மேலும் அறிய

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது நாளாக 3 பேர் உண்ணாவிரதப் போராட்டம்; என்ன காரணம்?

இது தொடர்பாக பலமுறை மனு எழுதிக் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து சென்னை பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகில் மூன்று பேரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

சென்னைப் பல்கலைக்கழக ஊழியர்கள் 3 பேர், முறையான பதிவு உயர்வு வழங்க கோரி, பல்கலைக்கழக வாயிலில் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் இணைப்புக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு மாற்றுப் பாலினத்தவருக்கு இடம் வழங்கப்படும் என்றும் இதன்மூலம் ஏராளமான மாற்றுப் பாலினத்தவர்களின் உயர் கல்வி உறுதி செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது.

80-க்கும் அதிகமான துறைகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் நிலையில், துணை வேந்தரை நியமிப்பதில் தாமதம் நிலவி வருகிறது. மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதம் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 

இதனால், ஆசிரியர்களின் ஊதியம், பதவி உயர்வு, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்குவதில் சிக்கல் நிலவுகிறது. அதேபோல பட்டமளிப்பு விழாவும் தாமதமான நிலையில், செப்டம்பர் 4ஆவது வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம்

இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழக ஊழியர்கள் 3 பேர், முறையான பதிவு உயர்வு வழங்க கோரி, பல்கலைக்கழக வாயிலில் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அலுவலர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் அலுவலர்களாக பணியாற்றி வரும் எங்களுக்கு, முறைப்படி பதவி உயர்வு வழங்கவில்லை. தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால் உதவி பதிவாளர் ஆகியிருப்போம். ஆனால் திட்டமிட்டு சில அதிகாரிகள் உள்ளடி வேலை பார்த்து எங்களுக்கு பதவி உயர்வு கொடுக்க மறுத்து வருகின்றனர்.

பலமுறை மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை

இது தொடர்பாக பலமுறை மனு எழுதிக் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து சென்னை பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகில் மூன்று பேரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்களை அழைத்து பேசி ஆவன செய்ய வேண்டும்’’.

இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
சட்டக் கல்வி பயில அரிய வாய்ப்பு! புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் அப்ளிகேஷன் ஓபன்... உடனே அப்ளை பண்ணுங்க!
சட்டக் கல்வி பயில அரிய வாய்ப்பு! புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் அப்ளிகேஷன் ஓபன்... உடனே அப்ளை பண்ணுங்க!
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Renault Kwid Facelift: மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
Embed widget