மேலும் அறிய

தற்கொலை செய்ய தடையாக இருந்த மனைவி.. தீவைத்து கொளுத்திய கணவன்..

தன்னுடைய தற்கொலை முடிவை தடுத்து  தனக்கு இடையூறாக இருக்கும் மனைவியைக் கொன்று பின்னர் தற்கொலை செய்துக்கொள்ள நாகபூஷண் விபரீத முடிவு செய்தார்.

தெலங்கானாவில் தனது தற்கொலை முடிவுக்கு மனைவி தொடர்ந்து தடையாக இருந்ததால் கணவர் செய்த விபரீத காரியம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

தெலங்கானாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்மம் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள  திருமலையபாலம் பகுதியில் நாகபூஷணம் என்பவர் தனது மனைவி ஜெயம்மாவுடன் வசித்து வருகிறார். நாகபூஷணம் தோட்டக்காரராக வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்னை இருந்து வந்துள்ளது. இதற்காக பல இடங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எதுவும் சரியாகவில்லை. இப்படியான நிலையில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாகபூஷணத்திற்கு சிறுநீரக பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனால் கடும் மனவேதனை அடைந்த அவர், மூன்று முறை பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவர் மனைவி ஜெயம்மா நாகபூஷணத்தைக் காப்பாற்றி மீண்டும் உடல்நலத்தை மீட்பதற்கு போராடியுள்ளார்.  நாளுக்கு நாள் நாகபூஷணத்தின்உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து கொண்டே வந்துள்ளது. அதேசமயம் மனைவி தனக்காக கஷ்டப்படுவதைக் கண்டு அவர் மிகவும் நொந்து போனார். 

இப்படியான நிலையில் தன்னுடைய தற்கொலை முடிவை தடுத்து  தனக்கு இடையூறாக இருக்கும் மனைவியைக் கொன்று பின்னர் தற்கொலை செய்துக்கொள்ள நாகபூஷண் விபரீத முடிவு செய்தார். தனது திட்டத்தின்படி நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் மனைவி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். ஆனால் சற்றும் தாமதிக்காத நாகபூஷண் தன்னிடம் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டில் இருந்து நள்ளிரவில் அலறல் சத்தம் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்து புகை மண்டலமாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள்  நாகபூஷணத்தின் மகனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மகன், நாகபூஷணம் மற்றும் ஜெயம்மாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  இதில் நாகபூஷணம் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். ஜெயம்மா  மட்டும் படுகாயத்துடன் தொடர்ச்சியாக கம்மம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருமலையபாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

தலைப்பு செய்திகள்

133 வழக்குகள்... ஒரே நாளில் சாம்பலான ரூ.1 கோடி போதைப்பொருள்! பின்னணி என்ன?
133 வழக்குகள்... ஒரே நாளில் சாம்பலான ரூ.1 கோடி போதைப்பொருள்! பின்னணி என்ன?
திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
US Iran War: பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
Vanni Arasu:
Vanni Arasu: "ரூ.154 கோடியை ரிலீஸ் பண்ணுங்க..." ராம்தாஸ் அத்வாலேவிற்கு வன்னி அரசு நேரில் மனு!
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Embed widget