மேலும் அறிய

மயிலாடுதுறை : கள்ளச்சாராயத்தால் கண்பார்வை இழந்து இருவர் உயிரிழப்பு

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த இருவர் கண்பார்வை இழந்து உயிரிழந்துள்ளார்கள். மேலும் இருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த இருவர் கண்பார்வை இழந்து உயிரிழந்தார்கள். மேலும் இருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழக முழுவதும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பால், உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்து திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு மதுபான கடையான டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுவிற்கு அடிமையான மது பிரியர்கள், மது போதைக்கு மது கிடைக்காமல் தங்களை போதையில் வைத்துக்கொள்ள பல்வேறு மாற்று வழிகளை தேடி வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள் பல இடங்களில் கள்ளச்சாராயம் தயார் செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மது போதைக்கு அடிமையான சிலர் பெயிண்டில் கலக்கப்படும் தின்னர் என்ற வேதிப்பொருளில் எலுமிச்சைப்பழத்தை பிழிந்து குடித்து உயிர் இழந்தனர்.

மயிலாடுதுறை : கள்ளச்சாராயத்தால் கண்பார்வை இழந்து இருவர் உயிரிழப்பு

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என பல கள்ளச்சாராய கும்பலை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் ஆங்காங்கே கைது செய்யும் சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. இருப்பினும் காவல்துறை கண்களில் மண்ணைத் தூவும் விதமாக கள்ளச்சாராய விற்பனை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்கதையாக நடந்து வருகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் என்பவரின் மகன் அச்சக தொழிலாளி பிரபு (33) மற்றும்  அதே பகுதியை சேர்ந்த அம்மாசி மகன் லோடுமேன் செல்வம் (36) வீராசாமி (52) சரத்குமார் (28) உள்ளிட்ட 4 பேர் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். 

மயிலாடுதுறை : கள்ளச்சாராயத்தால் கண்பார்வை இழந்து இருவர் உயிரிழப்பு

வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் பிரபுவுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து பிரபுவை அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோன்று அவருடன் மது அருந்திய
செல்வமும் கண்பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து வீராசாமி மற்றும் சரத்குமார் உள்ளிட்ட 2 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

மயிலாடுதுறை : கள்ளச்சாராயத்தால் கண்பார்வை இழந்து இருவர் உயிரிழப்பு

சாராயம் குடித்து இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு குறைந்திருந்த நிலையில் தற்போது ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி காவல்துறையின் கெடுபிடியையும் மீறி ஆங்காங்கே ஊறல் மற்றும் எரிசாராயம் தயாரிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் விற்பனை செய்யப்படுவது கள்ளச்சாராய விற்பனையை காவல்துறையினர் பணம் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கின்றனரா? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | மாணவிக்கு பாலியல் சீண்டல் சிக்கிய தலைமை ஆசிரியர்! பணியிடை நீக்கம் செய்து அதிரடி
ADMK Poster | செங்கோட்டையனுக்கு நன்றி” ஜெயலலிதா, ஓபிஎஸ் போட்டோ! அதிமுக உரிமை மீட்பு குழு போஸ்டர்
செங்கோட்டையனை சமாளிப்பாரா EPS?கொங்கில் பலவீனமாகும் அதிமுக? | Sengottaiyan vs EPS
டம்மியான மதராஸி 25 கோடிப்பே... பட்ஜெட்டை தொடுமா? | Rukmini | Madharaasi Collection
வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி உயிர் தப்பிய பாமக ம.க.ஸ்டாலின் ஆடுதுறை பேருராட்சியில் பரபரப்பு | PMK Stalin

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
பழனிசாமி முதல்வர் ஆனது எப்படி? டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு! அதிமுக-வில் நடந்தது என்ன? #TTVDhinakaran #EPS #ADMK
பழனிசாமி முதல்வர் ஆனது எப்படி? டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு! அதிமுக-வில் நடந்தது என்ன?
EPS vs Senkottaiyan: இபிஎஸ் தலையில் இடி.. செங்கோட்டையனை எப்படி சமாளிப்பார் எடப்பாடியார்?
EPS vs Senkottaiyan: இபிஎஸ் தலையில் இடி.. செங்கோட்டையனை எப்படி சமாளிப்பார் எடப்பாடியார்?
Asia Cup 2025: ஆசியக் கோப்பை - இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்கள் யார்? தோனி,ரோகித்தின் சம்பவம்
Asia Cup 2025: ஆசியக் கோப்பை - இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்கள் யார்? தோனி,ரோகித்தின் சம்பவம்
Affordable Automatic Cars: இவ்ளோ கம்மி விலையில் ஆட்டோமேடிக் கார்களா.. 24 கிமீ மைலேஜ், டாப் 5 லிஸ்ட்
Affordable Automatic Cars: இவ்ளோ கம்மி விலையில் ஆட்டோமேடிக் கார்களா.. 24 கிமீ மைலேஜ், டாப் 5 லிஸ்ட்
Embed widget