மேலும் அறிய

ஈரோடு: லாட்டரியால் பணத்தை இழந்த நூல் வியாபாரி தற்கொலை - திமுக கவுன்சிலரின் கணவர் மீது புகார்

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுகவை சேர்ந்த செந்தில் குமார் என்ற லாட்டரி ஏஜன்ட்டிடம் லாட்டரி வாங்கி இதுவரை 62 லட்ச ரூபாயை தான் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். 54 வயதான இவர் நூல் வியாபாரம் செய்து வந்தார். இவர் லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளதால் தனது வருமானத்தின் பெரும்பகுதியை ஒரு நம்பர் லாட்டரி சீட்டில் செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ராதாகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முன்பு ராதாகிருஷ்ணன் தற்கொலைக்கான காரணம் குறித்த வீடியோ பதிவு செய்து வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ளார்.

அதில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுகவை சேர்ந்த செந்தில் குமார் என்ற லாட்டரி ஏஜன்ட்டிடம் லாட்டரி வாங்கி இதுவரை 62 லட்ச ரூபாயை தான் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வேதனையிலும் உயிருடன் இருந்தால் மேலும் அடிமையாகி விடுவேன் என்பதால் தற்கொலை செய்து கொள்வதாகவும், அனைவரும் மன்னித்து விடும்படியும் வீடியோவில் தெரிவித்து இருந்தார். மேலும் இழந்த பணத்திலிருந்து லாட்டரி ஏஜென்டிடம் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக பணத்தை பெற்று தருமாறு தனது கடைசி ஆசை எனக் கூறியிருந்தார். இதனிடையே ராதாகிருஷ்ணன் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ராதாகிருஷ்ணனின் மனைவி மாலதி அளித்த புகாரின் பேரில், ஈரோடு வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருங்கல்பாளையம் லாட்டரி ஏஜென்ட் செந்தில்குமார் திமுகவைச் சேர்ந்தவர் என்பதும், இவரது மனைவி கீதாஞ்சலி ஈரோடு மாநகராட்சி 39 வது வார்டு கவுன்சிலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராதாகிருஷ்ணன் முன்பு தறிப்பட்டறை நடத்தி வந்த நிலையில், அத்தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் நூல் கமிஷன் ஏஜெண்டாக இருந்ததும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் பண நெருக்கடி இருந்து வந்ததும் தெரியவந்தது. தனது வாட்ஸ் ஆப் வீடியோ பதிவில் கூறியது போல 62 இலட்ச ரூபாய் பணத்தை எந்த காலகட்டத்தில், எவ்வாறு இழந்தார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.  மேலும் சாட்சிகளை விசாரணை செய்தும் ஆதாரங்களை சேகரித்தும் அடுத்த கட்ட புலன் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை தடைசெய்யப்பட்ட மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 215 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வலைதளம் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் மேற்கொள்ளப்படும் லாட்டரி விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோடு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞர் !! திருமணம் செய்யக் கோரிய காதலி குளத்தில் மூழ்கடித்துக் கொலை
காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞர் !! திருமணம் செய்யக் கோரிய காதலி குளத்தில் மூழ்கடித்துக் கொலை
AC கேட்ட மனைவி !! வாங்க மறுத்த கணவன் !! காலையில் எழுந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி
AC கேட்ட மனைவி !! வாங்க மறுத்த கணவன் !! காலையில் எழுந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி
பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த கும்பல்: 1 கிலோ தங்கம் சுருட்டல்
பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த கும்பல்: 1 கிலோ தங்கம் சுருட்டல்
" திருநங்கையை கல்யாணம் பண்ணி என்ன பண்ணுவான் " கேலி செய்தவரை சம்பவம் செய்த நபர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Vote Counting : மே 4ஆம் தேதி வாக்குகள் இப்படித்தான் எண்ணப்படும்.! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மே 4ஆம் தேதி வாக்குகள் இப்படித்தான் எண்ணப்படும்.! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Trump Vs Iran: “இங்கு ஒன்று வெடித்தால், அங்கு நான்கு வெடிக்கும்“; ட்ரம்ப்பை மிரளவிட்ட ஈரானின் பதிலடி
“இங்கு ஒன்று வெடித்தால், அங்கு நான்கு வெடிக்கும்“; ட்ரம்ப்பை மிரளவிட்ட ஈரானின் பதிலடி
Summer Tips: கொளுத்தும் வெயிலு! மக்களே செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் இதுதான்!
Summer Tips: கொளுத்தும் வெயிலு! மக்களே செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் இதுதான்!
TVK VIJAY : தேர்தல் ரிசல்ட்டுக்கு முன் விஜய்க்கு வந்த குட்நியூஸ்.! நீதிமன்ற உத்தரவால் தவெகவினர் குஷி
தேர்தல் ரிசல்ட்டுக்கு முன் விஜய்க்கு வந்த குட்நியூஸ்.! நீதிமன்ற உத்தரவால் தவெகவினர் குஷி
Chittoor Thatchur Highway: தச்சூர் டூ சித்தூர் நெடுஞ்சாலை 96KM ரெடி - 90 நிமிடங்களே, திறப்பு எப்போது? கட்டணம் எவ்வளவு?
Chittoor Thatchur Highway: தச்சூர் டூ சித்தூர் நெடுஞ்சாலை 96KM ரெடி - 90 நிமிடங்களே, திறப்பு எப்போது? கட்டணம் எவ்வளவு?
Mahindras Nexon Rival: CNG அவதாரமெடுக்கும் நெக்ஸான் போட்டியாளர் - ப்ரேஸ்ஸா மைலேஜை தாண்டுமா? விலை என்ன?
Mahindras Nexon Rival: CNG அவதாரமெடுக்கும் நெக்ஸான் போட்டியாளர் - ப்ரேஸ்ஸா மைலேஜை தாண்டுமா? விலை என்ன?
என்னா லுக்! இளைஞர்களின் ரதம் Yamaha MT 15 V2! விலை எவ்ளோ? மைலேஜ் எப்படி?
என்னா லுக்! இளைஞர்களின் ரதம் Yamaha MT 15 V2! விலை எவ்ளோ? மைலேஜ் எப்படி?
குஷியில் மாஜி அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம்.! நீதிமன்ற உத்தரவால் திடீர் திருப்பம்
குஷியில் மாஜி அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம்.! நீதிமன்ற உத்தரவால் திடீர் திருப்பம்
Embed widget