மேலும் அறிய

பெரியார் பல்கலைக்கழகத்தில் 21வது பட்டமளிப்பு விழா – 605 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 61 ஆயிரத்து 413 பேர் பட்டங்களை பெற்றனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர் ஆளுநருக்கு வரவேற்பு அளித்தனர்.

 இதனையடுத்து நடைபெற்ற பெரியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டச் சான்றிதழை வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் ஜெகநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். அப்போது பேசிய அவர், தேசிய தரவரிசைப் பட்டியலில் பெரியார் பல்கலைக்கழகம் 59 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 5 வருடங்களாக நாட்டின் சிறந்து 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது. சேலம் பகுதி மக்களின் விளையாட்டுத் திறனைத் மேம்படுத்திடும் வகையில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை இழை ஒடுதள மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திறன்மிகு இந்தியா திட்டத்தின் நாட்டில் உள்ள 6 கல்வி நிலையங்களில் ஒன்றாக பெரியார் பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு தொழில்கல்வி பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.‌ தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கெளசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.66 கோடி மதிப்பில் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் துறையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் தகவல் தொழில்நுட்பவியல் தொழில் மையம் ரூ.5 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வி சார் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.112 கோடி மதிப்பில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுக்கு முன்மொழிவு அனுப்ப்பட்டுள்ளது என்றார் அவர்.

 பெரியார் பல்கலைக்கழகத்தில் 21வது பட்டமளிப்பு விழா – 605 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்நிகழ்வில் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவன முன்னாள் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பட்டமளிப்பு விழா உரையாற்றிய அவர், நாட்டின் உயர்கல்வி அமைப்பு கடந்த 75 ஆண்டுகளில் 150 மடங்கு அதிக வளர்ச்சி கண்டுள்ளது. வரும் 2035 ஆம் ஆண்டிற்குள் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்திடும் வகையில் புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கேற்ப பல்கலைக்கழகங்கள் அனைத்து தரப்பினருக்கான கல்வி வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். பட்டப்படிப்பை பாதியில் கைவிட நேர்பவர்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்வேறு வாய்ப்புகள் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக தேவையான அனைத்து பயிற்சிகளையும் கல்வி நிலையங்கள் வழங்கிட வேண்டும். மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த திறமைகளை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் கல்வியின் பலன் நாட்டிற்கு கிடைப்பதற்கு அவர்கள் உறுதியேற்க வேண்டும். வகுப்பறைகளைத் தாண்டி துறை சார்ந்த அறிவை மேம்படுத்திக் கொள்ள கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகளவில் 3-வது பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா திகழ்கிறது. இதனை மேலும் உயர்த்திடும் வகையில் மாணவர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். இந்தியத் திருநாட்டை சர்வதேச அரங்கில் வல்லரசு நாடாக மாற்றிடும் வகையில் அமிர்த காலம் என அழைக்கப்படும் அடுத்த 25 ஆண்டுகளில் இளைஞர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கூறினார்.

 பெரியார் பல்கலைக்கழகத்தில் 21வது பட்டமளிப்பு விழா – 605 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இதனையடுத்து, பெரியார் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பை நிறைவு செய்த 505 மாணவ-மாணவியருக்கு, முனைவர் பட்டச் சான்றிதழை வழங்கினார். தொடர்ந்து, இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களில் துறை வாரியாக முதலிடம் பிடித்த 99 மாணவ-மாணவியருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டச் சான்றிதழையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

இந்நிகழ்வின் மூலம் சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 61 ஆயிரத்து 413 பேர் பட்டங்களை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget