மேலும் அறிய

உதவித்தொகை, ஊக்கத்தொகை பெற இது கட்டாயம்: பள்ளி திறக்கும்போதே தொடங்கும் சிறப்புத் திட்டம்! அரசு அதிரடி

Aadhaar in TN schools: மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளின் வங்கி கணக்குக்கு அனுப்ப பள்ளியிலேயே ஆதார் பதிவு முகாம் நடத்தப்பட உள்ளது.

அனைத்து பள்ளிகளிலும்‌ ஆதார்‌ எண்‌ பெறுவதற்கு புதிய  பதிவுகள்‌ மற்றும்‌ ஆதார்‌ எண்‌ புதுப்பித்தல்‌ தொடர்பான பணியினை மேற்கொள்வது தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்‌ வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுரு கூறி உள்ளதாவது:

''மாணவர்களுக்கு சத்துள்ள மதிய உணவு, விலையில்லா பாடப்புத்தகங்கள்‌, மடிக்கணினி, சீருடை, காலணி, புத்தகப்பை, கிரையான்ஸ்‌, வண்ணப்‌ பென்சில்கள்‌, கணித உபகரணப்பெட்டி, புவியியல்‌ வரைபட புத்தகம்‌, கம்பளிச்‌ சட்டை, மழைக்கால ஆடை, உறைக்‌ காலணி, காலுறைகள்‌, பேருந்து பயண அட்டை மற்றும்‌ மிதிவண்டிகள்‌ போன்ற விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன்‌ மூலம்‌ மாணவர்களின்‌ தேவைகள்‌ முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கு அளிக்கப்படும்‌ நலத்திட்டங்கள்‌ பயனாளிகளின்‌ வங்கிக்‌ கணக்கில்‌ நேரடியாக அனுப்புவதற்கு ஆதார்‌ எண்‌ அவசியமாகிறது.

தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித்‌தொகை, ஊக்கத்‌ தொகை

பள்ளிக்‌ கல்வித்‌ துறையில்‌ மாணவ, மாணவியர்களின்‌ நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகளை, திட்டங்களை வகுத்து, முனைப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள, அனைத்து அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ தனியார்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்கள்‌ அனைவருக்கும்‌ ஆதார்‌ அட்டையை வழங்கிடுவது அவசியமாகும்‌. குறிப்பாக 1ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அனைத்து நிலை மாணவர்களும்‌ இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித்‌ தொகைகள்‌ மற்றும்‌ ஊக்கத்‌ தொகைகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வுதவி மற்றும்‌ ஊக்கத்‌ தொகை அனைத்தும்‌, மாணவ மாணவியர்களுக்கு குறித்த நேரத்தில்‌ முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும்‌ விதமாக, நேரடி பயனாளர்‌ பரிமாற்றம் மூலம்‌ பயனாளர்களின்‌ வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும்‌ முறை நடைமுறைப்‌படுத்தப்பட்டுள்ளது.

“பயிலும்‌ பள்ளியிலேயே ஆதார்‌ பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின்‌ கீழ்‌ அனைத்து அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ தனியார் பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்கள்‌ அப்பள்ளியிலேயே ஆதார்‌ எண்‌ பெறுவதற்கு புதிய பதிவுகள்‌ மற்றும்‌ ஆதார்‌ எண்‌ புதுப்பித்தல்‌ தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்னனு நிறுவனத்தினைக்‌  கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌ மேற்கொள்ள அனுமதியளித்தும்‌, அப்பணிகளுக்கென தமிழ்நாடு மின்னணு நிறுவனம்‌ மற்றும்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை அலுவலர்களுக்கான பணிகள்‌ மற்றும் பொறுப்புகள்‌ சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்‌ வெளியிடப்பட்டுள்ளன.

ஆதார்‌ பதிவு மற்றும்‌ புதுப்பித்தல்‌

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம்‌, இந்தியத்‌ தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார்‌ பதிவுக்‌ கருவிகளைக்‌ கொள்முதல்‌ செய்து, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம்‌ ஒப்படைத்துள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம்‌, ஆதார்‌ பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார்‌ தரவு உள்ளீட்டாளர்களைத்‌ தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சியினை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும்‌ ஆதார்‌ பதிவு மற்றும்‌ புதுப்பித்தல்‌ பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில்‌, “பயிலும்‌ பள்ளியிலேயே ஆதார்‌ பதிவு” என்ற சிறப்பு முன்னெடுப்பானது, வரும்‌ கல்வி ஆண்டின்‌ பள்ளி துவக்க நாளில் அனைத்து மாவட்டங்களில்‌ உள்ள வட்டாரங்களிலும்‌ முழுவீச்சில்‌ செயல்பட உள்ளது.

இந்நிகழ்வினை, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ துவங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரகுருபரன்‌ தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
"சிறப்பு மதிப்பெண் வேண்டாம்.. சிறப்புத் தேர்வு நடத்துங்கள்" - ஆசிரியர் செந்தில்குமார் யோசனை.
NIT திருச்சியில் 122 பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
NIT திருச்சியில் 122 பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
MDMK VAIKO : 4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Embed widget