மேலும் அறிய

மதுரை : ஆண்களை கண்டாலே பிடிக்கல... சட்டக் கல்லூரி மாணவிகள் தற்கொலைக்கு முயன்றது ஏன்?

பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாக இருந்த இவர்கள் அதன்பின் பின் சட்டக்கல்லுாரியில் சேர முடிவு செய்தனர். இவர்களில் ஒருவருக்கு திருச்சியிலும், மற்றொருவருக்கு திருநெல்வேலியிலும் இடம் கிடைத்துள்ளது.

மதுரையில் மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான இருமாணவிகள் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர். பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாக இருந்த இவர்கள் அதன்பின் பின் சட்டக்கல்லுாரியில் சேர முடிவு செய்தனர். இவர்களில் ஒருவருக்கு திருச்சியிலும், மற்றொருவருக்கு திருநெல்வேலியிலும் இடம் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் விடுமுறை நாட்களில் சந்திப்பதையும், செல்போனில் அடிக்கடி பேசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதனிடையே திருநெல்வேலியில் படிக்கும் மாணவிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் விருப்பமில்லாத அம்மாணவி திருச்சியில் படிக்கும் மாணவிக்கு தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். அதன்படி மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள லாட்ஜில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அறை எடுத்து தங்கியுள்ளனர். கல்லூரி அடையாள அட்டையை காட்டினால் எளிதாக அறை தந்து விடுவார்கள் என்ற முடிவில் இவர்கள் இங்கு தங்கியுள்ளனர். 

இந்த இருவரில் ஒரு மாணவி தன்னுடைய சகோதரிக்கு போன் செய்து மதுரையில் உள்ள தகவலை தெரிவித்துள்ளார். இதனிடையே நேற்று காலை அந்த சகோதரி காலை போன் செய்தபோது நீண்ட நேரமாக யாரும் அழைப்பை எடுக்கவில்லை. இதனையடுத்து சம்பந்தப்பட்ட லாட்ஜிற்கு போன் செய்து அப்பெண் விவரம் கூறியுள்ளார்.இதனையடுத்து ஊழியர்கள் அம்மாணவிகள் தங்கியிருந்த அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளனர். 

நீண்ட நேரமாக கதவை யாரும் திறக்காததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்ட போலீசார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஒரு மாணவியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாணவிகள் தங்கியிருந்த அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் இவ்வுலகில் ஆண்களை எங்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களுடன் எல்லாம் எங்களால் சேர்ந்து வாழ முடியாது. திருமணம் என்ற பெயரில் எங்களை பெற்றோர்கள் பிரிக்க நினைக்கிறார்கள். அதனால் தற்கொலை முயற்சியை எடுக்கிறோம். எங்களை ஒரே குழியில் அடக்கம் செய்யுங்கள் என தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Embed widget