மேலும் அறிய

விழுப்புரம் அருகே கோவிலில் வழிபாடு செய்த பட்டியலினத்தவர் மீது தாக்குதல்

விழுப்புரம் அருகே திரெளபதியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பட்டியலினத்தவர் மீது தாக்குதல்.

விழுப்புரம்: கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் திரெளபதியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பட்டியலினத்தவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் இன்று திரெளபதி அம்மன் கோவில்  தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. தீமிதி திருவிழாவின் போது பட்டியலின சமூகத்தை சேர்ந்த கந்தன், கதிரவன் கற்பகம் குடும்பத்தினர் கோவிலில் சென்று சாமிதரிசனம் செய்ய முற்பட்டுள்ளனர். அப்போது இந்த கோவிலுக்குள் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் உள்ளே வந்து சாமி தரிசனம் செய்யக்கூடாது வெளியிலையே நின்றுவிட்டு சாமியை கும்மிடுவிட்டு போங்கள் என கூறி சிலர் கந்தன், கதிரவனை கற்பகம் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இதில் காயங்கள் ஏற்படவே மூவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை  பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் பட்டியலினத்தை சார்ந்த எங்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி மேல் பாதி கிராமத்தை சார்ந்த பட்டியலின மக்கள் விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் மேல்பாதி என்னுமிடத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் காரணமாக கும்பகோனம் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது தாக்கு நடத்தியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தால் தான் மறியலை கைவிடுவோம் என கூறியதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்று  (8.4.2023) பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சாலைமறியலில் ஈடுபட்ட தரப்பினரையும், மேல்பாதி கோவில் திருவிழா கமிட்டியையும் அழைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கு 100-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் வளவனூர் பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. சமாதான பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget