மேலும் அறிய

சோகம்! மணிப்பூரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை - நள்ளிரவில் நடந்தது என்ன?

மணிப்பூரில் குக்கி இனக்குழுவினர் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் எல்லை பகுதிகளில் எப்போதும் பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தீவிரவாதிகள், நக்சலைட்கள் ஆகியோர் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீர் தாக்குதல்:

சமீபகாலமாக வடகிழக்கு மாநிலங்களில் அண்டை நாட்டவர்கள் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்காக கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ளது பிஷ்ணுபூர் மாவட்டம். இங்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு முகாம் அமைந்துள்ளது.

இந்த நிலையில், வழக்கம்போல வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் முகாம் இருந்த பகுதியின் அருகே இருந்த மலையில் இருந்து குக்கி இனக்குழுவினர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

2 பேர் உயிரிழப்பு:

இதையடுத்து, பதிலுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்த துப்பாக்கிச்சூடு அதிகாலை 2.15 மணி வரை நடைபெற்றது. இந்த தாக்குதலின்போது, குக்கி இனக்குழுவினர் வெடிகுண்டுகளையும் வீசினர். இதில், சி.ஆர்.பி.எப். வீரர்களின் 128வது பட்டாலியன் மீது வீசப்பட்ட குண்டு வெடித்தது.

அவர்கள் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படையைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். சி.ஆர்.பி.எப்.யைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் என் சர்கார் மற்றும் தலைமை காவலர் அரூப்சைனி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். வீர மரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டு அவர்களது உடல் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட உள்ளது. மேலும், இந்த தாக்குதலில் இரண்டு சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அச்சத்தில் மக்கள்:

மணிப்பூர் உள்பட வடகிழக்கு மாநிலங்களிலும், சில வட மாநிலங்களிலும் பல்வேறு இனக்குழுக்கள் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் அமைதி வழியில் போராடி வரும் சூழலில், சிலர் ஆயுதம் ஏந்தி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே மணிப்பூரில் கடந்த ஓராண்டு காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தற்போது நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் அப்பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், இந்த தருணத்தில் எல்லையில் பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தி வருகின்றனர். மேலும், நாட்டின் சந்தேகத்திற்குரிய பகுதிகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: அச்சச்சோ! வாம்பயர் ஃபேஷியல் செய்த பெண்களுக்கு எச்.ஐ.வி: அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

மேலும் படிக்க: Morning Headlines: 88 தொகுதிகள் - 61% வாக்குப்பதிவு.. காவல் நிலையத்தில் பிரதமர் மீது புகார்.. முக்கியச் செய்திகள்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
செஞ்சி அருகே கோர விபத்து: கிணற்றுக்குள் கார் பாய்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பரிதாப உயிரிழப்பு!
செஞ்சி அருகே கோர விபத்து: கிணற்றுக்குள் கார் பாய்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பரிதாப உயிரிழப்பு!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
Embed widget