மேலும் அறிய

Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்

விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாணவியின் உடல் விக்கிரவாண்டி வராக நதி அருகே உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

விழுப்புரம் : விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாணவியின் உடல் விக்கிரவாண்டி வராக நதி அருகே உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த அரசு ஒப்பந்த ஊழியர் பழனிவேல் என்பவரின் குழந்தை விக்கிரவாண்டி சென்மேரிஸ் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தது நேற்று மதியம் அந்த பள்ளியின் உள்ள கழிவுநீர் தொட்டில் விழுந்து உயிரிழந்தது. இன்று காலை குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அஞ்சலிக்காக அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. வனத்துறை அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் பழனி விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா ஆகியோர் அரசு சார்பில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிவாரண தொகை 3 லட்சத்திற்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோமினிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த விக்கிரவாண்டி போலீசார் மூன்று பேரையும் நள்ளிரவில் கைது செய்து உடற் தகுதி சான்று வாங்குவதற்காக முண்டியாம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் மட்டும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் இருவரும் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஆசிரியர் ஏஞ்சல்ஸ் விக்கிரவாண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர் அவரை வரும் பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரை நீதிபதி சத்யநாராயணன் நேரில் சென்று விசாரணை செய்து இருவரையும் வரும் பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் மேலும் உடல் சீராகும் வரை மருத்துவமனையில் பாதுகாப்பாக சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். அதன் பின்னர் சிறைக்கு கொண்டு செல்லவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் குழந்தையின் இறுதி ஊர்வலம் அவருடைய இல்லத்தில் இருந்து புறப்பட்டது. குழந்தையின் முகத்தைப் பார்த்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதனர். தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பர் உயிரிழப்பை தாங்க முடியாமல் சிறுமியின் நண்பர்கள் கதறி அழுத சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை கலங்கடித்தது. சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணியூர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். மாணவியின் உடல் வராக நதி அருகில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

தலைப்பு செய்திகள்

" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி
நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?
நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget