மேலும் அறிய

விதிகளை மீறி இயங்கிய 5 பட்டாசு கடைகள் மற்றும் 2 குடோன்களுக்கு சீல்!

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் விதிகளை மீறி இயங்கிய 5 பட்டாசு கடைகள், 2 குடோன்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

 தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோர சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பட்டாசு கடைகள், அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி பாதுகாப்பான முறையில் இயங்குகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Villupuram: Sealed to the godown where hoarding crores of firecrackers without permission

இந்நிலையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட காமராஜர் வீதி, திரு.வி.க. வீதி, கே.கே.சாலை, கம்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் மாவட்ட ஆட்சியர் டி.மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டாசு கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே பட்டாசுகளை வைத்து விற்பனை செய்ய வேண்டும், எந்த காரணத்தை கொண்டும் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருக்கக்கூடாது என்றும் விதிகளை மீறி இயங்கினால் சம்பந்தப்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.மோகன் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின்காஸ்ட்ரோ, தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். விழுப்புரம் நகரில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி : சங்கராபுரத்தில்  பட்டாசு கடையில் தீ விபத்து; 4 பேர் உயிரிழப்பு

அப்போது விழுப்புரம் கம்பன் நகரில் உள்ள பட்டாசு மொத்த வியாபார கடை ஒன்றில் தரைத்தளம் பகுதியில் மட்டும் பட்டாசுகளை வைத்து விற்பனை செய்வதற்கு உரிமம் பெற்றுவிட்டு அந்த கடையின் முதல் தளம், 2-ம் தளங்களிலும் மற்றும் அவசர கால வழிப்பாதையிலும் பட்டாசுகளை அளவுக்கு அதிகமாக வைத்து விற்பனை செய்து வந்ததும், பாதுகாப்பற்ற முறையிலும் பட்டாசுகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

இதையடுத்து அந்த பட்டாசு மொத்த விற்பனை கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதோடு அந்த கடையின் உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பவும் முடிவு செய்துள்ளனர். இதேபோல் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள ஒரு பட்டாசு விற்பனை கடையில் தரைத்தள பகுதியில் மட்டும் பட்டாசுகளை வைத்து விற்பனை செய்ய உரிமம் பெற்றுவிட்டு அந்த கடையில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வைத்திருக்கும் பகுதியில் பட்டாசுகளை பாதுகாப்பற்ற முறையில் அதிகளவில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த பட்டாசு விற்பனை கடையையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Watch Annaatthe Trailer: வந்தாரு காளையன்.. மரண மாஸ்.. வெளியானது அண்ணாத்த ட்ரெய்லர்..!


விதிகளை மீறி இயங்கிய 5 பட்டாசு கடைகள் மற்றும் 2 குடோன்களுக்கு சீல்!

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அதிகாரி விஜயபாபு தலைமையிலான அதிகாரிகள், சங்கராபுரத்தில் உள்ள பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிமீறி வைத்திருந்ததாக சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள 2 பட்டாசு குடோன்கள் மற்றும் மும்முனை சந்திப்பில் உள்ள ஒரு பட்டாசு கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இதேபோல் கள்ளக்குறிச்சி குளத்து மேட்டு தெருவில் விதிமுறைகளை மீறி இயங்கிய 2 பட்டாசு கடைகளை கோட்டாட்சியர் சரவணன், தாசில்தார் விஜயபிரபாகரன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Embed widget