மேலும் அறிய

Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்

விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாணவியின் உடல் விக்கிரவாண்டி வராக நதி அருகே உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

விழுப்புரம் : விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாணவியின் உடல் விக்கிரவாண்டி வராக நதி அருகே உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த அரசு ஒப்பந்த ஊழியர் பழனிவேல் என்பவரின் குழந்தை விக்கிரவாண்டி சென்மேரிஸ் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தது நேற்று மதியம் அந்த பள்ளியின் உள்ள கழிவுநீர் தொட்டில் விழுந்து உயிரிழந்தது. இன்று காலை குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அஞ்சலிக்காக அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. வனத்துறை அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் பழனி விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா ஆகியோர் அரசு சார்பில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிவாரண தொகை 3 லட்சத்திற்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோமினிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த விக்கிரவாண்டி போலீசார் மூன்று பேரையும் நள்ளிரவில் கைது செய்து உடற் தகுதி சான்று வாங்குவதற்காக முண்டியாம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் மட்டும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் இருவரும் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஆசிரியர் ஏஞ்சல்ஸ் விக்கிரவாண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர் அவரை வரும் பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரை நீதிபதி சத்யநாராயணன் நேரில் சென்று விசாரணை செய்து இருவரையும் வரும் பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் மேலும் உடல் சீராகும் வரை மருத்துவமனையில் பாதுகாப்பாக சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். அதன் பின்னர் சிறைக்கு கொண்டு செல்லவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் குழந்தையின் இறுதி ஊர்வலம் அவருடைய இல்லத்தில் இருந்து புறப்பட்டது. குழந்தையின் முகத்தைப் பார்த்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதனர். தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பர் உயிரிழப்பை தாங்க முடியாமல் சிறுமியின் நண்பர்கள் கதறி அழுத சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை கலங்கடித்தது. சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணியூர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். மாணவியின் உடல் வராக நதி அருகில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Embed widget