மேலும் அறிய

பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட பகையால் கஞ்சா போதையில் நண்பனை கொன்ற நண்பர்கள்...!

பப்ஜி போட்டி முன்விரோதம், கஞ்சா போதையில் சக நண்பனையே கத்தியால் குத்தி கொலை செய்த நண்பர்களால் முத்துப்பேட்டை மற்றும் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பப்ஜி விளையாட்டில் முன்விரோத தகராறு. கஞ்சா போதையில் நண்பனை கொலை செய்த நண்பர்கள்..

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் நாகூர்பிச்சை. இவரது மகன் இஸ்மத் (22). இவர் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதியல் இஸ்மத் காயத்துடன் சாலையோரத்தில் இருந்த கால்வாயில் சடலமாக கிடந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட பகையால் கஞ்சா போதையில் நண்பனை கொன்ற நண்பர்கள்...!

உடனடியாக  சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி டி.எஸ்.பி இளஞ்செழியன் மற்றும் ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் இஸ்மத்தின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரனையை தொடங்கினர்.

விசாரனை குறித்து போலீசார் தெரிவிக்கையில் மன்னார்குடியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்த இஸ்மத் கடந்த ஒரு வருடம் முன்பு படிப்பு முடிந்து முத்துபேட்டைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த இவரது நண்பர் வாஜித்திற்கும் (23) இஸ்மத்திற்கும் பப்ஜி விளையாடுவதில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மன்னார்குடிக்கு சென்று சமாதனம் பேசலாம் என வாஜித், இஸ்மத்தை அழைத்துள்ளார். இதனையடுத்து மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே உள்ள ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு இஸ்மத், வாஜித் மற்றும் வாஜித் நண்பர்களான நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த தீன்ஹனீஸ், மர்ரூஜ், அக்பர்பாஷா ஆகியோரும் வந்துள்ளனர். 


பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட பகையால் கஞ்சா போதையில் நண்பனை கொன்ற நண்பர்கள்...!

அப்போது இஸ்மத் மற்றும் வாஜித்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் வாஜித் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து இஸ்மத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

மேலும் இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரனை செய்து வந்தனர். மேலும் தப்பி சென்ற நாச்சிகுளத்தை சேர்ந்த வாஜித், தீன்ஹனீஸ், மர்ரூஜ், அக்பர்பாஷா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். கொலை சம்பவம் குறித்த அறிந்ததும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு செய்தார் நேரில் விசாரனை செய்தார். மேலும் குற்றவாளிகை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து உத்திரவிட்டார்.


பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட பகையால் கஞ்சா போதையில் நண்பனை கொன்ற நண்பர்கள்...!

விரைந்து செயல்பட்ட தனிப்படையினர் மன்னார்குடியில் பதுங்கியிருந்த நான்கு கொலையாளிகளையும் ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது மது மற்றும் கஞ்சா போதையில் தவறு செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட பகையால் கஞ்சா போதையில் நண்பனை கொன்ற நண்பர்கள்...!

பப்ஜி விளையாட்டில் போட்டி முன்விரோதம் கஞ்சா போதையில் சக நண்பனையே கத்தியால் குத்தி கொலை செய்த நண்பர்களால் முத்துப்பேட்டை மற்றும் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சுடுகாடு அருகே ரகசிய சாராய விற்பனை: சுமித்ராவை தட்டித்தூக்கிய போலீஸ்...
சுடுகாடு அருகே ரகசிய சாராய விற்பனை: சுமித்ராவை தட்டித்தூக்கிய போலீஸ்...
போதையில் கதவைத் திறந்து வைத்துத் தூக்கம்: புதுச்சேரியில் கார் திருடிய 'பக்கத்து அறை' வாலிபர் 24 மணிநேரத்தில் கைது!
போதையில் கதவைத் திறந்து வைத்துத் தூக்கம்: புதுச்சேரியில் கார் திருடிய 'பக்கத்து அறை' வாலிபர் 24 மணிநேரத்தில் கைது!
WhatsApp விளம்பரத்தை நம்பினால் இவ்வளவு ஆபத்தா? புதுச்சேரியில் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி!
WhatsApp விளம்பரத்தை நம்பினால் இவ்வளவு ஆபத்தா? புதுச்சேரியில் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி!
சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவனைக் கொன்று வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் - காரணம் என்ன?
சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவனைக் கொன்று வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் - காரணம் என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

வேலுமணி CV சண்முகம் உட்பட 26 பேரின் பதவிகள் பறிப்பு எடப்பாடி அதிரடி
சட்டமன்றத்தில் விஜய்க்கு ஆதரவு அமமுக காமராஜ் நீக்கம் TTV அதிரடி!
DRUGS-க்கு END உளவுத்துறைக்கு புதிய ஐ.ஜி CM விஜய் அதிரடி மூவ் யார் இந்த அஸ்ரா கார்க்?
SOFA வைத்து சீண்டிய உதய் ”நாங்க புஷ்பா அரசா” பதிலடி கொடுத்த விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay on NEET: “நீட் தேர்வை ரத்து செய்து +2 மதிப்பெண்களை வைத்து சேர்க்கை'' - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
“நீட் தேர்வை ரத்து செய்து +2 மதிப்பெண்களை வைத்து சேர்க்கை'' - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
Vijay Slams Udhayanidhi: மக்கள் ஆதரவு இல்லையா.? புள்ளிவிவரத்துடன் உதயநிதியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்
மக்கள் ஆதரவு இல்லையா.? புள்ளிவிவரத்துடன் உதயநிதியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்
VIJAY Vs UDHAYANIDHI: புஷ்பா அரசு என்று ஏளனம் பேசுவதா.? உதயநிதிக்கு தரமான பதிலடி கொடுத்த விஜய்; என்ன சொல்லியிருக்கார்.?
புஷ்பா அரசு என்று ஏளனம் பேசுவதா.? உதயநிதிக்கு தரமான பதிலடி கொடுத்த விஜய்; என்ன சொல்லியிருக்கார்.?
CV Shanmugam: ''தாழ்த்தப்பட்டவருக்கு முதல்வர் பதவி; திருமா வாய்ப்பை தட்டிவிட்ட ஈபிஎஸ்'' சீறிய சி.வி.சண்முகம்
CV Shanmugam: ''தாழ்த்தப்பட்டவருக்கு முதல்வர் பதவி; திருமா வாய்ப்பை தட்டிவிட்ட ஈபிஎஸ்'' சீறிய சி.வி.சண்முகம்
Edappadi Palanisamy: அதிமுக-விற்கு புதிய பொதுச்செயலாளரா? பறிபோகிறதா எடப்பாடி பழனிசாமி பதவி?
Edappadi Palanisamy: அதிமுக-விற்கு புதிய பொதுச்செயலாளரா? பறிபோகிறதா எடப்பாடி பழனிசாமி பதவி?
Skoda Kushaq Vs Grand Vitara: ஸ்கோடா குஷாக்-ஆ.? மாருதி கிராண்ட் விதாராவா.? எந்த SUV பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
ஸ்கோடா குஷாக்-ஆ.? மாருதி கிராண்ட் விதாராவா.? எந்த SUV பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Altroz iCNG AMT: மாருதி பலேனோ, கிளான்ஸாவிற்கு செக்.! அல்ட்ராஸின் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் வெர்ஷனை இறக்கிய டாடா
மாருதி பலேனோ, கிளான்ஸாவிற்கு செக்.! அல்ட்ராஸின் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் வெர்ஷனை இறக்கிய டாடா
Amul Milk Price Hike: நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமுல்
நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமுல்
Embed widget