மேலும் அறிய

ஆதிதிராவிட, பழங்குடி பள்ளி, கல்லூரி விடுதி மாணவர் சேர்க்கை: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கையில் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கையில் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. 

அரசு அலுவலர்‌


மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ - தலைவர்‌
பழங்குடியினர்‌ நல அலுவலர்‌
அப்பகுதியில்‌ உள்ள ஒரு - உறுப்பினர்‌
பள்ளித்தலைமை ஆசிரியர்‌ அல்லது கல்லூரி முதல்வர்‌

மாவட்ட தலைநகர்‌ விடுதிகளுக்கு - உறுப்பினர்‌ 
மாவட்ட கல்வி அலுவலர்‌ மற்ற விடுதிகளுக்கு கல்வி ஆய்வாளர்‌


அரசு அலுவலர் அல்லாதோர்‌

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ - 1
ஆதிதிராவிடர்‌ இனத்தைச்‌ சார்ந்த உறுப்பினர்கள்‌- 2

1. தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ பிற்படுத்தப்பட்ட அல்லது ஆதிதிராவிடரல்லாத வகுப்பினராயிருப்பின்‌ மற்ற இருவரும்‌ ஆதிதிராவிடராயிருப்பர்‌.

2 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ ஆதிதிராவிடராயிருப்பின்‌ மூன்றாவது உறுப்பினர்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினராயிருக்க வேண்டும்‌.

3. தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ அமைச்சர்‌ பதவி வகிக்கும்‌ காலத்தில்‌ அவரின்‌ கருத்திற்கேற்ப ஒருவரை நியமிக்கலாம்‌. தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ பதவி இடம்‌ காலியாக இருந்தால்‌ மாவட்ட ஆட்சியரே ஒருவரை நியமிக்கலாம்‌. மேற்கண்ட ஆலோசனைக்‌ குழுவினை (Advisory committees for selection of students for admission into Government hostels) அமைக்கும்‌ அதிகாரம்‌ அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக் குழுவின்‌ ஆயுட்காலம்‌ மூன்று ஆண்டுகள்‌ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ 1324 விடுதிகள்‌ இயங்கி வருகின்றன. இவ்விடுதிகளை மேம்படுத்திடும்‌ விதமாகவும்‌, விடுதியினை கணினிமயமாக்கும்‌ நோக்கிலும்‌, விடுதி மேலாண்மை அமைப்பு (Hostel Management System) என்ற செயலி உருவாக்கம்‌ செய்யப்பட்டு, அனைத்து விடுதிக்‌ காப்பாளர்‌ , காப்பாளினிகளுக்கும்‌ தனித்தனியாக பயனாளர்‌ குறியீடு மற்றும்‌ கடவுச்சொல்‌ வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்‌, விடுதிகளின்‌ அனைத்து விவரங்களையும்‌ (மாணாக்கர்‌, பணியாளர்‌, விடுதிக்கட்டமைப்பு, விடுதிகளுக்குரிய தளவாடப்‌ பொருட்கள்‌ மற்றும்‌ வசதிகள்‌‌) சம்மந்தப்பட்ட விடுதிக் காப்பாளர்களால்‌ இணைய வழியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டு வருகிறது.

இதைக் கண்காணித்திட ஏதுவாக வட்ட, மாவட்ட, மாநில அளவில்‌ உள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு பயனாளர்‌ குறியீடு மற்றும்‌ கடவுச்சொல்‌ வழங்கப்பட்டுள்ளது.  ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ விடுதிகளில்‌ தங்கும் மாணாக்கரை தேர்வு செய்வதில்‌ சில நிர்வாக சிக்கல்‌ ஏற்படுவதால்‌, அதனை சரி செய்திடும்‌ பொருட்டு விடுதி மேலாண்மை அமைப்பு (Hostel Management System) செயலியின்‌ மூலம்‌ இணைய வழியில்‌
சேர்க்கை நடத்தி மாணாக்கரை தேர்வு செய்திடலாம்‌ என ஆதிதிராவிடர்‌ நல ஆணையர்‌ அரசைக்‌ கோரியுள்ளார்‌.

அதனடிப்படையில்‌, ஆதிதிராவிடர்‌ நல பள்ளி 7 கல்லூரி விடுதிகளில்‌ தங்கி கல்வி பயிலும்‌ மாணாக்கர்‌ சேர்க்கைக்கான பின்வரும்‌ விதிமுறைகள்‌ மற்றும்‌ வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடுகிறது :-

விதிமுறைகள்‌

* ஆதிதிராவிடர்‌ நல விடுதிகளில்‌ தங்கி கல்வி பயில விரும்பும்‌ மாணாக்கர்‌ இணைய வழியில்‌ online) https:tnadw.hms.in என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

* இணைய வழியில்‌ (online) பதிவேற்றம்‌ செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலரால்‌ விடுதி வாரியாக பரிசீலனை செய்யப்பட வேண்டும்‌.

* மேற்படி விண்ணப்பங்களில்‌ தகுதியுள்ள மாணாக்கரை தெரிவு செய்திடும்‌ பொருட்டு, அரசாணை (நிலை எண்‌. 195, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை நாள்‌. 02.08.1991 இல்‌ தெரிவிக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான ஆலோசனைக்‌ குழுவினை (Advisory committees for selection of students for admission into Government of Adi Dravidar Welfare Hostels) கூட்டி, மாணவரைத் தேர்வு செய்ய வேண்டும்‌.

* ஒவ்வொரு கல்வியாண்டின்‌ தொடக்கத்திலும்‌ விடுதியில்‌ தங்கிப் பயிலும்‌ மாணாக்கர்‌ புதுப்பித்தல்‌ விண்ணப்பத்தினை இணைய வழியில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

* இணைய வழியில்‌ விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்‌, சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலகத்தில்‌ விண்ணப்பப்‌ படிவம்‌ பெற்று, அதனை பூர்த்திசெய்து சமர்ப்பிக்க வேண்டும்‌. அவ்வாறு நேரடியாக பெறப்படும்‌ விண்ணப்பங்களை சிறப்பினமாக கருதி, அவ்விடுதியில்‌
அனுமதிக்கப்பட்ட மாணாக்கரின்‌ எண்ணிக்கையில்‌ காலியிடம்‌ இருக்கும்‌ பட்சத்தில்‌, அவர்களையும்‌ விடுதியில்‌ தங்கி கல்வி பயில மேற்படி குழுவிடம்‌ ஒப்புதல்‌ பெற்று, அனுமதி ஆணை வழங்கப்பட வேண்டும்‌. அவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணாக்கரின்‌ விவரங்களை இணையவழியில்‌ மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலரால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.


ஆதிதிராவிட, பழங்குடி பள்ளி, கல்லூரி விடுதி மாணவர் சேர்க்கை: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

வழிகாட்டு நெறிமுறைகள்‌:

நான்காம்‌ வகுப்பு முதல்‌ கல்லூரி வரை பயிலும்‌ ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ 7, கிறித்துவ மதம்‌ மாறிய ஆதிதிராவிடர்‌ மாணாக்கர்‌ (85%), மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணாக்கர்‌ (10%) பிற வகுப்பினர்கள்‌ (5% ) என்ற விகிதத்தில்‌ தேர்வு செய்ய வேண்டும்‌.

* பள்ளிக்கும்‌ வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல்‌ ஒருக்க வேண்டும்‌. மாணவியருக்கும்‌, பெற்றோரை இழந்த மாணவர்கள்‌ மற்றும்‌ தாய்‌ அல்லது தந்‌தை வெளியூர்களில்‌ பணிபுரிந்து பாதுகாவலர்‌ பொறுப்பில்‌ இருக்கும்‌ மாணவர்களுக்கும்‌மேற்படி நிபந்தனை பொருந்தாது )

* பெற்றோர்களின்‌ ஆண்டு வருமானம்‌ ரூ.2,50,000/-க்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

* மாணாக்கருக்கு கல்வி பயிலும்‌ பள்ளி தலைமையாசிரியர்‌ , கல்லூரி முதல்வரின்‌ சான்று இணைய வழியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌. பள்ளி மாணாக்கருக்கு எமிஸ் எண்‌ மற்றும்‌ கல்லூரி மாணாக்கர்களுக்கு மத்திய, மாநில அரசால்‌ கல்வி உதவித்தொகை பெறுவதற்காக இணையத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ பதிவு எண்‌ இடம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

* விடுதியில்‌ தங்கி கல்வி பயில தெரிவு செய்யப்படும்‌ மாணாக்கர்‌ மற்றும்‌ அவர்களின்‌ பெற்றோர்களிடம்‌ விடுதியில்‌ உள்ள பொருட்களை சேதப்படுத்தினாலோ அல்லது விடுதிக்‌ கட்டுப்பாட்டுகளை மீறி செயல்பட்டாலோ அவர்கள்‌ மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ எனவும்‌, மேலும்‌ அதற்குண்டான கட்டணம்‌ செலுத்த வேண்டும்‌ எனவும்‌ உறுதி மொழிப்‌ பத்திரம்‌ பெறப்பட வேண்டும்‌.

* அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகள்‌, கலை மற்றும்‌அறிவியல்‌ கல்லூரிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணாக்கருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்‌. 

* அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ பயிலும்‌ மாணாக்கர்‌ இல்லாத நிலையில்‌, அவ்விடுதியில்‌ அனுமதிக்கப்பட்ட மாணாக்கரின்‌ எண்ணிக்கையில்‌ காலியிடம்‌ இருக்கும்‌ நேர்வில்‌, தனியார்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ பயிலும்‌ மாணாக்கரையும்‌ தெரிவு செய்யலாம்‌.

இவ்வாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget