வருடத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்த கணவன் !! மனைவியின் திருமணத்தை மீறிய உறவு !! நடந்தது என்ன
பெண்ணின் திருமணத்தை மீறிய உறவால் , நடந்த விபரீதம் - போலீசார் விசாரணை

10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக செல்வம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
திருமணத்திற்கு மீறிய உறவு
பிரியா தனது வீட்டின் பின்புறம் பகுதியில் வசித்து வந்த ராஜா என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தனிமையில் சந்தித்து அவருடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. செல்வம் வெளி நாட்டில் சம்பாதித்து அனுப்பி வைக்கும் பணத்தை, பிரியா தனது காதலனுக்குச் செலவழித்து வந்துள்ளார். பிரியாவிடம் அடிக்கடி ராஜா பணம் வாங்கி உள்ளார்.
இதற்கிடையே சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய செல்வத்திற்கு மனைவியின் தகாத உறவு குறித்து தெரிய வர கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். சம்பாதித்து அனுப்பி வைத்த பணத்தை காதலனுக்குச் செலவழித்து நஷ்டத்தில் இழுத்து விட்டதாக தட்டிக் கேட்டுக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
சடலமாக தூக்கில் தொங்கிய பிரியா
மறுநாள் தூங்கி எழுந்து வந்து பார்த்த போது பிரியா வீட்டில் இல்லை. ஊர் முழுக்க தேடியும் காணவில்லை. அப்போது தான் பிரியா, தனது காதலன் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்தில் ஊர் மக்கள் கூட்டம் கூடியுள்ளனர். அப்போது ராஜா சம்பவ இடத்தில் இல்லை அவர் வெளியே சென்றிருப்பதாகக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, பிரியாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்த போலீசார், காதலன் வீட்டில் அவர் சடலமாக தொங்கியது எப்படி ? அந்நேரம் ராஜா எங்கிருந்தார் ? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர். அருகருகே உள்ள வீடு என்பதால் கணவனையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.























