மேலும் அறிய

பரோலில் எஸ்கேப் ஆன பாலியல் குற்றவாளி; திருமணம் ஆகி செட்டில் .... 33 ஆண்டுக்கு பிறகு கைதானது எப்படி..?

நீதிமன்ற உத்தரவின் பேரில் உள்ளூர் காவல்துறை தேடியபோது, ​​சிங் இறந்துவிட்டதாக கிராமத் தலைவர்கள் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.

பரோலில் சென்ற பாலியல் குற்றவாளி 33 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பாலியல் குற்றவாளி,  33 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் நகரில் கைது செய்யப்பட்டார். 56 வயதான ரகுநந்தன் சிங், தனது மனைவியுடன் போலி அடையாளத்துடன் வாழ்ந்து, ஆடை விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை கைது செய்பவருக்கு ரூ.25,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஹத்ராஸ் காவல் கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வால் கூறுகையில், 1987இல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ரகுநந்தன் சிங், தனது மனைவியுடன் 30 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து, நகரத்தில் உள்ள ஒரு ஆடை விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “அவர் ஒரு பாலியல் குற்றவாளி.  தண்டனை அனுபவிக்கும் போது பரோல் வழங்கப்பட்டது.  பரோலில் வந்த கடந்த 33 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1986 ஆம் ஆண்டு, அவர் மீது மாவட்டத்தில் உள்ள ஹத்ராஸ் சந்திப்பு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு, அவர் உள்ளூர் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டில், அந்த நபர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பின்னர் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார். ஆனால் வெளியே வந்த பிறகு, அவர் கிராமத்தில் உள்ள தனது அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு தலைமறைவானார். பின்னர் புதிய போலி அடையாளத்துடன் டெல்லிக்கு சென்று திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். டெல்லியில் உள்ள புராரி பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தார். அவரை கைது செய்ய உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “அவரைக் கைது செய்பவருக்கு ரூபாய் 25,000 பரிசு அறிவித்தேன். மேலும் அவரைக் கண்டுபிடிக்க சிக்கந்திர ராவ் வட்டாரத்தின் வட்ட அதிகாரி தலைமையில் பல குழுக்களை அமைத்தேன். சிறப்பு செயல்பாட்டுக் குழுவும் இணைக்கப்பட்டது” என்று கூறினார். ரகுநந்தன் சிங்கின் சொந்த கிராமத்தில் வசிப்பவர்கள், உறவினர்கள் அவர் 1989 இல் காணாமல் போன பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லாததால் அவர் இறந்துவிட்டார் என்று நம்பினர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் உள்ளூர் காவல்துறை தேடியபோது, ​​சிங் இறந்துவிட்டதாக கிராமத் தலைவர்கள் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். ஆனால் அவர் கைது செய்யப்பட்ட செய்தி கிராம மக்களையும் அவரது உறவினர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹத்ராஸ் சந்திப்பு போலீஸ் நிலைய அதிகாரிகளால் இந்த வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget