![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TTF VASAN: தொடரும் சிறைவாசன்! டி.டி.எஃப். வாசனுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்!
வீடியோ கான்பரன்ஸிங் மூலம் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார்.
![TTF VASAN: தொடரும் சிறைவாசன்! டி.டி.எஃப். வாசனுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்! ttf vasan accident extended court custody for 4th time in Kanchipuram accident case TTF VASAN: தொடரும் சிறைவாசன்! டி.டி.எஃப். வாசனுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/afc5ace3ea8a6f10fb12972f705be9911696680380354240_original.avif?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
![TTF VASAN: தொடரும் சிறைவாசன்! டி.டி.எஃப். வாசனுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/21/5369b61d6dadaa82ee4893938f6aa9ca1695281931552113_original.jpg)
டி.டி.எஃப். வாசனுக்கு காவல்:
![TTF VASAN: தொடரும் சிறைவாசன்! டி.டி.எஃப். வாசனுக்கு மீண்டும் நீதிமன்ற காவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/19/94a71322b05431916cb7c8205bd26eeb1695121242293113_original.jpg)
மூன்று முறை ஜாமீன் மனு தள்ளுபடி :
இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த டிடிஎஃப் வாசனை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறைய செய்த டிடிஎப் ஜாமீன் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது .
போக்குவரத்து துறை நடவடிக்கை
ஜாமீன் கோரி பலமுறை தாக்கல் செய்யப்பட்ட வாசனின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 2033 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வரை அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தினகரன் பிறப்பித்த உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் வாசன் மீது உள்ள பல்வேறு வழக்குகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் 8 வழக்குகளும், , கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்கும் இமாச்சல பிரதேசத்தில் ஒரு வழக்கும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)