மேலும் அறிய

வீட்டை எழுதி தராத கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி கைது: கண்ணில் மிளகாய் பொடி தூவி ‛டார்ச்சர்’ செய்தது அம்பலம்!

சொத்தை எழுதிக் கொடுக்க கட்டாயப்படுத்தி, கணவருக்கு கண்ணில் மிளகாய் பொடி தூவதல் என பல்வேறு வழிகளில் மரிய வினோ இடைஞ்சல் கொடுத்து துன்புறுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பாரில் கணவன் பெயரில் உள்ள வீட்டை எழுதி தர வலியுறுத்தி கணவன் மீது மனைவியே வெந்நீரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல் வெந்த நிலையில் கணவன் இனிகோ அளித்த புகாரின் அடிப்படையில் சூரங்குடி போலீசார் மனைவி மரிய வினோ-வை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில்  கணவரை பலமுறை சித்திரவதை செய்ததும் தெரியவந்துள்ளது. 

                                   வீட்டை எழுதி தராத கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி கைது: கண்ணில் மிளகாய் பொடி தூவி ‛டார்ச்சர்’ செய்தது அம்பலம்!
 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த இனிகோ(41) என்பவர் மீனவராக வேலை செய்து வருகிறார். மீனவர் இனிகோ-விற்கும், மரிய வினோ என்பவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இனிகோவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவி மரிய வினோ, கணவன் இனிகோ வின் பெயரில் உள்ள வீட்டினை தன் பெயருக்கு மாற்றி எழுதிக்கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு கணவன் இனிகோ மறுத்துள்ளார்.

                                   வீட்டை எழுதி தராத கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி கைது: கண்ணில் மிளகாய் பொடி தூவி ‛டார்ச்சர்’ செய்தது அம்பலம்!
இதனால் கணவன் - மனைவி இடையே இதுசம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் ; வேலையை முடித்து விட்டு இனிகோ வீட்டிற்கு சென்ற போது, மனைவி மரிய வினோ, வீட்டை எழுதி தராத ஆத்திரத்தில் தரக்குறைவாக பேசி, தான் ஏற்கனவே திட்டமிட்டபடி தயார் செய்து வைத்திருந்த சூடான வெந்நீரை அவர் மீது ஊற்றியுள்ளார். சற்றும் எதிர்பாராத இனிகோ, வெந்நீரை பட்டு உடல் வெந்து நிலைகுலைந்து போயுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தப்பின் மேல் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

                                   வீட்டை எழுதி தராத கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி கைது: கண்ணில் மிளகாய் பொடி தூவி ‛டார்ச்சர்’ செய்தது அம்பலம்!
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இனிகோ தன் மனைவி மரிய வினோ மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் சூரங்குடி போலீசார் மரிய வினோ- வை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையில், சொத்தை எழுதி கொடுக்க கட்டாயப்படுத்தி, மரிய வினோ கணவருக்கு கண்ணில் மிளகாய் பொடி தூவதல் என பல்வேறு வழிகளில் இடைஞ்சல் கொடுத்து துன்புறுத்தி வந்ததும், கொலை செய்யும் அளவிற்கு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget