மேலும் அறிய

Crime : ’லவ் பண்ணிதான் ஆகணும்’ : கல்லூரி மாணவியிடம் இளைஞர் தகராறு.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை

சென்னையில் பள்ளிப்பருவ காதலை மீண்டும் தொடர வேண்டும் என்றுக்கோரி தனியார் கல்லூரி ஒன்றின் முன்பு மாணவியை கையை பிடித்து இழுத்து தகராறு செய்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் பள்ளிப்பருவ காதலை மீண்டும் தொடர வேண்டும் என்றுக்கோரி தனியார் கல்லூரி ஒன்றின் முன்பு மாணவியை கையை பிடித்து இழுத்து தகராறு செய்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர் பொன்னிமேடு பகுதியை சேர்ந்தவர் 18 வயதான இளம்பெண். இவர், தற்போது தேனாம்பேட்டையில் பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். வழக்கம்போல், நேற்று முன்தினம் அந்த பெண் கல்லூரிக்குள் சென்று மாலை வீடு  வெளியே வந்துள்ளார். அப்போது,  கல்லூரி வளாகத்தின் முன்பு தன்னுடன் பள்ளியில் படித்த 18 வயதான அப்ரிடி என்ற வாலிபர் நின்று இருந்தார்.

அவரை பார்த்ததும் அந்த பெண் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுள்ளார். உடனே அந்த பெண்ணை கையை பிடித்து 'என்னை நீ மீண்டும் காதலிக்க வேண்டும். உன்னை என்னால் மறக்க முடியவில்லை' என்று கூறி கல்லூரியின் முன்பே கையைப்பிடித்து இழுத்து எனக்கு பதில் சொல்லுமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கையை விடு என்று கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன அப்ரிடி அந்த பெண்ணை கடுமையாக எச்சரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் சம்பவம் குறித்து அந்த பெண் தேனாம் பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கொளத்தூர் பொன்னிமேடு பகுதியை சேர்ந்த அப்ரிடியை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்ரிடி கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

கடந்த 2018ம் ஆண்டு இருவரும் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, அப்ரிடி அறிவுறுத்தல்படி அந்த பெண் தனது வீட்டில் இருந்து சில நகைகளை கொண்டு வந்து கொடுத்துள்ளார். வீட்டில் இருந்த நகை மாயமானது குறித்து மகளிடம் அவரது பெற்றோர் விசாரித்த போது, உடன் படிக்கும் மாணவன் அப்ரிடியிடம் நகைகளை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் மாணவன் அப்ரிடி மீது மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி காவலர்கள் இரண்டு குடும்பத்தினரையும் நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து கடிதம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அந்த பெண், அப்ரிடியிடம் பேசமால் இருந்து வந்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அப்ரிடி தற்போது ராயப்பேட்டையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அந்த பெண் கல்லூரிக்கு செல்லும் போது அடிக்கடிபின் தொடர்ந்து தன்னை மீண்டும் காதலிக்க வேண்டும் என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தொந்தரவு செய்துள்ளார்.

அதன்படிதான், நேற்று முன்தினமும் தேனாம்பேட்டையில் ராணி பயிலும் கல்லூரிக்கு நேரில் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். அதைதொடர்ந்து காவல்துறையினர் கல்லூரி மாணவன் அப்ரிடி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget