மேலும் அறிய

மதுரை : ஆண்களை கண்டாலே பிடிக்கல... சட்டக் கல்லூரி மாணவிகள் தற்கொலைக்கு முயன்றது ஏன்?

பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாக இருந்த இவர்கள் அதன்பின் பின் சட்டக்கல்லுாரியில் சேர முடிவு செய்தனர். இவர்களில் ஒருவருக்கு திருச்சியிலும், மற்றொருவருக்கு திருநெல்வேலியிலும் இடம் கிடைத்துள்ளது.

மதுரையில் மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான இருமாணவிகள் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர். பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாக இருந்த இவர்கள் அதன்பின் பின் சட்டக்கல்லுாரியில் சேர முடிவு செய்தனர். இவர்களில் ஒருவருக்கு திருச்சியிலும், மற்றொருவருக்கு திருநெல்வேலியிலும் இடம் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் விடுமுறை நாட்களில் சந்திப்பதையும், செல்போனில் அடிக்கடி பேசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதனிடையே திருநெல்வேலியில் படிக்கும் மாணவிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் விருப்பமில்லாத அம்மாணவி திருச்சியில் படிக்கும் மாணவிக்கு தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். அதன்படி மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள லாட்ஜில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அறை எடுத்து தங்கியுள்ளனர். கல்லூரி அடையாள அட்டையை காட்டினால் எளிதாக அறை தந்து விடுவார்கள் என்ற முடிவில் இவர்கள் இங்கு தங்கியுள்ளனர். 

இந்த இருவரில் ஒரு மாணவி தன்னுடைய சகோதரிக்கு போன் செய்து மதுரையில் உள்ள தகவலை தெரிவித்துள்ளார். இதனிடையே நேற்று காலை அந்த சகோதரி காலை போன் செய்தபோது நீண்ட நேரமாக யாரும் அழைப்பை எடுக்கவில்லை. இதனையடுத்து சம்பந்தப்பட்ட லாட்ஜிற்கு போன் செய்து அப்பெண் விவரம் கூறியுள்ளார்.இதனையடுத்து ஊழியர்கள் அம்மாணவிகள் தங்கியிருந்த அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளனர். 

நீண்ட நேரமாக கதவை யாரும் திறக்காததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்ட போலீசார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஒரு மாணவியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாணவிகள் தங்கியிருந்த அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் இவ்வுலகில் ஆண்களை எங்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களுடன் எல்லாம் எங்களால் சேர்ந்து வாழ முடியாது. திருமணம் என்ற பெயரில் எங்களை பெற்றோர்கள் பிரிக்க நினைக்கிறார்கள். அதனால் தற்கொலை முயற்சியை எடுக்கிறோம். எங்களை ஒரே குழியில் அடக்கம் செய்யுங்கள் என தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அரசு பேருந்தில் திடீரென கழன்று ஓடிய 2 சக்கரங்கள்! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்... சீர்காழியில் திக்..திக்..
அரசு பேருந்தில் திடீரென கழன்று ஓடிய 2 சக்கரங்கள்! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்... சீர்காழியில் திக்..திக்..
Crime News: சாவிக்கொத்து தந்த துப்பு! காதலியை கொன்ற கொடூரன் கைது, அதிர்ச்சி தரும் காரணம்
Crime News: சாவிக்கொத்து தந்த துப்பு! காதலியை கொன்ற கொடூரன் கைது, அதிர்ச்சி தரும் காரணம்
சென்னை ; உதவி ஆய்வாளராக தொடங்கி , 4 கோடி சொத்து குவித்த பெண் ஆய்வாளர் !! அதிரடி விசாரணை
சென்னை ; உதவி ஆய்வாளராக தொடங்கி , 4 கோடி சொத்து குவித்த பெண் ஆய்வாளர் !! அதிரடி விசாரணை
விவசாயிகள் பணத்தில் முறைகேடா? 4 ஆண்டுகளுக்குப் பின் கூடிய கூட்டத்தில் வெடித்த மோதல் - ரூ.77 லட்சம் எங்கே? விவசாயிகள் கொந்தளிப்பு...
விவசாயிகள் பணத்தில் முறைகேடா? 4 ஆண்டுகளுக்குப் பின் கூடிய கூட்டத்தில் வெடித்த மோதல் - ரூ.77 லட்சம் எங்கே? விவசாயிகள் கொந்தளிப்பு...
ABP Premium

வீடியோ

DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்
OPS meets MK Stalin | ஸ்டாலின் - OPS சந்திப்பு! திமுக கூட்டணியில் OPS? சட்டப்பேரவையில் சம்பவம்
DMK Vs Congress | டர்ரு விடும் காங்கிரஸ் ஸ்டாலின் சீக்ரெட் Operation தட்டி தூக்கிய தளபதிகள்
MK Stalin | ”ஸ்டாலின் அல்லது மம்தா” I.N.D.I.A கூட்டணி தலைவர் பதவி! சீனுக்கு வந்த உத்தவ் தாக்கரே
AI Summit 2026 | இந்தியா மானமே போச்சு.. AI மாநாட்டில் சீன ரோபோ! சீட்டிங் செய்த உ.பி UNIVERSITY

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: மக்களே! திமுக ஆட்சியில் சட்டசபை செயல்பாடுகள் எப்படி? முழு டேட்டா உள்ளே!
TN Assembly: மக்களே! திமுக ஆட்சியில் சட்டசபை செயல்பாடுகள் எப்படி? முழு டேட்டா உள்ளே!
Scholarship: இந்த மாணவர்களுக்கு எல்லாம் 100% கட்டணம் தள்ளுபடி! பிட்ஸ் பிலானி அதிரடி அறிவிப்பு!
Scholarship: இந்த மாணவர்களுக்கு எல்லாம் 100% கட்டணம் தள்ளுபடி! பிட்ஸ் பிலானி அதிரடி அறிவிப்பு!
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க; +2 முடித்த மாணவர்களுக்கு ரூ.70 ஆயிரத்தில் வேலை- விவரம்!
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க; +2 முடித்த மாணவர்களுக்கு ரூ.70 ஆயிரத்தில் வேலை- விவரம்!
உள்ளேவா? வெளியேவா? காங்கிரஸ் முடிவுக்காக காத்திருக்கும் கூட்டணி கட்சிகள் - பலே ப்ளானா இருக்கே!
உள்ளேவா? வெளியேவா? காங்கிரஸ் முடிவுக்காக காத்திருக்கும் கூட்டணி கட்சிகள் - பலே ப்ளானா இருக்கே!
வெறும் 18 பேர்தான்! சட்டசபைக்கு லீவு போடாமல் போன எம்.எல்.ஏ.க்கள் - யார்? யார்?
வெறும் 18 பேர்தான்! சட்டசபைக்கு லீவு போடாமல் போன எம்.எல்.ஏ.க்கள் - யார்? யார்?
TN WEATHER ALERT: தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! இடியுடன் கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! இடியுடன் கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
IIT Madras: ஐஐடி சென்னையில் டேட்டா சைன்ஸ் படிப்பு அறிமுகம்; வேலைவாய்ப்பு பிரகாசம்- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி சென்னையில் டேட்டா சைன்ஸ் படிப்பு அறிமுகம்; வேலைவாய்ப்பு பிரகாசம்- விண்ணப்பிப்பது எப்படி?
UGC: எச்சரிக்கை; இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள்; எங்கு முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? யுஜிசி அதிர்ச்சி தகவல்!
UGC: எச்சரிக்கை; இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள்; எங்கு முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? யுஜிசி அதிர்ச்சி தகவல்!
Embed widget