மேலும் அறிய

தற்கொலை செய்ய தடையாக இருந்த மனைவி.. தீவைத்து கொளுத்திய கணவன்..

தன்னுடைய தற்கொலை முடிவை தடுத்து  தனக்கு இடையூறாக இருக்கும் மனைவியைக் கொன்று பின்னர் தற்கொலை செய்துக்கொள்ள நாகபூஷண் விபரீத முடிவு செய்தார்.

தெலங்கானாவில் தனது தற்கொலை முடிவுக்கு மனைவி தொடர்ந்து தடையாக இருந்ததால் கணவர் செய்த விபரீத காரியம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

தெலங்கானாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்மம் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள  திருமலையபாலம் பகுதியில் நாகபூஷணம் என்பவர் தனது மனைவி ஜெயம்மாவுடன் வசித்து வருகிறார். நாகபூஷணம் தோட்டக்காரராக வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்னை இருந்து வந்துள்ளது. இதற்காக பல இடங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எதுவும் சரியாகவில்லை. இப்படியான நிலையில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாகபூஷணத்திற்கு சிறுநீரக பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனால் கடும் மனவேதனை அடைந்த அவர், மூன்று முறை பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவர் மனைவி ஜெயம்மா நாகபூஷணத்தைக் காப்பாற்றி மீண்டும் உடல்நலத்தை மீட்பதற்கு போராடியுள்ளார்.  நாளுக்கு நாள் நாகபூஷணத்தின்உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து கொண்டே வந்துள்ளது. அதேசமயம் மனைவி தனக்காக கஷ்டப்படுவதைக் கண்டு அவர் மிகவும் நொந்து போனார். 

இப்படியான நிலையில் தன்னுடைய தற்கொலை முடிவை தடுத்து  தனக்கு இடையூறாக இருக்கும் மனைவியைக் கொன்று பின்னர் தற்கொலை செய்துக்கொள்ள நாகபூஷண் விபரீத முடிவு செய்தார். தனது திட்டத்தின்படி நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் மனைவி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். ஆனால் சற்றும் தாமதிக்காத நாகபூஷண் தன்னிடம் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டில் இருந்து நள்ளிரவில் அலறல் சத்தம் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்து புகை மண்டலமாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள்  நாகபூஷணத்தின் மகனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மகன், நாகபூஷணம் மற்றும் ஜெயம்மாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  இதில் நாகபூஷணம் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். ஜெயம்மா  மட்டும் படுகாயத்துடன் தொடர்ச்சியாக கம்மம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருமலையபாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்!
திருமணம் மீறிய உறவு !! திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக் காதலி !! முகம் சிதைத்து கொடூர கொலை
திருமணம் மீறிய உறவு !! திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக் காதலி !! முகம் சிதைத்து கொடூர கொலை
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
CV Shanmugam Next Plan : சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
Mamata Banerjee: ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
CM Vijay: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!
CM Vijay: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!
TN DGP: புதிய டிஜிபி இதுவரை பொறுப்பேற்காதது ஏன்? மகேஷ் குமார் அகர்வால் எங்கே? சிஎம் விஜய் டிக் அடித்தது ஏன்?
புதிய டிஜிபி இதுவரை பொறுப்பேற்காதது ஏன்? மகேஷ் குமார் அகர்வால் எங்கே? சிஎம் விஜய் டிக் அடித்தது ஏன்?
Embed widget