மேலும் அறிய

Crime: தந்தைக்கும், தங்கைக்கும் கொலை மிரட்டல் விடுத்த மகன்.. தாயைக் கொன்ற வெறி.. நடந்தது என்ன?

Crime: தாய் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்த தந்தை, தங்கைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Crime: தாய் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்த தந்தை, தங்கைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை: வேளச்சேரி பகுதி திரு.வி.க தெருவில் வசித்து வந்தவர் லட்சமி (47). இவருக்கு மகன், மகள் உள்ளனர். மகன் மூர்த்தி என்பவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். கடந்த மாதம் 19ஆம் தேதி அன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார். பின்பு சிறிது நேரம் கழித்து வெளியில் சென்றவர். மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தாய் லட்சுமியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அதற்கு சாப்பாடு தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார். அப்போது மூர்த்தி மீண்டும் சமைத்து தர வேண்டும் என கேட்டுள்ளார். " குடித்துவிட்டு வருவாய் உனக்கு சமைத்து தர வேண்டுமா” என தாய் லட்சுமி கோபத்தில் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாங்குவாதங்கள் ஏற்பட்டது. பின்பு ஆத்திரமடைந்த மூர்த்தி வீட்டில் அரிவாள்மனையை எடுத்து வந்து தாய் லட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் தாய் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மதுபோதையில் தாய் லட்சுமியை வெட்டி கொலை செய்துவிட்டு மூர்த்தி தப்பியோடினார்.

இந்த சம்பவம் தொடர்பாக, வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாயை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த மகன் மூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு அல்லிகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான தந்தை ராமலிங்கம் (57), தங்கை செல்வி (30) ஆகியோர் வழக்கு விசாரணக்கு நேற்று முன்தினம் அல்லிகுளம் நீதிமன்றத்திற்கு சென்றனர். 

இதனை அறிந்த மூர்த்தி, அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, ”எனக்கு எதிராக சாட்சி சொன்னால் உங்களையும் கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அல்லிகுளம் நீதிமன்ற நீதிபதி முகமது பாருக்கிடம் தந்தை ராமலிங்கம் மற்றும் அவரது மகள் செல்வி ஆகியோரும் இதைப் பற்றி கூறினர். பின்பு இதுகுறித்து அல்லிகுளம் நீதிமன்றத்தில் இருந்து வேளச்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து வேளச்சேரி போலீசார் மூர்த்தி மீது கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பின்பு  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்” என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: Crime : ’லவ் பண்ணிதான் ஆகணும்’ : கல்லூரி மாணவியிடம் இளைஞர் தகராறு.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget