர அவகாசம் மீண்டும் நீட்டிப்பு Arts, Science and Engineering Colleges admission deadline Extended again after CBSE 12th result 2022 College Admission: கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர அவகாசம் மீண்டும் நீட்டிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/7f665cf0b7320419922c277c2f7f86a91657372432_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்படுவதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ மாணவர்கள் பொதுத் தேர்வு முடிவுகளை அறிய முடியாமலும், கல்லூரியில் சேர முடியாமலும் தவித்து வந்தனர்.
இச்சூழலில், நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர அவகாசம் மீண்டும் ஜூலை 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னையில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசும்போது, பொறியியல் மற்றும்163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்படுவதாகவும் சிபிஎஸ்இ முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை https://tngasa.org/, https://tngasa.in/என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டண விவரம்
விண்ணப்பக் கட்டணம் - ரூ.48/, பதிவுக் கட்டணம் - ரூ.2.
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் - ரூ.2/- மட்டும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்துவது எப்படி?
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Credit Card/ Debit Card/ Net Banking மூலம்
இணையதள வாயிலாகச் செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில் 27/06/2022 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 7 கடைசித் தேதியாக இருந்தது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கக் கால அவகாசம் கால வரையறையின்றி நீட்டிக்கப்பட்டது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர அவகாசம் ஜூலை 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)